Just In
- 42 min ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 1 hr ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 2 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 2 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Technology யாரும் நம்பமாற்றங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- News தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி! மனைவி நேகா மீது போலீஸில் புகார்!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம்: மோடியின் பேச்சால் வெளிவந்த உண்மை..!!!
அந்நிய செலாவணியை சேமிக்க கச்சா எண்ணெய் இறக்குமதியை மத்திய அரசு குறைத்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவில் கச்சா எண்ணையின் தேவை அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மோடியின் இந்த பேச்சு நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருவதன் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் தேவைகளும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒரு நாளுக்கு கிட்ட தட்ட 206 மில்லியன் டன் கச்சா எண்ணெய் மக்களால் செலவாகிறது.
கச்சா எண்ணெய் தேவையில் உலகளவில் அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இந்தியா 3வது இடத்தில் உள்ளது. மேலும் கச்சா எண்ணெய் பற்றாக்குறை காரணமாக வரும் 2020ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் தேவையில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு செல்ல அதிக வாய்ப்புண்டு என தகவல் அறிக்கை சமீபத்தில் வெளியானது.
அந்நிய செலாவணியை சேமிக்க கச்சா எண்ணெய் இறக்குமதியை மத்திய அரசு குறைந்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார். கச்சா எண்ணெய் தேவை இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில் மோடியின் இந்த பேச்சு மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எதிர்க்கட்சியினர் மட்டும் வல்லுநர்கள் இதனை கடுமையாக்க விமர்சித்து வருகின்றனர்.
இந்திய பிரதமர் மோடி மதுரையில் அமையுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல்நாட்டு விழாவில் பங்கேற்க நேற்று தமிழகம் வந்தடைந்தார். விழாவில் பங்கேற்று பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சியில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு வளாக கட்டிடத்தின் அடிக்கல்நாட்டு விழாவில் பங்கேற்றார். விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள ஆளுநர் சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் அடிக்கல் நாட்டிய பின் பேசிய பிரதமர் மோடி சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காத எரிபொருட்களை தவிர்த்து சிஎன்ஜி மற்றும் மின்சக்தி போன்றவற்றை மக்கள் பயன்படுத்த மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. மேலும் மக்களின் சிஎன்ஜி மற்றும் மின்சக்தி பயன்பாட்டினை அரசு உறுதிசெய்து வருவதாக மோடி கூறினார்.400 மாவட்டங்களுக்கு விரைவில் பைப்லைன் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கப்படவுள்ளது. இதனை கருத்தில் கொண்டு வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை மத்திய அரசு குறைத்துள்ளது.
இதனால் நாட்டின் அந்நிய செலாவணியை சேமிக்க முடியும் என்பதால் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார். மக்களுக்கு எல்பிஜி மற்றும் டீசல் உற்பத்தியில் கொச்சி பாரத் பெட்ரோலியத்தின் பங்கு மிக முக்கியமானது. இந்தியாவில் பெட்ரோ கெமிக்கல் மற்றும் இயற்கை எரிவாயுவினை உள்நாட்டிலேயே உற்பத்திசெய்ய மத்திய அரசு ஊக்குவித்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.
கடந்த 2018ம் ஆண்டு 6,58,000 பேரல்கள் இறக்குமதி செய்துவந்த இந்தியா மத்திய அரசின் உத்தரவினால் 3,60,000 முதல் 3,70,000 பேரல்கள் வரை இறக்குமதி செய்ய முடிவு செய்தது. முன்பை விட 45 சதவிகிதம் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்தது.
இந்தியாவில் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் வரும் நிலையில் தற்போது அந்நிய செலாவணியை சேமிக்க கச்சா எண்ணெய் இறக்குமதியை மத்திய அரசு குறைத்ததாக பிரதமர் மோடி கூறியது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் பெட்ரோல், டீசல் விலைஉயர்வுக்கு மத்திய அரசுதான் முழு காரணமா என மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து கடந்த 2018ம் ஆண்டு தமிழகத்தில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் வைரலானது போல தற்போது கேரளவில் #PoMoneModi என்ற ஹேஷ்டேக் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இது நாடு முழுவது பிரதமர் மோடிக்கு எதிராக வழுக்கும் எதிர்ப்பு அலையை காண்பிக்கிறது.
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!