Just In
- 16 min ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 2 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 3 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 3 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- News ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பணியாளர்களின் வயிற்றில் பாலை வார்த்த ஹூண்டாய்!! விடுமுறையும் உண்டு... சம்பளமும் உண்டாம்!
அடுத்த ஐந்து நாட்களுக்கு சென்னை தொழிற்சாலையை மூட ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தொழிலாளர்களால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரவே, தமிழ்நாடு அரசு கடந்த இரு வாரங்களாக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவுகளை மேலும் 1 வாரத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டது.
தற்போது அமலில் இருக்கும் இந்த ஊரடங்கில் தளர்வுகள் எதுவும் கிடையாது. மருந்தகங்கள் தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன. பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வாகனங்களில் வெளியே செல்ல வேண்டி இருப்போர் கட்டாயம் இ-பாஸை வைத்திருக்க வேண்டும். இத்தகைய கட்டுப்பாடுகள் இருப்பினும் ஹூண்டாய் மோட்டார்ஸின் சென்னை தொழிற்சாலை நேற்று (மே 24) வழக்கம்போல் செயல்பட துவங்கியது. முன்னதாக சமீபத்தில் இரு தொழிலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தனர்.
இதனால் கோபமடைந்த தொழிலாளர்கள் தங்களது அசவுகரியங்களை கூறி நேற்று தொழிற்சாலைக்கு உள்ளே போராட்டத்தை நடத்தினர். அவர்களது கோரிக்கையை ஏற்று கொண்ட ஹூண்டாய் நிறுவனம் அடுத்த ஐந்து நாட்களுக்கு தொழிற்சாலையை மூடுவதாக அறிவித்து, தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.
இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தற்போதைக்கு நிலவும் சூழலை கருத்தில் கொண்டு, ஹுண்டாய் நிர்வாகம் அதன் தொழிற்சாலை பணிகளை 5 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த முடிவெடுத்துள்ளது.
மே 25ல் இருந்து துவங்கும் இந்த ஐந்து நாட்கள் விடுமுறை மே 29 வரையிலானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 5 நாட்களுக்கான சம்பளம் தொழிலாளர்களுக்கு எந்தவொரு பிடித்தமும் இன்றி வழங்கப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் பிரபல எஸ்யூவி மாடலாக விற்பனையாகி கொண்டிருக்கும் க்ரெட்டாவின் 7-இருக்கை வெர்சனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டுவர தீவிரமாக பணியாற்றி வந்தது. இதற்கிடையில் தற்போது சென்னை தொழிற்சாலையின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக க்ரெட்டாவின் 7-இருக்கை வெர்சனாக கொண்டுவரப்படும் அல்கஸாரின் தயாரிப்பு பணிகள் துவங்குவதிலும், அதன் அறிமுகத்திலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஹூண்டாயை தொடர்ந்து வேறு சில நிறுவனங்களும் தங்களது தொழிற்சாலைகளை மூட ஆயத்தமாகி வருகின்றன.
சென்னையில் உள்ள ரெனால்ட், நிஸான் நிறுவனங்களின் தொழிற்சாலை நிர்வாகங்கள் ஆலையை மூடவில்லை என்றால் போராட்டத்தை தொடுக்க இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஏனெனில் தொழிற்சாலைக்குள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் சரிப்பட கடைப்பிடிக்கப்படுவதில்லை என அவர்கள் புகார்கள் தெரிவித்துள்ளனர்.
-
சொகுசு வாழ்க்கையில் மிதக்கும் விஜய் பட வில்லன்!! கார்களை விற்றாலே பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்!
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு