Just In
- 8 min ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- 1 hr ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- 3 hrs ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 7 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
Don't Miss!
- Finance இனி சுங்கச் சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை! வருகிறது ஜிபிஎஸ் தொழில்நுட்பம்..!
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- News "மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்?" இரண்டு நொடி கேப் விட்டு.. எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Movies அச்சச்சோ முதலில் அஜித் இல்லை சூர்யாதான்ங்க.. ஜோதிகா சொன்ன பல வருட சீக்ரெட்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இந்தியாவின் நீண்ட சுரங்க வழித்தடத்தை மோடி திறந்து வைக்கிறார்
காஷ்மீரில் 6 ஆண்டுகாலமாக கட்டப்பட்டு வந்த இந்தியாவின் நீளமான சுரங்க வழிப்பாதை விரைவில் திறக்கப்படவுள்ளது அதுகுறித்த தகவல்களை இனி பார்க்கலாம்
ஜம்மு காஷ்மீரின் செனைய் மற்றும் நஷ்ரீ பகுதிகளை இணைக்கும் சுரங்க வழிப்பாதை இம்மாதம் திறக்கப்படவுள்ளது. இந்தியாவிலுள்ள சுரங்க வழித்திடங்களிலே அதிக நீளம் கொண்டதாக கருதப்படும் இது 9.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. 6 மாத காலம் கட்டமைப்பு பணிகள் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், இந்த சுரங்க வழித்தடத்தை இம்மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார்.
தட்வெட்ப நிலை காரணமாக செனைய் மற்றும் நஷ்ரீ பகுதிகளுக்கு போக்குவரத்து பாதிப்படைந்து வந்த நிலையில் அனைத்து சீதோஷனத்திற்கு ஏற்றவாறு இந்த சுரங்க வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நேரமும் விரயமாகது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இந்த சுரங்க வழித்திடத்திற்கான ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கின, அப்போது இது 2016 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுயிருந்தது. தற்போது 7 மாத காலம் தாமதத்திற்கு பிறகு செனைய் மற்றும் நஷ்ரீ பகுதிகளை இணைக்கு சுரங்க வழித்திடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
செனைய் மற்றும் நஷ்ரீ பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் சுரங்க வழித்தடத்தில் மற்றொரு சுரங்க வழிப்பாதை குவாசிகண்ட் மற்றும் பனிஹால் பகுதிகளில் கட்டப்பட்டு வருகிறது. சுமார் 8.45 கிலோ மீட்டர் தூரத்தில் கட்டப்பட்டு வரும் இந்த வழித்தடம் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீருக்கான மற்றொரு அடையாளமாக மாறியுள்ள இந்த 2 சுரங்க வழித்தடங்கள்களை குறித்து பேசிய இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அதிகாரி ஒருவர் "காஷ்மீரில் கட்டமைக்கப்படவுள்ள இந்த 2 சுரங்க வழித்தடங்களால் மக்களின் போக்கு வரத்து நேரம் விரயமாவது தவிரக்கப்படும், மேலும் இந்த போக்குவரத்து இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்" என்று கூறினார்.
செனைய் மற்றும் நஷ்ரீ பகுதிகளை இணைக்கும் சுரங்க வழித்தடம் ஒரே சுரங்கப் பாதையாக 9.3 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டுள்ளது. ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், மாற்று வழியில் செல்ல, குவாசிகண்ட் மற்றும் பனிஹால் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் சுரங்கப் பாதை உதவும். இந்த 2வது சுரங்கப் பாதை 2 வழித்தடங்களாக 7 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டு வருகிறது.
Tunnel Of Hope அதாவது நம்பிக்கையான சுரங்கப்பாதை என்ற பெயரில் அடையாளப்படுத்தப்படும் இதற்கு காங்கிரஸின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சுரங்க வழித்தடங்கள் பயன்பாட்டிற்கு வந்தால், புறநகரலிருந்து நகருக்கு செல்ல கிட்டத்தட்ட 10 முதல் 11 மணி வரை அக்ககூடிய நேரம் மிச்சமாகும். மேலும் பனிப்பொழிவு காலங்களிலும் எந்த இடையூறுமின்றி செல்லலாம். இரண்டு சுரங்கப் பாதைகள் அமையுவுள்ளதால் இதுவரை இருந்த போக்குவரத்து பாதிப்பும் இருக்காது என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய தெரிவித்துள்ளது.
காஷ்மீரின் செனைய், நஷ்ரீ உட்பட பகுதிகளில் வாழும் பழ வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருக்கும். வானிலையில் மாற்றம் ஏற்பட்டாலும் அவர்கள் எந்த சிரமுமின்றி மற்ற பகுதிகளுக்கு சென்று பழங்களை விற்பனை செய்வதற்கும் வழிவகை செய்யும். மேலும் இதனால் உள்ளூர் வேலைவாய்ப்பு உருவாகும்.
அக்டோபரிலிருந்து, ஜனவரி வரை காஷ்மீரில் ஆப்பிளுக்கான சீசன் தொடங்கும் என்பதால், செனைய், நஷ்ரீ, குவாசிகண்ட் பகுதிகளிலிருந்து இந்தியாவில் பல பகுதிகளுக்கு குறைந்தது 200 லாரிகளிலிருந்து ஆப்பிள் விநியோகம் செய்யப்படும்.
கடந்த நாட்களில் மோசமான வானிலை ஏற்படும்போது காஷ்மீரின் சில பகுதிகளில் ஆப்பிள் வியாபாரம் பாதிக்கப்பட்டுயிருந்த சூழலில் சுரங்க வழித்தடம் அமையவுள்ளது அப்பகுதி வாசிகள் மற்றும் ஆப்பிள் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
லேண்ட் ரோவரின் ரேஞ்ச் ரோவர் காரின் புகைப்பட தொகுப்பை கீழே காணுங்கள்