பாகிஸ்தானில் பணிபுரியும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு 'புல்லட் புரூப்' கார்

பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கைகளை தாலிபன் தீவிரவாதிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். பாகிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகளை நடத்திய அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் காரில் தனியாக சென்று கொண்டிருந்த சவுதி தூதரை வழிமறித்து சுட்டுக்கொன்றனர். இதனால், அங்கு பணிபுரியும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த நிலையில், பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு பாகி்ஸ்தானில் எழுந்துள்ள நிலைமை குறித்து சமீபத்தில் மத்திய அரசு ஆய்வு செய்தது. அதில், தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை கருத்தில்கொண்டு பாகிஸ்தானில் பணிபுரியும் இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை அதிகரிக்க முடி்வு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரியும் அனைத்து மூத்த அதிகாரிகளுக்கும் குண்டு துளைக்காத புல்லட் புரூப் கார் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாவலர்களின் துணையின்றி தனியாக வெளியில் செல்ல வேண்டாம் என்றும் அவர்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை எதுவும் விடு்க்காத நிலையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், தூதகரத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








