இந்தியாவின் முதல் ரயில்வே பல்கலைக்கழகம் அமையவுள்ள மாநிலம் இதுதான்..!!
இந்தியாவின் முதல் ரயில்வே பல்கலைக்கழகம் அமையவுள்ள மாநிலம் இதுதான்..!!
இந்தியாவின் முதல் ரயில்வே பல்கலைக்கழகம், குஜராத் மாநிலம் வதோதராவில் கட்டமைக்க மத்திய அமைச்சரவை ஒப்பதல் அளித்துள்ளது.

2014-ம் ஆண்டில் பாஜக அரசு ஆட்சியை கைப்பற்றியதும், அதுவரை தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்த ரயில்வே பட்ஜெட்டை, பொருளாதார பட்ஜெட்டுடன் இணைத்து தாக்கல் செய்யுன் முறை தொடங்கியது.

அப்போது அமைச்சரவையில் பிரமர் மோடி பேசும்போது, இந்திய ரயில்வே துறையை நவீனமயமாக்க மற்றும் ரயில்வே துறைக்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ரயில்வே பல்கலைக்கழகம் ஒன்று வேண்டும் என கூறியிருந்தார்.

பிரதமர் மோடி தெரிவித்ததன் அவசியத்தை உணர்ந்த அமைச்சரவை, குஜராத் வதோதராவில் தேசிய ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அறிவித்தது.

இதுநாள் வரை அறிவிப்பு, அறிவிப்பாக இருக்க குஜராத் வதோதராவில் இதற்காக ஒதுக்கப்பட்ட நிலப்பகுதியில் ரயில்வே பல்கலைக்கழகத்திற்கான பூர்வாங்க பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை.
Recommended Video


ஆனால் சமீப காலமாக ரயில்வே பல்கலைக்கழகம் கட்டமைப்பதற்கான பணிகளில் மத்திய அரசும் மும்முரம் காட்ட தொடங்கியது.

குறிப்பாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ரயில்வே வாரிய தலைவர் அஷ்வானி லோஹானி இருவரும் இதற்கான நடவடிக்கைகளில் இறங்கினர்.

தொடர்ந்து இதற்கான நடைமுறைகள் தீவிரமாகவே இயக்கம் பெறவே, நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சரவை ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்க ஒப்புதல் அளித்தது.

பிரதமர் மோடியின் முக்கிய திட்டமாக பார்க்கப்படும் ரயில்வே பல்கலைக்கழகம் நடைமுறைக்கு வந்தால், பலருக்கு வேலை வாய்ப்புகள், கல்வி பயில வாய்ப்புகள் கிடைப்பதோடு, இந்திய ரயில்வே துறை வளர்ச்சியடைய பல சாத்தியக்கூறுகள் உருவாகும்.

குஜராத்தின் ரயில்வே பல்கலைக்கழகத்தை கட்டமைக்க வேண்டி விரைவில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து 2018 மே மாதத்திற்குள் இதற்கான பணிகள் முடிவடைந்த பிற்பாடு, அடுத்தாண்டு ஜூன் மாதம் முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.


Click it and Unblock the Notifications








