இஸ்ரோவின் ஜி-சாட் 7ஏ செயற்கைகோளால் நறநறப்பில் சீனா, பாகிஸ்தான் நாடுகள்... ஏன் தெரியுமா?

இஸ்ரோ உருவாக்கிய ஜி-சாட்-7ஏ என்ற ராணுவ தகவல் தொடர்புக்கான செயற்கைகோள் ஜிஎஸ்எல்வி- எஃப்11 ராக்கெட் மூலமாக இன்று விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த செயற்கைகோள் மூலமாக இந்திய விமானப்படையின்

இஸ்ரோ உருவாக்கிய ஜி-சாட்-7ஏ என்ற ராணுவ தகவல் தொடர்புக்கான செயற்கைகோள் ஜிஎஸ்எல்வி- எஃப்11 ராக்கெட் மூலமாக இன்று விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த செயற்கைகோள் மூலமாக இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையின் பலம் உயரும் என்பதுடன் அண்டை நாடுகள் இந்திய விமானப்படை நகர்வுகளை கண்காணிக்க முடியாத நிலையை கொடுக்கும். இதன் சிறப்புகளை காணலாம்.

இஸ்ரோவின் ஜி-சாட் 7ஏ செயற்கைகோளால் நறநறப்பில் சீனா, பாகிஸ்தான் நாடுகள்... ஏன் தெரியுமா?

ஜிஎஸ்எல்வி ஜிசாட் 7ஏ ராக்கெட் மூலமாக குறிப்பிட்ட புவி சுற்று வட்டப்பாதையில் இந்த செயற்கைகோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கோளில் இருக்கும் ஆன்போர்டு புரொபல்ஷன் சிஸ்டம் மூலமாக, அடுத்த சில நாட்களில் சரியான சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.

இஸ்ரோவின் ஜி-சாட் 7ஏ செயற்கைகோளால் நறநறப்பில் சீனா, பாகிஸ்தான் நாடுகள்... ஏன் தெரியுமா?

இந்த செயற்கைகோள் செயல்பட துவங்கும்போது இந்திய விமானப்படைக்கான பிரத்யேக தகவல் தொடர்பு கட்டமைப்பை பெற முடியும். அதாவது, நாட்டில் உள்ள அனைத்து விமானப்படை தளங்களையும் ஒருங்கிணைக்க முடியும்.

இஸ்ரோவின் ஜி-சாட் 7ஏ செயற்கைகோளால் நறநறப்பில் சீனா, பாகிஸ்தான் நாடுகள்... ஏன் தெரியுமா?

மேலும், இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள், தளவாட விமானங்களை கட்டுப்பாட்டு அறையுடன் ஒருங்கிணைப்பதற்கு இந்த செயற்கைகோள் துணை நிற்கும். இதுவரை அமெரிக்காவின் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வந்ததால், இந்திய விமானப்படை விமானங்களின் நகர்வை இடைமறித்து கண்காணிக்க முடியும்.

இஸ்ரோவின் ஜி-சாட் 7ஏ செயற்கைகோளால் நறநறப்பில் சீனா, பாகிஸ்தான் நாடுகள்... ஏன் தெரியுமா?

ஆனால், நமது சொந்த செயற்கைகோள் கட்டுப்பாட்டின் மூலமாக இனி இந்திய விமானப்படை விமானங்கள் செல்வதால் எளிதாக இடைமறித்து கண்காணிக்க முடியாது. குறிப்பாக, போர் காலங்களில் நமது நாட்டு போர் விமானங்கள் எந்த திசையில், எவ்வளவு வேகத்தில் செல்கின்றன என்பது குறித்த தகவல்களை வெளிநாடுகள் கண்காணிக்கும் வாய்ப்பு இருக்காது.

இஸ்ரோவின் ஜி-சாட் 7ஏ செயற்கைகோளால் நறநறப்பில் சீனா, பாகிஸ்தான் நாடுகள்... ஏன் தெரியுமா?

