Just In
- 21 min ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- 1 hr ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 1 hr ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- 2 hrs ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
Don't Miss!
- Movies பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அரபு நாடுகளுக்கு செக் வைத்த மோடி அரசு... பெட்ரோல், டீசல் விவகாரத்தில் அதிரடி... ரொம்ப சந்தோஷமான விஷயம்
பெட்ரோல், டீசல் விவகாரத்தில் ஒன்றிய அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பெட்ரோல் உடன் 20 சதவீதம் எத்தனால் கலக்க வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கான காலக்கெடுவை ஒன்றிய அரசு தற்போது 2 ஆண்டுகள் விரைவுபடுத்தியுள்ளது. இதன்படி 2023ம் ஆண்டே பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட வேண்டும் என ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கச்சா எண்ணெய்க்காக வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டிய நிலை குறையும்.
பெட்ரோல், டீசலுடன் 10 சதவீதம் எத்தனால் கலக்கப்பட வேண்டும் என்ற இலக்கை 2022ம் ஆண்டிற்குள் எட்ட வேண்டும் என கடந்த 2020ம் ஆண்டு இலக்கு வைக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் 2030ம் ஆண்டிற்குள் 20 சதவீத எத்தனால் கலக்கப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. எனினும் இந்த இலக்கை எட்டுவதற்கான காலக்கெடுவில் மாற்றம் செய்யப்பட்டது.
இதன்படி எரிபொருளுடன் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கான இலக்கை 2030ம் ஆண்டில் இருந்து 2025ம் ஆண்டிற்கு ஒன்றிய அரசு விரைவுபடுத்தியது. அதாவது 2025ம் ஆண்டிற்குள் எரிபொருளுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட வேண்டும். இதற்கான முடிவு நடப்பாண்டுதான் எடுக்கப்பட்டது. தற்போது இந்த காலக்கெடுவையும் ஒன்றிய அரசு 2 ஆண்டுகள் விரைவுபடுத்தியுள்ளது.
இதன்படி 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் எரிபொருளுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட வேண்டும். உலகிலேயே கச்சா எண்ணெய்யை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதம் இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது.
இதற்காக வெளிநாடுகளை இந்தியா அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. மேலும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக அதிக தொகையை செலவிட வேண்டியுள்ளதால், இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆனால் எத்தனால் கலக்கும் திட்டத்தின் மூலம் கச்சா எண்ணெய்க்காக இந்தியா வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு எத்தனால் வினியோக ஆண்டு கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதை பயன்படுத்தி கொண்டு பெட்ரோல் உடன் 10 சதவீத எத்தனாலை கலப்பதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது. 10 சதவீதம் கலப்பு என்ற இலக்கை அடைவதற்கு, 4 பில்லியன் லிட்டர் எத்தனால் தேவை. அதே நேரத்தில் 2023ம் ஆண்டிற்குள் 20 சதவீதம் என்ற இலக்கை அடைய 10 பில்லியன் (1,000 கோடி) லிட்டர்கள் தேவைப்படும்.
எத்தனால் கலந்த எரிபொருளை வாகனங்களுக்கு பயன்படுத்துவதில் பிரேசில் உலகிற்கே முன்னோடியாக திகழ்கிறது. இந்தியாவிலும் தற்போது எரிபொருளுடன் எத்தனால் கலக்கும் பணிகளை மத்திய அரசு விரைவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் விவசாயிகளுக்கும் பல்வேறு விதங்களில் நன்மை ஏற்படும்.
ஏனெனில் கரும்பு, தானியம் போன்றவற்றில் இருந்துதான் எத்தனால் தயாரிக்கப்படுகிறது. மேலும் எத்தனால் எரிபொருள் சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயப்பதாக இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியாவின் காற்று மாசுபாடு பிரச்னைக்கும் ஓரளவு தீர்வு காணப்படும். ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!
-
40அடி நீள சொகுசு படகை வாங்கினாரா நடிகர் மாதவன்! ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டாரு!
-
இந்த விலைக்கு இப்படி ஒரு ஹூண்டாய் காரா! எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே ஷோரூமுக்கு வண்டிய எடுத்துருவீங்க!