Just In
- 3 min ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- 1 hr ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 2 hrs ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- 2 hrs ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
Don't Miss!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதிங்க!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Movies லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டிரெயின் 19... படுக்கை வசதியுடன் உருவாகும் இந்தியாவின் அதிவேக ரயில்!
சென்னையில் உள்ள ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட டிரெயின் 18 அதிவேக ரயில் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் அதிவேக ரயில் என்ற பெருமையை பெற்றிருக்கும் டிரெயின் 18 ரயில் சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 180 கிமீ வேகத்தை தொட்டு அசத்தியது.
தற்போது டெல்லி- வாரணாசி இடையில் இயக்கப்படும் இந்த ரயில் வணிக ரீதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக குறிப்பிட்ட பகுதிகளில் மணிக்கு 160 கிமீ வேகம் வரை இயக்கப்படுகிறது. இரு நகரங்களுக்கும் இடையிலான 758 கிமீ தூரத்தை 8 மணிநேரத்தில் கடக்கிறது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வெறும் 18 மாதங்களில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு தயார் நிலைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த ரயில் ரூ.100 கோடி மதிப்பில் தயாரிக்கப்படுகிறது. இந்த ரயிலில் இரண்டு வகுப்பு கட்டணத்துடன் இருக்கைகள் கொண்டுள்ளது.
இந்த நிலையில், டிரெயின் 18 ரயிலின் அடிப்படையில் புதிய டிரெயின் 19 என்ற குறியீட்டுப் பெயரில் புதிய ரயில் தயாரிக்கப்பட இருக்கிறது. இது படுக்கை வசதி கொண்டதாக வடிவமைக்கப்பட இருக்கிறது. இதனை, ரயில்வே துறை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
படுக்கை வசதியுடன் கூடிய டிரெயின் 19 ரயில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மாற்றாக, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. டிரெயின் 19 ரயிலிலும் ரயில் பெட்டியிலேயே கேபின் மற்றும் ரயில் பெட்டிகளிலேயே மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருக்கும். அதாவது, தனி எஞ்சின் தேவைப்படாது.
இதனால், மிக விரைவான பிக்கப்பையும், பிற ரயில்களை விட துரிதமாகவும், குறைந்த தூரத்தில் நிறுத்துவதற்கான வாய்ப்பையும் இந்த ரயில் வழங்கும். இதனால், தனி எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில்களைவிட இந்த ரயிலின் பயண நேரம் 15 சதவீதம் வரை குறையும்.
தனி மின்சார எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த ரயில் மின் சேமிப்பிலும் சிறப்பானதாக இருக்கும். மேலும், நவீன தொழில்நுட்ப வசதிகளும், அதிக பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டிருக்கும். இந்த ரயிலில் சவுகரியமான படுக்கைகள், சிசிடிவி கேமரா, தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகளை பெற்றிருக்கும்.
ராஜ்தானி ரயில்களின் சவுகரியத்தை இந்த ரயில்கள் ஒருபடி மேலே கொண்டு செல்லும் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட இருக்கிறது. டிரெயின்- 18 ரயில் போன்றே, டிரெயின் 19 ரயில் மூலமாக பயண நேரம் வெகுவாக குறையும் வாய்ப்பு இருக்கிறது.