மேலும், இந்திய விமானப் படை கட்டுப்பாட்டு அறையிலிருந்து நமது போர் விமானங்களை இயக்கும் விமானிகளுடன் எளிதாக தொடர்பு கொண்டு பேச இயலும். அத்துடன், அது செல்லும் பாதை மற்றும் இருப்பிடத்தையும் துல்லியமாக கண்காணித்து வழிநடத்த முடியும்.

இஸ்ரோவின் ஜி-சாட் 7ஏ செயற்கைகோளால் நறநறப்பில் சீனா, பாகிஸ்தான் நாடுகள்... ஏன் தெரியுமா?

இந்திய விமானப்படை தவிர்த்து, எல்லைப்பகுதிகளில் ராணுவத்திற்கான தகவல் பரிமாற்ற சேவையயும் இந்த செயற்கைகோள் வழங்க இருக்கிறது. இதன்மூலமாக, எல்லையில் ராணுவத்தின் நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேம்படும்.

இஸ்ரோவின் ஜி-சாட் 7ஏ செயற்கைகோளால் நறநறப்பில் சீனா, பாகிஸ்தான் நாடுகள்... ஏன் தெரியுமா?

எல்லைப்பகுதிகளில் அவசர காலங்களில் ராணுவ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விரைவாக உதவியை ராணுவத்தினர் பெறுவதற்கும் இந்த செயற்கைகோள் முழு உதவியாக இருக்கும். இதனால், இந்திய ராணுவத்தின் நகர்வுகள், நடவடிக்கைகளை வெளிநாடுகள் கண்காணிப்பதை தவிர்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இஸ்ரோவின் ஜி-சாட் 7ஏ செயற்கைகோளால் நறநறப்பில் சீனா, பாகிஸ்தான் நாடுகள்... ஏன் தெரியுமா?

வெளிநாட்டு விமானங்கள் அத்துமீறி நுழைவதையும், எதிரிநாட்டு போர் விமானங்கள் மற்றும் உளவு விமானங்கள் ஊடுருவுவதையும் கண்டுபிடித்து, எளிதாக தகவல் பரிமாற்றம் செய்யவும் இந்த செயற்கைகோள் உறுதுணையாக இருக்கும்.

இஸ்ரோவின் ஜி-சாட் 7ஏ செயற்கைகோளால் நறநறப்பில் சீனா, பாகிஸ்தான் நாடுகள்... ஏன் தெரியுமா?

வானில் பறந்துகொண்டிருக்கும் இந்திய விமானப்படை விமானங்கள் ஒன்றையொன்று தொடர்பு கொள்வதற்கும் இந்த செயற்கைகோள் உதவியாக இருக்கும். அதேபோன்று, வானிலேயே எரிபொருள் நிரப்புவதற்கு மற்றொரு விமானத்திற்கு சமிக்ஞைகளை அனுப்பவும், விமானிகள் நேரடியாக தொடர்பு கொண்டு பேசுவதற்கும் வாய்ப்பை தரும்.

இஸ்ரோவின் ஜி-சாட் 7ஏ செயற்கைகோளால் நறநறப்பில் சீனா, பாகிஸ்தான் நாடுகள்... ஏன் தெரியுமா?

இந்த செயற்கைகோள் மூலமாக பெறப்போகும் மற்றொரு முக்கியமான பயன், ஆளில்லா ராணுவ விமானங்களை துல்லியமாக இயக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும். கண்காணிப்பு பணிகளையும், தகவல் பரிமாற்றத்தையும் துல்லிலயமாக செய்ய உதவும்.

இஸ்ரோவின் ஜி-சாட் 7ஏ செயற்கைகோளால் நறநறப்பில் சீனா, பாகிஸ்தான் நாடுகள்... ஏன் தெரியுமா?

மேலும்,நீண்ட தூரத்திலிருந்து இலக்குகளை குறிதவறாமல் ஆளில்லா விமானங்கள் மூலமாக தாக்குதல் நடத்துவதற்கும் இந்த செயற்கைகோள் உதவியாக இருக்கும்.

இஸ்ரோவின் ஜி-சாட் 7ஏ செயற்கைகோளால் நறநறப்பில் சீனா, பாகிஸ்தான் நாடுகள்... ஏன் தெரியுமா?

