Just In
- 14 min ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- 2 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 3 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 4 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
Don't Miss!
- News நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க! வாக்கு சதவீதத்தில் பெரும் குளறுபடி! விஐபி தொகுதிகளில் இத்தனை மாற்றமா?
- Movies 'ஆவேசம்' திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள்.. அப்படி என்ன ஆச்சு?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
குடிபோதையில் வண்டி ஓட்டினாலும், போலீஸிடம் இருந்து தப்பிக்க செம ஐடியா... சொன்னது ஐபிஎஸ் அதிகாரி!!
குடிபோதையில் வாகனம் ஓட்டினாலும், போலீஸிடம் இருந்து தப்பிக்க ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் செம ஐடியா கொடுத்துள்ளார். ஆனால் அது எதற்காக? என்பதுதான் ஹைலைட்டே.
உலகிலேயே சாலை விபத்துக்களால் அதிக உயிர்களை பறிகொடுத்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் சாலை பாதுகாப்பு மிக மோசமான நிலையில் இருப்பதால், ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே இதற்கு முக்கியமான காரணம்.
மொபைல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், அதிவேகத்தில் வாகனங்களை இயக்குதல், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்தல் என போக்குவரத்து விதிமுறைகளை இந்திய வாகன ஓட்டிகள் சகட்டு மேனிக்கு மீறி வருகின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்தியர்கள் செய்யும் மற்றொரு பொதுவான தவறு குடிபோதையில் வாகனங்களை இயக்குவதுதான். இந்த தவறு காரணமாகவே ஏராளமான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. எனவே மது அருந்தி விட்டு வாகனங்களை இயக்க கூடாது என வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் அபராத தொகையும் விதிக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், குடிபோதையில் வாகனங்களை இயக்கினாலும், போலீசார் விதிக்கும் அபராதங்களில் இருந்து தப்பிக்க, ஐபிஎஸ் அதிகாரி ஒருவரே வாகன ஓட்டிகளுக்கு ஐடியா கொடுத்துள்ளார்!!! அவசரப்பட்டு அவரை தவறாக நினைத்து விட வேண்டாம். வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே அவர் இதனை செய்துள்ளார்.
ஒட்டுமொத்த உலகையே தற்போது கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது சுமார் 120 நாடுகளை தாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் சுமார் 4 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 1.20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பீதி இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. கேரளா, கர்நாடகா உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில், தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் கொரோனா வைரஸை வைத்துதான், மது அருந்தி விட்டு வாகனங்களை இயக்க கூடாது என்ற விழிப்புணர்வு, பங்கஜ் நெயின் என்ற ஐபிஎஸ் அதிகாரி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். அவரது டிவிட்டர் பக்கத்தில், நேற்று (மார்ச் 11) டிவிட் ஒன்று செய்யப்பட்டிருந்தது. இதில், ''இந்த வழியை பின்பற்றினால், உங்களால் ப்ரீத் அனலைசர் டெஸ்ட்டையும், அபராதத்தையும் தவிர்க்க முடியும்.
ஆனால் விபத்தை தவிர்க்க முடியாது. எனவே குடிபோதையில் வாகனம் ஓட்ட வேண்டாம். இது உங்களுக்கும், மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்'' என கூறப்பட்டுள்ளது. இதனுடன் ப்ரீத் அனலைசர் டெஸ்ட்டில் இருந்து தப்புவதற்காக, எனக்கு கொரோனா வைரஸ் உள்ளது என காரில் ஒருவர் எழுதி ஒட்டியிருப்பது போன்ற புகைப்படமும் பதிவேற்றப்பட்டுள்ளது.
மிகவும் வித்தியாசமாக உள்ள இந்த டிவிட்டை நெட்டிசன்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர். அந்த டிவிட்டை நீங்கள் கீழே காணலாம். சமூக வலை தளங்கள் வாயிலாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளை வாகன ஓட்டிகளுக்கு பங்கஜ் நெய்ன் ஐபிஎஸ் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டும் பழக்கம் இருந்தால், அதனை இன்றோடு விட்டு விடுங்கள். இதன் மூலம் அபராதங்களில் இருந்து மட்டுமல்லாது, சாலை விபத்துக்களில் இருந்து தப்பிக்கலாம். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது என்பது கொரோனா வைரஸை காட்டிலும் ஆபத்தானது என்பதை வாகன ஓட்டிகள் அனைவரும் உணர வேண்டும்.
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!