Just In
- 1 hr ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 4 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 5 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 6 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
லைசென்சும் போச்சு, ஜெயிலுக்கும் போயாச்சு... 43 பேர் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த போலீஸ்! காரணம் என்ன தெரியுமா?
இளைஞர்கள் 43 தங்களின் லைசென்சையும் இழந்து, சிறைத் தண்டனை அனுபவிக்கும் சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
நாளுக்கு நாள் போக்குவரத்து விதிமீறல்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. போக்குவரத்து விதிமீறல்களின் அதிகரித்திருக்கின்ற காரணத்தினால் விபத்துகளின் எண்ணிக்கையும் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன. எனவேதான் மத்திய, மாநில அரசுகள் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்தவகையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் காவல்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் பலர் சிக்கியிருக்கின்றனர். குறிப்பாக, டிரிங்க் அண்ட் டிரைவ் விதிமீறில் ஈடுபட்டதாகக் கூறி 43 இளைஞர்கள் மீது போலீஸார் மிகக் கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்கின்றனர். அவர்களை காவல்துறை சிறையில் அடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுட்டுமின்றி அவர்களின் வாகன ஓட்டுநர் உரிமமும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போக்குவரத்து விதிமீறல்களுக்கு உச்சபட்ச அபராதம் அல்லது ஒரு நாள் தொடங்கி ஒரு வாரம் வரையில் சிறை தண்டனை வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையிலேயே 43 பேர்மீது ஜெயில் தண்டனை மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து ஆகிய நடவடிக்கைகளை ஹைதராபாத் நகர காவல்துறை எடுத்திருக்கின்றது. ஒட்டுமொத்தமாக கடந்த செவ்வாய் இரவு மட்டுமே 139 பேர் வரை டிரிங்க் அண்ட் டிரைவ் விதிமீறலின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகின்றது.
இவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்திருப்பதாகவும், அவர்கள் அனைவரிடத்தில் இருந்தும் ரூ. 7 லட்சம் வரை அபராதமாக வசூல் செய்திருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், பிடிப்பட்டதில் பெரும்பாலானோர் ஷம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.
70க்கும் அதிகமானேர் இப்பகுதியிலேயே டிரிங்க் அண்ட் டிரைவின்கீழ் போலீஸிடத்தில் சிக்கியிருக்கின்றனர். இதையடுத்து ஷாத்நகரில் 29 பேரும், குகட்பள்ளியில் 21 பேரும், மியாபூரில் 19 பேரும் சிக்கியிருக்கின்றனர்.
இவ்வாறு ஒவ்வொரு பகுதியிலும் 10க்கும் அதிகமானோர் சிக்கியிருப்பது தெலங்கானா மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. இவர்களில் பலருடைய ஓட்டுநர் தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கின்றது. நாட்டில் அதிகளவில் சாலை விபத்தும் காரணங்களில் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவதும் ஒன்று.
எனவேதான் விதிகளும், காவலர்களும் இவ்வீதிமீறல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையிலேயே குடி(மது)மகன்களுக்கு எதிராக இந்த கடும் நடவடிக்கையை ஹைதராபாத் போலீஸார் மேற்கொண்டிருக்கின்றனர். போலீஸாரின் அதிரடி நடவடிக்கை விதிமீறல் வாதிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
குறிப்பாக, வரும் காலங்களில் இதுபோன்ற இன்னும் அதிக நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக காவல்துறை அறிவித்திருப்பது விதிமீறல் வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கியிருக்கின்றது.
Image Courtesy: Nx9 News Network
இதுபோன்று போக்குவரத்து விதிமீறல் வாதிகளுக்கு எதிராக போலீஸார் மிகக் கடிமையான நடவடிக்கையை முதல் முறையல்ல. அண்மைக் காலங்களாகவே விதிமீறல்களைக் குறைக்கும் நோக்கில் மிக மிக கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது. அந்தவகையில், வாகன மாடிஃபிகேஷனுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையும் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!