இந்த செயற்கைகோளில் டிரான்ஸ்ஃபான்டர்கள் க்யூ பேண்ட் எனப்படும் அலைவரிசையில் தகவல் பரிமாற்றத்தை வழங்கும் என்பதால், சிறிய ஆன்டென்னா மூலமாகவே எல்லைப்பகுதிகளில் பணிபுரியும் ராணுவத்தினர் மற்றும் தொலைதூர விமானப்படை தளங்களில் தகவல்களை எளிதாக பரிமாறிக்கொள்ள முடியும்.

இஸ்ரோவின் ஜி-சாட் 7ஏ செயற்கைகோளால் நறநறப்பில் சீனா, பாகிஸ்தான் நாடுகள்... ஏன் தெரியுமா?

மழை உள்ளிட்ட மோசமான சீதோஷ்ண நிலைகளில் கூட துல்லியமான தகவல்பரிமாற்றத்தை இந்த க்யூ பேண்ட் அலைவரிசை வழங்கும். எனவே, அனைத்து காலநிலைகளிலும் ராணுவத்தினர் சிறப்பான தகவல் தொடர்பு வசதியை பெற முடியும்.

இஸ்ரோவின் ஜி-சாட் 7ஏ செயற்கைகோளால் நறநறப்பில் சீனா, பாகிஸ்தான் நாடுகள்... ஏன் தெரியுமா?

கடந்த 2013ம் ஆண்டு ஜி-சாட் 7 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோள் இந்திய கடற்படைக்காக அர்பணிக்கப்பட்டது. இதன்மூலமாக 2,000 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு இந்திய கடற்படை கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்கும், போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை நிகழ்நேர தகவல் பரிமாற்றம் மூலமாக ஒருங்கிணைக்கவும் பயன்பட்டு வருகிறது.

இஸ்ரோவின் ஜி-சாட் 7ஏ செயற்கைகோளால் நறநறப்பில் சீனா, பாகிஸ்தான் நாடுகள்... ஏன் தெரியுமா?

இந்த நிலையில், அதன் வரிசையில் ஜிசாட் 7ஏ செயற்கைகோள் இப்போது இந்திய விமானப்படைக்கும், எல்லையோர ராணுவத்தினருக்கும் பயன்படும் வகையில் செலுத்தப்பட்டு இருக்கிறது. இது நிச்சயம் இந்திய விமானப்படையின் பலத்தை அதிகப்படுத்தும். இந்த சாதனை மட்டுமல்ல, அடுத்து ஒரு மாபெரும் சாதனையை தமிழர் தலைமையில் நிகழ்த்துவதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

உலக வல்லரசுகளுக்கு போட்டியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா.. ஒரு தமிழரால் சாத்தியமாகிறது

ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு பிறகு, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய 4வது நாடு என்ற பெருமையை இந்தியா வெகு விரைவில் பெறவுள்ளது. ஏனெனில் 3 இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணிகளில், இஸ்ரோ முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலக வல்லரசுகளுக்கு போட்டியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா.. ஒரு தமிழரால் சாத்தியமாகிறது

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ஆய்வுகளை, உலகின் பல்வேறு நாடுகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இன்றைய தேதி வரை, ரஷ்யா (சோவியத் யூனியன்), அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன.

உலக வல்லரசுகளுக்கு போட்டியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா.. ஒரு தமிழரால் சாத்தியமாகிறது

விண்வெளி ஆராய்ச்சியில் வெகு வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவும் கூட, இன்னமும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியது கிடையாது. ஆனால் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது தொடர்பான ஆராய்ச்சிகளை, கடந்த 2004ம் ஆண்டு முதலே இந்தியா செய்து கொண்டுதான் இருக்கிறது.

