Just In
- 16 min ago டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
- 39 min ago இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
- 1 hr ago ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
- 4 hrs ago ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
Don't Miss!
- Finance இப்படியொரு திட்டம் இருப்பது தெரியுமா?! இதுல மட்டும் முதலீடு செய்யுங்கள்.. பணம் கொட்டும்..!
- News முதல் கட்ட லோக்சபா தேர்தல்: நாளை களம் காணும் 8 மத்திய அமைச்சர்கள், 3 மாஜி முதல்வர்கள் யார்?
- Movies ரவுடி பேபின்னா சும்மாவா.. அப்பவே அந்தாட்டம் போட்டிருக்காரே சாய் பல்லவி.. காலேஜ் வீடியோவை பாருங்க!
- Lifestyle அதிகரிக்கும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் குறிப்புகள்..!
- Technology பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மக்களை வாய் பிளக்க வைத்த குஜராத் தொழிலதிபர்! இவர் வாங்கிய காரின் விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது
குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், மிகவும் விலை உயர்ந்த காரை, இந்தியாவிலேயே முதல் ஆளாக வாங்கியுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த திரைப்பட நடிகர், நடிகைகள் விலை உயர்ந்த கார்களை வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். கோடிகளில் சம்பளம் பெறுவதால், விலை உயர்ந்த கார்கள் எல்லாம் அவர்களுக்கு சர்வ சாதாரணமாக இருக்கிறது. சினிமா நடிகர், நடிகைகள் மட்டுமல்லாது, தொழில் அதிபர்களும் கூட விலை உயர்ந்த கார்களை வாங்கி குவிக்கின்றனர்.
இந்த வரிசையில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் மிகவும் விலை உயர்ந்த கார் ஒன்றை தற்போது வாங்கியுள்ளார். இந்த காரின் விலை நமக்கு தலை சுற்றலை ஏற்படுத்துகிறது. இதனால் மட்டும் அவர் கவனம் பெறவில்லை. இந்தியாவில் இந்த காரை முதல் இந்தியர் அவர்தான். இந்த இரண்டு காரணங்களாலும்தான் அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரை சேர்ந்த தொழில் அதிபர் தீபக் மெவாடா. 2020 பென்ட்லீ ப்ளையிங் ஸ்பர் (2020 Bentley Flying Spur) கார், தீபக் மெவாடாவிற்கு தற்போது டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்தியாவில் இந்த காரை வாங்கிய முதல் நபர் என்ற பெருமையை தொழில் அதிபர் தீபக் மெவாடா பெற்றுள்ளார்.
மூன்றாம் தலைமுறை பென்ட்லீ ப்ளையிங் ஸ்பர் அல்ட்ரா-லக்ஸரி சலூன், கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அப்போதே இந்த கார் மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிற தொடங்கியது. ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை குறி வைத்து, புதிய அவதாரத்தில் பென்ட்லீ ப்ளையிங் ஸ்பர் கார் களமிறக்கப்பட்டுள்ளது.
பெர்ஃபார்மென்ஸ் மற்றும் டெக்னாலஜி என அனைத்து அம்சங்களிலும் புதிய பென்ட்லீ ப்ளையிங் ஸ்பர் கார் மேம்படுத்தப்பட்டுள்ளது. ப்ளையிங் ஸ்பர் காரின் 2020 வெர்ஷனானது, அதன் முன்னோடியுடன் பெயரை மட்டுமே பகிர்ந்து கொண்டுள்ளதாக பென்ட்லீ நிறுவனம் கூறியுள்ளது. ஏனெனில் இந்த காரில் சேஸிஸ் முற்றிலும் புதியது.
2020 ப்ளையிங் ஸ்பர் காருக்கு பென்ட்லீ நிறுவனம் முன்பதிவுகளை ஏற்று கொள்ள தொடங்கிய உடனேயே, வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏனெனில் இதன் முன்னோடியை காட்டிலும் அனைத்து விதங்களிலும் புதிய ப்ளையிங் ஸ்பர் கார் சிறப்பாக உள்ளது. இந்த சூழலில்தான், தீபக் மெவாடாவிற்கு 2020 ப்ளையிங் ஸ்பர் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளது.
சுமார் அரை ஆண்டு காத்திருந்து தீபக் மெவாடா இந்த காரை டெலிவரி பெற்றுள்ளார். 2020 ப்ளையிங் ஸ்பர் காரை, தொழில் அதிபர் தீபக் மெவாடாக கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆர்டர் செய்தார். ஏறத்தாழ 6 மாதங்களுக்கு பின் அவருக்கு தற்போது கார் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. 2020 பென்ட்லீ ப்ளையிங் ஸ்பர் காரில், 6.0 லிட்டர், ட்வின்-டர்போ டபிள்யூ12 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
Image Courtesy: Hrishi Raj Photography/Instagram
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 635 பிஎச்பி பவரையும், 900 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடியது. 8 ஸ்பீடு ட்யூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் மூலமாக நான்கு சக்கரங்களுக்கும் பவர் செலுத்தப்படுகிறது. இந்த காரின் எடை தோராயமாக 2.5 டன்கள் என்ற போதிலும், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை வெறும் 3.8 வினாடிகளில் எட்டி விடும்.
Image Courtesy: Supercars in Gujarat
இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 333 கிலோ மீட்டர்கள். டபிள்யூ12 பவர் ட்ரெயின் மட்டுமல்லாது, 4.0 லிட்டர் ட்வின்-டர்போ வி8 மற்றும் 3.0 லிட்டர் ட்வின்-டர்போ ஹைப்ரிட் வி6 வேரியண்ட்களையும் வருங்காலத்தில் வழங்க பென்ட்லீ நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. தொழில் அதிபர் தீபக் மெவாடா வாங்கியுள்ள 2020 பென்ட்லீ ப்ளையிங் ஸ்பர் காரின் விலை எவ்வளவு தெரியுமா? 5.60 கோடி ரூபாய்.
Image Courtesy: Supercars in Gujarat
இது ஆன் ரோடு விலையாகும். இந்த காரில் ஏற்கனவே ஏராளமான வசதிகள் உள்ளன. அதனுடன் கூடுதலாக ஒரு சில வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. சாலையில் சீறிப்பாயும் இந்த சொகுசு கார், கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடல் என்பதில் சந்தேகமில்லை. இந்த காரில் தீபக் மெவாடா பாதுகாப்பாக பயணிக்க வாழ்த்துக்கள்!
-
மைலேஜில் டூவீலர்களே ஒரு அடி பின்னாலதான் நிக்கணும்! புது அவதாரம் எடுக்கிறது மாருதி ஸ்விஃப்ட்! புக்கிங் தொடக்கம்
-
குடும்பத்தோட போக பஸ்ல டிக்கெட்டை தேடி அலைய வேண்டியதில்ல!.. 9பேர் போற மாதிரியான கார் விற்பனைக்கு அறிமுகம்!!
-
இந்தியாவுலேயே நல்லா சேல்ஸ் ஆகுற கார் இதெல்லாம்! ஆனா இந்த விஷயம் தெரிஞ்சா யாரும் வாங்க மாட்டாங்க!