Just In
- 6 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 6 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 8 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 9 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்தியாவின் பாதுகாப்புக்காக 'ஆகாய கண்' செயற்கைகோளை அனுப்பும் இஸ்ரோ!
நாட்டின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக இஸ்ரோ தயாரித்துள்ள புதிய செயற்கைகோள் வரும் 22ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இந்த புதிய செயற்கைகோளின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.
நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவதில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் முக்கிய பங்காற்றி வருகிறது. பாதுகாப்புத் துறைக்கு தேவையான தொழில்நுட்ப கட்டமைப்புகளில் இஸ்ரோவின் பங்கு அளப்பரயதாக இருந்து வருகிறது.
அந்த வகையில், நாட்டின் எல்லைகளை துல்லியமாக கண்காணிப்பதற்கான புதிய செயற்கைகோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. ரிசாட்-2பிஆர்1 என்ற பெயரில் இந்த புதிய செயற்கைகோள், வரும் 22ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-46 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட இருக்கிறது.
இந்த புதிய செயற்கைகோள் ராணுவத்திற்கு பக்கபலமாக இருக்கும். ஆகாயத்தில் இருந்தபடியே இந்தியாவின் எல்லைப்பகுதிகளை துல்லியமாக கண்காணிக்கும் என்பதால், இதனை 'ஆகாய கண்' செயற்கைகோள் என்று குறிப்பிடுகின்றனர்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் அனைத்து எல்லைப்பகுதிகளையும் இந்த செயற்கைகோள் மிக துல்லியமாக கண்காணித்து தகவல்களை அளிக்கும். மேலும், இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் எதிரி கப்பல்களின் நடமாட்டம், போர் விமானங்களின் ஊடுருவல் என எதிரிகளின் நடமாட்டத்தை துல்லியமாக கணித்து கூறும்.
இதுவரை ஏவப்பட்ட இதே ரக செயற்கைகோள்களை விட இது தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை பெற்றிருக்கிறது. இதில் இடம்பெற்றிருக்கும் ரிசாட் எக்ஸ்- பேண்ட் சிந்தெட்டிக் அபர்ச்சர் ரேடார் கருவி மூலமாக அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் பூமியை துல்லியமாக படம் பிடிக்க முடியும்.
மேகக்கூட்டங்கள் இருந்தாலும் மிக துல்லியமாக பூமியை படம் பிடித்து தருவதுடன் பொருட்களை மிக அருகாமையில் படம் பிடிக்கும் வசதியையும் அளிக்கும். இதுதவிர, காலநிலை குறித்த ஆய்வுத் தரவுகளையும் இந்த செயற்கைகோள் வழங்கும்.
பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகளின் நடமாட்டம் மற்றும் ஊடுருவலை கண்காணிக்கவும் இந்த செயற்கைகோளை பாதுகாப்புப் படையினர் பயன்படுத்த இருக்கின்றனர். அனைத்து சீதோஷ்ண நிலையிலும் தீவிரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்க இந்த செயற்கைகோள் உதவும்.
கடற்கொள்ளையர்களிடம் சிக்கும் கப்பல்களை கண்காணிக்கவும், சீனா மற்றும் பாகிஸ்தான் கடற்படை கப்பல்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் இந்த செயற்கைகோள் உதவும். மேலும், சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற ராணுவ நடவடிக்கைகளின்போது இந்த செயற்கைகோள் முக்கிய பங்கு வகிக்கும்.
ஏற்கனவே விண்ணில் செலுத்தப்பட்ட ஆகாய கண் செயற்கைகோளைவிட இதன் ரேடார் உயர் துல்லிய படங்களை வேறுபட்ட தொழில்நுட்ப முறையில் வழங்கும். இதனால், நாட்டின் பாதுகாப்பு மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!