Just In
- 57 min ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 1 hr ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 1 hr ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 4 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- News இது டூ மச்.. விஜய் யாருக்கு ஓட்டுப் போடுகிறார் என்று போட்டோ எடுத்த போலீஸ்காரர்! நடவடிக்கை பாயுமா?
- Movies Actor Vijay Antony: பணத்திற்காக வாக்கை விற்காதீர்கள்.. தெளிவுபடுத்திய நடிகர் விஜய் ஆண்டனி!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
நாட்டிலேயே முதல் முறையாக சிஎன்ஜி டோர் டெலிவரி சேவை தொடக்கம்... எங்கு தெரியுமா?.. கூடுதல் கட்டணமில்லா சேவை!
இந்தியாவிலேயே முதல் முறையாக சிஎன்ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. எங்கு இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.
பெட்ரோல், டீசலைப் போலவே நாட்டில் சிஎன்ஜி வாயுவையும் வாசலுக்கே தேடி வந்து கொடுக்கும் சேவை நாட்டில் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. இது எங்கு என்பதுகுறித்த தகவலைதான் இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.
கடந்த சில மாதங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருளை வாசலுக்கே தேடி வந்துக் கொடுக்கும் சேவையை நாட்டின் முன்னணி ஆயில் நிறுவனங்கள் நாட்டில் தொடங்கின. இந்த நிலையில், தற்போது முதல் முறையாக சிஎன்ஜி எரிவாயுவையும் வாசலுக்கு தேடி வந்து வழங்கும் சேவை நாட்டில் தொடங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைநகர் டெல்லி மற்றும் மும்பை ஆகிய இரு நகர பகுதிகளிலேயே இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே இச்சேவை முதல் முறையாக பெறுவதும் இவ்விரு நகரங்களே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒன்றிய பெட்ரோலியம் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த சேவையைத் தொடங்கி வைத்தார்.
இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் மற்றும் மஹாநகர் கேஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள்தான் இந்த சேவையை தொடங்கியிருக்கின்றன. இவையிரண்டும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின்கீழ் இயங்கும் எரிபொருள் விற்பனையாளர் நிறுவனம் ஆகும்.
சிஎன்ஜி வாயு தட்டுப்பாடு என்ற பேச்சுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காக இத்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, சிஎன்ஜி எரிபொருள் நிரப்பும் மையம் செயல்படாத இடங்களில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் நோக்கிலும் இந்த சேவை நாட்டில் தொடங்கப்பட்டிருக்கின்றது.
பெட்ரோல், டீசல் பங்குகளுடன் ஒப்பிடுகையில் சிஎன்ஜி எரிவாயு நிலையங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பயன்பாட்டில் இருக்கின்றன. குறிப்பாக, நகரங்களில் மட்டுமே இந்த நிலையங்கள் அதிகளவில் பயன்பாட்டில் இருக்கின்றன. கிராமப்புறங்களில் சற்று குறைவாக தென்படுகின்றது.
அவ்வாறு, சிஎன்ஜி நிலையங்கள் பயன்பாட்டில் இல்லாத பகுதிகளுக்காகவே இந்த நடமாடும் சிஎன்ஜி நிலையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாக கூடுதல் கட்டணமின்றி சிஎன்ஜி வழங்கப்படும் என கூறப்படுகின்றது. வீட்டுக்கே வந்து தருவதற்கு எந்தவிதமான கூடுதல் கட்டணத்தையும் வசூலிக்கப் போவதில்லை என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்றுதான் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகியவையும் கூடுதல் கட்டணமின்றி டூர் டெலிவரி சேவை செய்யப்பட்டு வருகின்றது. சிஎன்ஜி டூர் டெலிவரி சேவைக்காக 1,500 கிலோ கொள்ளளவு கொண்ட வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக நாள் ஒன்றிற்கு 150 முதல் 200 எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு சிஎன்ஜி எரிவாயுவை நிரப்ப முடியும்.
மிகக் குறைந்தளவிலேயே சிஎன்ஜி வாகனங்கள் உமிழ்வை வெளியேற்றும் என்ற காரணத்தால் சிஎன்ஜி வாகனங்களை ஊக்குவிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில், சிஎன்ஜி விற்பனையகங்களை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே நடமாடும் சிஎன்ஜி மையங்கள் டெல்லி மற்றும் மும்பை நகரத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நடமாடும் சிஎன்ஜி மையங்கள் நாட்டில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட அதேசமயத்தில் நாடு முழுவதும் 201 சிஎன்ஜி நிலையங்கள் புதிதாக பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..