பைக்கில் செல்லும் போது தெரியாமல் பூட்டான் நாட்டிற்குள் நுழைந்த இந்திய இளைஞர்களுக்கு என்ன நடந்தது?
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சில இளைஞர்கள் பைக் ரைடிங்கில் உள்ள ஆர்வ மிகுதியால் மலைத்தெடர்களில் பயணம் செய்யும் போது தெரியாமல் பூட்டான் நாட்டிற்குள் சென்று பூட்டான் போலீசிடம் சிக்கி கொண்டனர்.

இந்தியாவில் எல்லை பகுதிகளில் இருப்பவர்கள் அவ்வப்போது தெரியாமல் எல்லையை தாண்டுவது என்பது அவ்வப்போது நடப்பது தான். மக்களுக்கு எல்லை குறித்து போதிய தெளிவு இல்லாததால் இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை பாக். மற்றும் சீன எல்லை பகுதிகளில் எல்லை தாண்டுவது என்பது மிகப்பெரிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள சிலர் தெரியாமல் பாக் பகுதிகுள் நுழைந்தாலும், பாக், நாட்டை சேர்ந்த சிலர் இந்தியாவிற்குள்ள நுழைந்தாலும் கடுமையான விசாரனணைக்கு பின்பே விடுவிக்கப்படுகின்றனர்.

ஆனால் பூட்டான் போன்ற நாடுகளில் இவ்வாறான சம்பவங்கள் என்பது நடப்பது குறைவு தான். மேற்குவங்கத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பைக் ரைடிங் செல்லும் போது பூட்டானில் சிக்கி கொண்டனர்.

மேற்குவங்கத்தை சேர்ந்த சில இளைஞர்கள் மலைத்தொடர் வழியாக பயணம் செய்ய விரும்பி பயணத்தை துவங்கியுள்ளனர். நெடுதூரம் பயணம் சென்றாலும் ரைகடர்கள் உற்சாக மிகுதியில் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் வழித்தவறி பூட்டான் நாட்டிற்கு சென்று விட்டனர். அவர்களை பூட்டான் நாட்டில் உள்ள போலீசார் பிடித்து விசாரித்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை நீங்களும் கீழே பாருங்கள்.
இதையடுத்து அவர்கள் மீது இரக்கப்பட்ட பூட்டான் போலீஸ் அவர்களை மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி செல்லும் படி எச்சரித்து திருப்பி அனுப்பியுள்ளா். அவர்களும் பத்திரமாக இந்தியா வந்து சேர்ந்தனர். நாட்டின் எல்லையோரங்களில் பைக் ரைடிங்கில் ஈடுபடும் போது எல்லை குறித்த தெளிவான தகவல்களை முன்னரே பெற்று கொண்டு பயணம் செய்ய வேண்டும்.

இந்தியர் பூட்டானுக்கு செல்ல தேவைப்படும் ஆவணங்கள்
இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு ஆகிய நாட்டை சேர்ந்தவர்களுக்கு பூட்டான் செல்ல விசா தேவையில்லை ஆனால் நுழைவு அனுமதியை பெற வேண்டும்.
ரோடு வழியாக பூட்டான் செல்லும் இந்தியர்கள் பூட்டான் எல்லை பகுதியான பூயன்ட்ஷோலிங் என்ற பகுதியில் உள்ள இம்மிகிரேஷன் அலுவலகத்தில் நுழைவு அனுமதியை வாங்க வேண்டும்.

மேலும் இந்தியர் பூட்டானிற்குள் இருக்கும் போது இந்திய பாஸ்போர்ட் அல்லது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் அப்படி இரண்டும் இல்லாதவர்கள் இந்தியா- பூட்டான் பார்டரில் உள்ள இந்திய எல்லை பகுதி அலுவலகத்தில் இவ்வாறாக அடையாள சான்று வாங்கி செல்ல வேண்டும்.

பூட்டானில் நுழைவதற்காகன அனுமதி சீட்டை டில்லி மற்றும் கோல்கட்டாவில் உள்ள பூட்டான் ஹை கமிஷனர் அலுவலகத்திலும் முன்னரே பெற்றுக்கொண்டு பூட்டானிற்கு பயணம் செய்யலாம்.


Click it and Unblock the Notifications