உலக வல்லரசுகளுக்கு போட்டியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா.. ஒரு தமிழரால் சாத்தியமாகிறது

எனினும் முதன்மை பட்டியலில் இடம்பெறாத காரணத்தால், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ஆராய்ச்சியில் சற்றே தொய்வு ஏற்பட்டது. ஆனாலும் திட்டம் கைவிடப்படாமல் தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பலனாக தற்போது இந்த திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

உலக வல்லரசுகளுக்கு போட்டியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா.. ஒரு தமிழரால் சாத்தியமாகிறது

நாட்டின் சுதந்திர தினம் கடந்த 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ''2022ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அல்லது அதற்கு முன்பாக இந்தியா, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும். அங்கு நம் மக்கள் மூவர்ண கொடியை பறக்க விடுவார்கள்'' என உறுதியளித்தார்.

உலக வல்லரசுகளுக்கு போட்டியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா.. ஒரு தமிழரால் சாத்தியமாகிறது

இதற்கான பணிகளை இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ (ISRO-Indian Space Research Organisation) தற்போது முடுக்கி விட்டுள்ளது. எனவே 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 15க்கு முன்னதாகவே, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக வல்லரசுகளுக்கு போட்டியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா.. ஒரு தமிழரால் சாத்தியமாகிறது

இஸ்ரோ அமைப்பானது, 'ககன்யான்' (Gaganyaan) என்ற விண்கலம் மூலம்தான், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. 'ஜிஎஸ்எல்வி மார்க் III' (GSLV Mark III) என்ற ராக்கெட்தான் 'ககன்யான்' விண்கலத்தை சுமந்து கொண்டு விண்வெளிக்கு பயணம் மேற்கொள்கிறது.

உலக வல்லரசுகளுக்கு போட்டியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா.. ஒரு தமிழரால் சாத்தியமாகிறது

'ஜிஎஸ்எல்வி மார்க் III' ராக்கெட்டை இஸ்ரோ ஏற்கனவே தயாரித்து விட்டது. இதுவரை இரண்டு முறை 'ஜிஎஸ்எல்வி மார்க் III' ராக்கெட் லான்ச் (Launch) செய்யப்பட்டுள்ளது. அந்த இரண்டு முறையும் இஸ்ரோவிற்கு வெற்றியே கிடைத்துள்ளது. ஒரு முறை கூட தோல்வியடையவில்லை.

உலக வல்லரசுகளுக்கு போட்டியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா.. ஒரு தமிழரால் சாத்தியமாகிறது

ராக்கெட் தயாராக உள்ள நிலையில், 'ககன்யான்' விண்கலத்தை உருவாக்கும் பணிகள்தான், விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கடுமையான சிரமங்களுக்கு மத்தியிலும், 'ககன்யான்' விண்கலத்தை தயாரிக்கும் பணிக்காக, இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களை அர்ப்பணித்து கொண்டுள்ளனர்.

உலக வல்லரசுகளுக்கு போட்டியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா.. ஒரு தமிழரால் சாத்தியமாகிறது

அடுத்த 30 மாதங்களில், அதாவது 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள்ளாக, 'ககன்யான்' விண்கலத்தை ஆளில்லாமல் ஏவி சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களில், அதாவது 36வது மாதத்தில் மீண்டும் ஒரு முறை, ஆள் இல்லாமலேயே 'ககன்யான்' விண்கலம் ஏவப்படும்.

உலக வல்லரசுகளுக்கு போட்டியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா.. ஒரு தமிழரால் சாத்தியமாகிறது

இறுதியாக 40வது மாதத்தில், 3 இந்தியர்கள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இதன்மூலம் சர்வதேச அளவில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு பிறகு, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறவுள்ளது.

உலக வல்லரசுகளுக்கு போட்டியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா.. ஒரு தமிழரால் சாத்தியமாகிறது

'ககன்யான்' விண்கலமானது விண்வெளியில், 5 முதல் 7 நாட்கள் ஆய்வு பணியில் ஈடுபடும். பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து 300 முதல் 400 கிலோ மீட்டர்கள் தொலைவில், 'ககன்யான்' விண்கலம் நிலை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக வல்லரசுகளுக்கு போட்டியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா.. ஒரு தமிழரால் சாத்தியமாகிறது

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமானது, ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் மற்ற நாடுகளை காட்டிலும் மிக குறைவான செலவில்தான், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ஆராய்ச்சிகளை, இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. அதுதானே இஸ்ரோ ஸ்பெஷல்!!

