இந்தியாவின் முதல் நீளமான பாலத்தில் நடந்த முதல் விபத்து; தொடர்ந்து எழும் மக்கள் புகார்கள்..!!

இந்தியாவின் மிக நீளமான பாலம் பயன்பாட்டிற்கு வந்த மூன்றாவது நாளில், அதன் மீது முதல் விபத்து நடந்துள்ளது.

By Azhagar

அசாம் மாநிலம் டின்சுகியா பகுதியில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் நீளமான பாலத்தின் மீது முதல் விபத்து நடந்தது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முதல் நீளமான பாலத்தில் நடந்த முதல் விபத்து..!!

அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தை இணைக்கும் ’பூபென் ஹாசாரிக்கா சேது’ என்ற பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி சென்ற 27ம் தேதி திறந்து வைத்தார்.

இந்தியாவின் முதல் நீளமான பாலத்தில் நடந்த முதல் விபத்து..!!

பறந்து விரிந்த பிரம்மபுத்திரா நதியின் மீது சுமார் 9.15 கிலோ மீட்டர் நீளத்தில் அமைந்துள்ள இந்த பாலம் தான் இந்தியாவின் மிகவும் நீளமான பாலம் என பெயர்பெற்றது.

இந்தியாவின் முதல் நீளமான பாலத்தில் நடந்த முதல் விபத்து..!!

சீனாவின் இராணுவ நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் கட்டபட்ட இந்த பாலம் மீது அது பயன்பாட்டிற்கு வந்த மூன்றாவது நாளில் முதல் விபத்து நடந்துள்ளது.

இந்தியாவின் முதல் நீளமான பாலத்தில் நடந்த முதல் விபத்து..!!

அசாமின் தோலா பகுதியில் இருந்து சாதியா பகுதிக்கு செல்ல பாலத்தின் மீது பைக்கில் பயணித்த இரு இளைஞர்கள், வேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்தியாவின் முதல் நீளமான பாலத்தில் நடந்த முதல் விபத்து..!!

நீளமான இந்த பாலத்தில் வேகமாக போக நினைத்து பைக்கை அதிவேகமாக ஓட்ட, வாகனத்தில் உராய்வு ஏற்பட்டு, அது சறுக்கிக்கொண்டே சாலையில் விழுந்துவிட்டது.

இந்தியாவின் முதல் நீளமான பாலத்தில் நடந்த முதல் விபத்து..!!

இதில் பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த அரூப் என்ற இளைஞரின் இடது கரம் முற்றிலும் துண்டானது. மற்றொரு இளைஞரான தீரன் படுகாயமடைந்தார்.

நீளமான இந்த பாலத்தில் ஏற்கனவே அதிவேகமாக பயணிப்பது, மது குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது போன்ற வழக்குகள் பதியப்பட்டு வந்தன.

இந்தியாவின் முதல் நீளமான பாலத்தில் நடந்த முதல் விபத்து..!!

இந்நிலையில் இந்த விபத்து சம்பவம் முக்கியமாக பார்க்கப்படுகிறது. மேலும் பூபென் ஹாசாரிக்கா சேது பாலம் தொடர்பான பல்வேறு புகார்களும் பொதுமக்கள் மத்தியில் உள்ளது.

இந்தியாவின் முதல் நீளமான பாலத்தில் நடந்த முதல் விபத்து..!!

2011ம் ஆண்டில் இதற்கான கட்டமைப்பு பணிகள் தொடங்கிய போது, பாலத்தின் அருகிலேயே பணியாளர்கள் தங்க அமைக்கப்பட்ட கூடாரங்கள் இன்னும் அகற்றப்படாமல் இருக்கிறது.

இந்தியாவின் முதல் நீளமான பாலத்தில் நடந்த முதல் விபத்து..!!

மேலும் பாலத்தின் மீது இருக்கும் சில தார்பாலின் கூடாரங்களால் வாகனம் ஓட்டும்போது சிரமம் ஏற்படுவகிறது போன்ற பொதுமக்கள் பல்வேறு புகார்களை தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் முதல் நீளமான பாலத்தில் நடந்த முதல் விபத்து..!!

இரவு வேளையில் பயணம் மேற்கொண்டால், அதற்கு சரியான மின் விளக்குகள் வசதிகள் இல்லை என்பது பூபென் ஹாசாரிக்கா பாலத்தை பயன்படுத்தும் பெரும்பாலான வாகன ஓட்டிகளின் புகாராக உள்ளது.

இந்தியாவின் முதல் நீளமான பாலத்தில் நடந்த முதல் விபத்து..!!

மின் விளக்குகள் வசதிகள் சரியாக பொருத்தப்படவில்லை என்பதால் தான் இளைஞர்கள் சென்ற பைக் விபத்திற்குள்ளானதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

போக்குவரத்து வசதிக்கு என்றில்லாமல், இராணுவ தாளவாடங்களை கொண்டு செல்லவும் பூபென் ஹாசாரிக்கா பாலம் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவின் முதல் நீளமான பாலத்தில் நடந்த முதல் விபத்து..!!

இந்தியாவின் பாதுகாப்பு கட்டமைப்புகளில் ஒன்றான இந்த பாலத்தின் மேல் அரசு அதீத கவனம் கொண்டு செயல்படவேண்டும். இதில் காணப்படும் அடிப்படை குறைப்பாடுகளை சீரப்படுத்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பூபென் ஹசாரிக்கா சேது பாலத்தை பயன்படுத்தும் ஒவ்வொருவரின் கோரிக்கையாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 10, 2017, 17:17 [IST]
English summary
India’s longest bridge – the Bhupen Hazarika Setu in Assam, saw a gruesome accident leaving two youths seriously injured. Click for Details...
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+