மலடா... அண்ணாமல... நேரம் பார்த்து இந்தியா செய்த காரியம்... என்ன பண்றதுனு தெரியாம மண்டையை பிச்சுக்கும் சீனா!
சீனாவின் ஆதிக்கத்திற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக அதிரடியான காரியம் ஒன்றை இந்தியா செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியா மற்றும் சீனா இடையே எல்லையில் அவ்வப்போது பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. மறுபக்கம் பாகிஸ்தானும், இந்தியாவிற்கு குடைச்சல் கொடுக்கும் நாடாக உள்ளது. ஆனால் பாகிஸ்தானில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை. அத்துடன் பொருளாதார ரீதியாகவும் பாகிஸ்தான் மிகவும் பின்தங்கி காணப்படுகிறது.

ஆனால் சீனா அப்படிப்பட்ட நாடு அல்ல. அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் வலுவான நாடாக சீனா உள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம் போன்ற சிறிய நாடுகளை எல்லாம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு சீனா தற்போது பல்வேறு விதங்களிலும் முயற்சி செய்து வருகிறது.

இந்தியாவிற்கு பிரச்னைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே சீனா இப்படி நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன. இந்தியாவின் அண்டை நாடுகளில் எல்லாம் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டு வருவது இந்தியாவிற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்ற எண்ணம் இந்தியர்களிடமும் காணப்படுகிறது.

எனவே சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் இந்தியாவும் தனது ஆதிக்கத்தை அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியா செய்துள்ள காரியம் ஒன்று தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நேபாளத்தில் வரும் நவம்பர் 20ம் தேதி பொது தேர்தல் நடைபெறவுள்ளது.

எனவே அங்கு தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கு உதவியாக 200 வாகனங்களை இந்தியா தற்போது பரிசாக வழங்கியுள்ளது. நேபாளத்திற்கான இந்திய தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா, இந்த 200 வாகனங்களையும், நேபாள அரசின் நிதி அமைச்சர் ஜனார்த்தன் ஷர்மாவிடம் ஒப்படைத்தார். இதில், 120 வாகனங்களை நேபாள பாதுகாப்பு படைகள் பயன்படுத்தவுள்ளன.

எஞ்சிய 80 வாகனங்களை நேபாளத்தின் தேர்தல் ஆணையம் பயன்படுத்தவுள்ளது. தேர்தலை நல்ல முறையில் நடத்துவதற்காக தற்போது 200 வாகனங்களை வழங்கி உதவி செய்ததற்காகவும், தொடர்ச்சியாக உதவி செய்து கொண்டே இருப்பதற்காகவும் இந்திய அரசு மற்றும் இந்திய மக்களுக்கு நேபாள நிதி அமைச்சர் ஜனார்த்தன் ஷர்மா நன்றி தெரிவித்து கொண்டுள்ளார்.

ஆனால் நேபாளத்திற்கு இந்தியா வாகனங்களை வழங்கி உதவி செய்வது இது முதல் முறை கிடையாது. கடந்த காலங்களில் நேபாளம் தேர்தலை சந்தித்த சமயங்களிலும் இந்தியா அந்நாட்டிற்கு வாகனங்களை வழங்கி உதவியுள்ளது. தற்போது வரை நேபாளத்திற்கு இந்தியா 2,400க்கும் மேற்பட்ட வாகனங்களை பரிசாக வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாள காவல் துறை, ராணுவம் மற்றும் தேர்தல் ஆணையம் போன்ற பல்வேறு அமைப்புகளுக்கு இந்தியா சார்பில் வாகனங்கள் பரிசளிக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் வழங்குவதுடன் மட்டுமல்லாது, இன்னும் ஏராளமான வழிகளிலும் நேபாளத்திற்கு இந்தியா உதவிக்கரம் நீட்டி கொண்டுள்ளது. இதன் மூலம் நேபாளத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதற்கு இந்தியா முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

பொதுவாக ஒரு நாட்டில் பொது தேர்தலை நடத்துவது என்பது அவ்வளவு எளிதாக காரியம் அல்ல. தேர்தலில் பயன்படுத்தப்படும் பொருட்களின் போக்குவரத்திற்கும், தேர்தல் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினரின் போக்குவரத்திற்கும் வாகனங்கள் மிகவும் அதிகளவில் தேவைப்படும். எனவேதான் நேபாளத்தில் தேர்தல்களின்போது, இந்தியா வாகனங்களை பரிசாக வழங்கி வருகிறது.

நேபாளம் போன்ற அவ்வளவாக வளர்ச்சியடையாத சிறிய நாடுகளுக்கு இந்த பரிசு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்பதில் நமக்கு சந்தேகமில்லை. மஹிந்திரா பொலிரோ போன்ற வாகனங்களைதான் இந்தியா தற்போது நேபாளத்திற்கு பரிசாக வழங்கியுள்ளது. வாகனங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் மூலமாக நமக்கு இது தெரிய வருகிறது.

இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் கார்களில் ஒன்றாக பொலிரோ திகழ்கிறது. இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகி கொண்டுள்ள மஹிந்திரா கார்களில் ஒன்று என்றும் கூட பொலிரோவை குறிப்பிடலாம். இதுதவிர எக்ஸ்யூவி300, எக்ஸ்யூவி700, தார் போன்ற மற்ற மஹிந்திரா கார்களின் விற்பனையும் சிறப்பாக இருந்து வருகிறது.


Click it and Unblock the Notifications