உலக வல்லரசுகளுக்கு போட்டியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா.. ஒரு தமிழரால் சாத்தியமாகிறது

'ஜிஎஸ்எல்வி மார்க் III' ராக்கெட்டானது, ஏவப்பட்டதில் இருந்து வெறும் 16 நிமிடங்களில் விண்வெளியை சென்றடையும். இதில், பயணம் செய்யவுள்ள 3 இந்தியர்களை, இஸ்ரோ மற்றும் இந்திய விமானப்படை ஆகியவை இணைந்து தேர்வு செய்யவுள்ளன.

உலக வல்லரசுகளுக்கு போட்டியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா.. ஒரு தமிழரால் சாத்தியமாகிறது

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், ''விண்வெளிக்கு செல்லவுள்ள 3 நபர்களுக்கு கடுமையான பயிற்சி அளிக்கப்படும். 'ககன்யான்' திட்டம் மூலம் இந்தியாவின் விஞ்ஞானம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் வளர்ச்சி அடையும். வேலைவாய்ப்புகளும் பெருகும்'' என்றார். இஸ்ரோ தலைவர் சிவன் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக வல்லரசுகளுக்கு போட்டியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா.. ஒரு தமிழரால் சாத்தியமாகிறது

விண்வெளிக்கு பயணிப்பதற்காக தேர்வாகும் 3 இந்தியர்களுக்கு, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதுதவிர ராகேஸ் சர்மாவுடனும், இஸ்ரோ அமைப்பு தொடர்பில் உள்ளது. ராகேஸ் சர்மாதான் விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர்.

உலக வல்லரசுகளுக்கு போட்டியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா.. ஒரு தமிழரால் சாத்தியமாகிறது

கடந்த 1984ம் ஆண்டு, ரஷ்யா அனுப்பிய சோயூஸ் டி-11 (Soyuz T-11) விண்கலம் மூலம் ராகேஸ் சர்மா விண்வெளிக்கு சென்றார். அவர் விண்வெளியில் 8 நாட்கள் தங்கியிருந்தார். எனவே அவருடனான தொடர்பு, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக வல்லரசுகளுக்கு போட்டியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா.. ஒரு தமிழரால் சாத்தியமாகிறது

விண்வெளிக்கு பயணம் செய்யவுள்ள 3 இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டிருந்தாலும், விண்கலம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயேதான் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.

உலக வல்லரசுகளுக்கு போட்டியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா.. ஒரு தமிழரால் சாத்தியமாகிறது

விண்வெளிக்கு பயணம் செல்பவர்கள், விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்ப 36 நிமிடங்கள் ஆகும். குஜராத் மாநிலத்தில் உள்ள அரபிக்கடலில் அவர்கள் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒருவேளை ஏதேனும் பிரச்னை என்றால், மாற்று ஏற்பாடாக வங்காள விரிகுடாவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

உலக வல்லரசுகளுக்கு போட்டியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா.. ஒரு தமிழரால் சாத்தியமாகிறது

ஒரு சில நாடுகள் சோதனை முயற்சியாக விலங்குகளையும், ரோபட்களையும் விண்வெளிக்கு அனுப்பி வைத்து வருகின்றன. ஆனால் இந்தியா தனது முதல் முயற்சியில் நிச்சயமாக விலங்குகளையும், ரோபட்களையும் அனுப்பாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக வல்லரசுகளுக்கு போட்டியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா.. ஒரு தமிழரால் சாத்தியமாகிறது

ஏனெனில் மனிதர்களை அனுப்புவதன் மூலமாக மட்டுமே ஏராளமான பலன்கள் கிடைக்கும் என இந்தியா கருதுகிறது. எனவே கூடிய விரைவில் 'ககன்யான்' விண்கலம், மனிதர்களுடன் விண்வெளிக்கு பயணிக்கும் என உறுதியாக நம்பலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Important Things About GSat 7A Satelite. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X