Just In
- 41 min ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 1 hr ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 3 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 8 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
Don't Miss!
- News எடப்பாடி பேசுவதை விடுங்க!ரிசல்ட்டுக்கு முன்பே அதிமுக பெரிய தலை போட்டுடைத்த மேட்டர்!இரட்டை இலை பதறுதே
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- Movies டாடா பட நடிகை அபர்ணா தாஸின் ஹல்தி கொண்டாட்டம்..களைகட்டிய திருமணம்!
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டால்கோ இல்லாமலேயே அதிவேக ரயில்களை இயக்க முடிவு!
அதிவேக ரயில்களை இயக்கும் முயற்சிகளை மத்திய ரயில்வே அமைச்சகம் தீவிரப்படுத்தியிருக்கிறது. அதன்படி, டெல்லி- மும்பை மற்றும் டெல்லி- ஹவுரா இடையிலான வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கபப்டுகிறது.
டெல்லி - மும்பை மற்றும் டெல்லி- ஹவுரா ஆகிய இரண்டு வழித்தடங்களில் செல்லும் ரயில்களின் வேகத்தை வெகுவாக அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதனால், இந்த இரண்டு வழித்தடங்களிலும் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் பயண நேரம் வெகுவாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
மிஷன் ரப்தார் என்ற பெயரில் ரயில்களின் சராசரி வேகத்தை வெகுவாக அதிகரிக்கும் திட்டத்தை கையிலெடுத்துள்ளது மத்திய ரயில்வே அமைச்சகம். இந்த திட்டத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தவும் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அதிகாரிகளை அறிவுறுத்தியிருக்கிறார்.
இந்த திட்டத்தின்படி, டெல்லி- மும்பை மற்றும் டெல்லி - ஹவுரா இடையிலான வழித்தடத்தில் செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் சொகுசு ரயில்களின் வேகம் மணிக்கு 130 கிமீ என்ற அளவிலிருந்து மணிக்கு 160 கிமீ வேகம் செல்லும் வகையில் அதிகரிக்கப்பட உள்ளது.
அதேபோன்று, இந்த வழித்தடத்தில் செல்லும் சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் மணிக்கு 100 கிமீ என்ற அளவிலிருந்து மணிக்கு 130 கிமீ வேகம் என்ற அளவில் அதிகரிக்கப்படுகிறது.
அதிவேக ரயில்களை இயக்குவதற்கு ஏதுவாக டெல்லி- மும்பை மற்றும் டெல்லி - ஹவுரா ஆகிய இரு வழித்தடங்களிலும் உள்ள தண்டவாளங்கள் மற்றும் சிக்னல்கள் மேம்படுத்தப்படுகிறது. அத்துடன், மின்சார கம்பங்கள் மற்றும் மின்சாரம் வழங்கும் கம்பிகளும் தரம் உயர்த்தப்படுகிறது.
அடுத்து, மிகவும் வளைந்து செல்லும் பகுதிகளை கண்டறிந்து, அந்த பகுதிகளில் ரயில் தண்டவாளத்தை நேராக அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், இந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்களின் சராசரி வேகம் வெகுவாக அதிகரிக்கும். ஆபத்தான பகுதிகளை கண்டறிந்து தடுப்பு வேலிகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
டெல்லி- மும்பை இடையிலான 1,385 கிமீ தூரத்தை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் 16 மணி 25 நிமிடங்களில் கடக்கின்றன. அதேபோன்று, 1,454 கிமீ தொலைவு கொண்ட டெல்லி- ஹவுரா இடையிலான ராஜ்தானி ரயில் 17 மணி 50 நிமிடங்களில் கடக்கிறது. அதாவது, சராசரியாக மணிக்கு 82 கிமீ வேகத்தில் இந்த ரயில்கள் செல்கின்றன.
ஆனால், கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்போது பயண நேரம் வெகுவாக குறையும். அதாவது, டெல்லி- மும்பை இடையிலான ராஜ்தானி ரயில்கள் 12 மணிநேரத்திலும், டெல்லி- ஹவுரா இடையில் இயக்கப்படும் ராஜ்தானி ரயில்கள் 14 மணிநேரத்திலும் கடந்துவிடும்.
டெல்லி- மும்பை மற்றும் டெல்லி- ஹவுரா ஆகிய இரு வழித்தடங்களும் நாட்டின் மிகவும் பரபரப்பான வழித்தடங்களாக இருக்கின்றன. இந்த இரண்டு வழித்தடங்களிலும் நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், ரயில்வே அமைச்சகத்தின் முடிவால், தற்போது இந்த வழித்டத்தில் பயணிப்போர் பெரும் பயனடைவர்.
கடந்த மார்ச் மாதம் டெல்லி - ஆக்ரா இடையிலான வழித்தடத்தில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. இரு நகரங்களுக்கு இடையிலான 200 கிமீ தூரத்தை இந்த எக்ஸ்பிரஸ் ரயில் 90 நிமிடங்களில் கடக்கிறது. நாட்டின் அதிவேக ரயில் என்ற பெருமையையும் கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில் பெற்றிருக்கிறது.
டால்கோ ரயில்களை கொள்முதல் செய்வது மட்டுமின்றி, அதில் மாறுதல்கள் செய்து பயன்படுத்தும் நிலை இருக்கிறது. அதற்கு பதிலாக இந்த மாற்று யோசனையை ரயில்வே அமைச்சகம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் மிஷன் ரஃப்தார் திட்டத்தின்படி, இந்த இரு வழித்தடங்களும் மேம்படுத்தப்பட்டு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என்று ரயில்வே வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இந்த விலைக்கு இப்படி ஒரு ஹூண்டாய் காரா! எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே ஷோரூமுக்கு வண்டிய எடுத்துருவீங்க!
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே