இந்தியாவிற்காக தென் கொரியாவில் இருந்து கொரோனா சோதனை கருவிகளை வரவழைக்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ்...
ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் சமூக அக்கறையுடன் கொரோனா வைரஸ் பாதிப்பட்டவர்களை கண்டறிவதற்கான அட்வான்ஸ் சோதனை கருவிகளை தென் கொரியாவில் இருந்து வரவழைக்கவுள்ளது. மிகவும் துல்லியமாக செயல்படக்கூடிய இந்த சோதனை கருவிகள் மூலமாக 25,000க்கும் அதிகமான மக்களுக்கு சேவை செய்ய முடியும்.

ஹூண்டாய் நிறுவனம் ஆர்டர் செய்துள்ள இந்த சோதனை கருவிகள் இந்தியாவிற்கு வந்தபின் மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆலோசனைகளின்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கப்படவுள்ளன.

இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் சிஇஒ எஸ்எஸ் கிம் கூறுகையில், சமூக சேவையில் மற்ற நிறுவனங்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய கடமை ஹூண்டாய் மோட்டார்ஸிற்கு எப்போதுமே உள்ளது.

மனிதநேயத்திற்கான முன்னேற்ற செயல்பாடு என்ற எங்களது உலகளாவிய செயல்பாட்டின் ஒரு பகுதியாக இந்திய அரசாங்கத்துடன் இணைந்து கொரோனா வைரஸிற்கு எதிராக போராடவுள்ளோம். இந்த வகையில் எங்களது பங்களிப்பாக வழங்கப்படவுள்ள அட்வான்ஸ்டு சோதனை கருவிகள் 25,000க்கும் அதிகமான பொதுமக்களுக்கு பயன்படும்.

தற்போது நிலவிவரும் சூழ்நிலையை மிகவும் உற்று கவனித்துவரும் ஹூண்டாய் நிறுவனம் பழைய நிலைமையை மிக விரைவாக அடைய பல அடுக்கு சிஎஸ்ஆர் உடன் இந்திய அரசாங்கத்திற்கு உதவிகரமாக இருக்க தயாராக உள்ளது என கூறினார்.

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் கடந்த வாரத்தில் தான் சென்னையில் உள்ள தொழிற்சாலையை தற்காலிக நிறுத்தியிருந்தது. இருப்பினும் அவசரக

இவற்றுடன் கூடுதலாக 1000 டோர்ஸ்டெப் அட்வாண்டேஜ் பைக்குகள்/அவசரகால ரோடு சர்வீஸ் கார்களை டீலர்கள் வாடிக்கையாளர்களை அவர்களது வீட்டிற்கே சென்று அவசர மற்றும் சிறிய பழுதுகளை பார்க்க அனுப்பி வைக்கவும் உள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை போல் சந்தையில் உள்ள மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. இந்த வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சில பாதுகாப்பு உபகரணங்களை மக்களுக்கு வழங்கவுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை கீழேயுள்ள லிங்கில் காணலாம்.


Click it and Unblock the Notifications








