Just In
- 10 min ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 29 min ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 1 hr ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 2 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கொரோனா வைரசுக்கு எதிரான போர்... வல்லரசு நாடுகளே திணறும் நிலையில் இந்திய ராணுவம் செய்த மாஸான காரியம்
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்திய ராணுவம் களமிறங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கண்ணுக்கே தெரியாத கோவிட்-19 வைரஸ் தற்போது ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டி படைத்து வருகிறது. கொரோனா வைரஸ் வகைகளில் ஒன்றான கோவிட்-19 வைரஸ், சீனாவில் இருந்து பரவ தொடங்கியதாக நம்பப்படுகிறது. சீனாவை தொடர்ந்து இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், இங்கிலாந்து, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கோவிட்-19 கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவிட்-19 வைரஸால் உலகம் முழுவதும் தற்போது வரை 34 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7,23,732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் தற்போது கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 1,071 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவை பொறுத்தவரை மஹாராஷ்டிரா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கோவிட்-19 வைரஸ் நோயாளிகள் அதிக அளவில் உள்ளனர். கோவிட்-19 வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வரிசையில் கோவிட்-19 வைரசுக்கு எதிரான போரில் தற்போது இந்திய ராணுவமும் களமிறங்கியுள்ளது. கோவிட்-19 நோயாளிகளுக்காக பேருந்து ஒன்றை இந்திய ராணுவம் மாடிபிகேஷன் செய்துள்ளது. கோவிட்-19 அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, இந்திய ராணுவம் இந்த பஸ்ஸை உருவாக்கியுள்ளது.
இந்திய ராணுவத்தின் வெஸ்டர்ன் கமாண்ட் (Western Command) இந்த பேருந்தை உருவாக்கியுள்ளது. இது குறித்து இந்திய ராணுவத்தின் பொது தகவலின் ஏடிஜி (Additional Directorate General) டிவிட்டர் பக்கத்தில் டிவிட் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒரே ஒரு நுழைவு வாயில் மட்டும் கொண்டதாக இந்த பேருந்து மாடிபிகேஷன் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்காக வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. கோவிட்-19 வைரஸானது நோயாளிகளின் சுவாச மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே தற்போது உலகம் முழுவதும் வென்டிலேட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது.
இதனால் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்து வழங்க வேண்டும் என பல்வேறு நாடுகளின் அரசுகளும் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளன. இதன்பேரில் டெஸ்லா, ஃபோர்டு, ஜென்ரல் மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வென்டிலேட்டர்களின் உற்பத்தியில் களமிறங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்திய ராணுவத்தால் தற்போது மாடிபிகேஷன் செய்யப்பட்டுள்ள பேருந்தில் டிரைவர் மற்றும் கோ-டிரைவரை தனிமைப்படுத்துவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்திய ராணுவம் தவிர ரயில்வே துறையும் இது போன்ற முயற்சிகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன்படி ரயில் பெட்டிகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதாவது ரயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்படுகின்றன. நோயாளிகளுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்கு ஏதுவாக, ரயில் பெட்டிகளில் ஒரு சில மாற்றங்களும் செய்யப்படுகின்றன. இந்திய ரயில்வே துறையின் இந்த நடவடிக்கை கவனம் பெற்ற நிலையில், ராணுவமும் தற்போது கொரோனா வைரசுக்கு எதிரான போரில் களமிறங்கியுள்ளது.
கோவிட்-19 வைரஸை எதிர்கொள்வதில் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே தடுமாறி வருகின்றன. இந்த சூழலில், இந்தியாவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டால், மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்திய ராணுவம் மற்றும் ரயில்வே துறை ஆகியவற்றின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!