Just In
- 31 min ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 1 hr ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- 1 hr ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 3 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
Don't Miss!
- Movies சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
- News குரு வந்தால் கொடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மெக்கானிக் சேவையை தொடங்கும் இந்தியன் ஆயில்... போன் பண்ணா போதும் வீட்டுக்கே அனுப்பி வைப்பாங்க..!
நாட்டின் மிகப்பெரிய ஆயில் நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், டூர் மெக்கானிக் சேவையைத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டின் மிகப்பெரிய ஆயில் நிறுவனங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனமே டூர்-ஸ்டெப் மெக்கானிக் சேவை பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ ஆகியவை வீட்டுக்கே உணவுகளை அனுப்பி வைப்பதைப் போல் மெக்கானிக்குகளை வீட்டுக்கே அனுப்பி வைத்து சர்வீஸ் செய்யும் சேவையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தொடங்கியுள்ளது.
இதற்காக தலைநகர் டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் 'ஹோம் மெக்கானிக்' எனும் நிறுவனத்துடன் அது கூட்டணி வைத்துள்ளது. ஆயில் நிறுவனம் இதுமாதிரியான சேவையில் களமிறங்குவது நாட்டிலேயே இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் டூர் டெலிவரி ஆயில் சேவையைத் தொடங்கியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.
இதைத்தொடர்ந்தே வீட்டுக்கே மெக்கானிக்குகளை அனுப்பி வைத்து சர்வீஸ் செய்யும் சேவையை அது தொடங்கியிருக்கின்றது. இந்த சேவைக்கு ஹோம்-மெக்கானிக் இந்த் என்ற பெயரை அது வைத்திருக்கின்றது. மேலும், இந்த சேவை முதல்கட்டமாக தலைநகர் டெல்லியில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் நாட்டின் பிற முக்கிய நகரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த சிறப்பு சேவைக்காக ஓர் மெக்கானிக்கிற்கு தேவையான கருவிகளும் கொண்ட மினி வேன் தயார் செய்யப்பட்டுள்ளது. மாருதி ஈகோ அடிப்படையிலான வாகனம் தயார் செய்யப்பட்டிருக்கின்றது. இதுவே, மொபைல் சர்வீஸ் மையமாக செயல்பட இருக்கின்றது. கார் மற்றும் இருசக்கர வாகனங்களைச் சர்வீஸ் செய்வதற்கான அனைத்து முக்கிய கருவிகளும் இதில் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகின்றது.
ஆனால், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இந்த சேவையில் கார்களுக்கு மட்டுமே சர்வீஸ் வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான, பவர் ஜெனரேட்டர், ஏர் கம்ப்ரஸ்ஸர், ஆயில் டிஸ்பென்சர், தேவியில்லாத ஆயில்களை சேகரிக்கும் பாட்டில்கள், பாதிப்பைக் கண்டறியும் கருவி, நியூமேடிக் கருவிகள், வாஷிங் மற்றும் வேக்யூம் க்ளீனர்கள் உள்ளிட்ட கருவிகள் இந்த மொபைல் மெக்கானிக் நிலையத்தில் இருக்கும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற கருவிகளை வைத்தே சாலையோர மெக்கானிக்குகள் கார் மற்றும் பைக்குகளை பழுதுநீக்கி வருகின்றனர். ஆகையால், இது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் டூர்-ஸ்டெப் மெக்கானிக் சேவைக்குப் போதுமான கருவிகளாக இருக்கின்றன.
இந்த நடமாடும் மெக்கானிக் மையங்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்குககளில் நிலை நிறுத்தப்பட இருக்கின்றன. ஏதேனும் அழைப்பு அல்லது புக்கிங் பெறப்பட்ட பின்னர் அவை அங்கிருந்து புறப்பட்டுச் சென்று சேவையை வழங்கும். இதற்காக 300க்கும் மேற்பட்ட நடமாடும் மெக்கானிக் மையங்கள் தயார் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
மேலும், அவற்றை அழைப்பதற்கான தனிப்பட்ட எண்ணையும் அது வெளியிட்டுள்ளது. 985 986 4141 என்ற எண்ணே அது. இதைக் கொண்டு வாட்ஸ் ஆப் மூலமாக டெல்லி வாசிகள் மெக்கானிக்குகளைப் புக் செய்ய முடியும். இதன்மூலம் விருப்பப்பட்ட இடத்திற்கே மெக்கானிக்குகளை அழைக்க முடியும்.
வாட்ஸ்-ஆப் மூலம் அழைப்பு விடுக்கும்போது குறிப்பிட்ட சில தகவல்களை மட்டுமே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கேட்கின்றது. அதாவது, வாகனத்தின் மாடல், பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய தகவல்கள் ஆகியவற்றை மட்டுமே வாடிக்கையாளர்களிடத்தில் கேட்கப்படுகின்றது.
இதைத்தொடர்ந்து, மூன்று பேர் கொண்ட மெக்கானிக் குழுவை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் ஹோம்-மெக்கானிக் கூட்டணி அனுப்பி வைக்கும். இவர்கள் காரில் உள்ள பழுதை நீக்கி, அதற்கான கட்டணத்தை அங்கேயேப் பெற்றுக் கொண்டுச் செல்வர். இந்த சேவையை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே பெற முடியும்.
வாரத்தின் அனைத்து நாட்களிலும் இச்சேவையைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேசமயம், வாட்ஸ் ஆப் மூலமாக மட்டுமின்றி ஹோம்-மெக்கானிக்.இன் (home-mechanic.in) தளத்தின் வாயிலாகவும் டூர்-ஸ்டெப் மெக்கானிக் சேவைக்கான புக்கிங்கைச் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களில் ஏற்படும் 90 சதவீத கோளாறுகளை நிவர்த்தி செய்யும் திறன் தங்களின் நடமாடும் மெக்கானிக் மையங்களுக்கு இருப்பதாக ஹோம்-மெக்கானிக் நிறுவனத்தின் சிஇஓ ஆட்டோகார் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கின்றார். ஆகையால், மெக்கானிக் நிலையங்களைத் தேடி அலைய வேண்டிய அவசியம் நிச்சயம் இருக்காது எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "இந்தியன் ஆயிலுடனான கூட்டு, எங்களின் திறனை வலுப்படுத்தவும், வாடிக்கையாளர்களின் அணுகலை அதிகரிக்கவும் செய்யும்" என கூறினார். இந்தியன் ஆயில் நாடு முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகளைக் கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தற்போதும் மக்களை அச்சுறுத்தி வருவதால், பலர் நேரடி தொடர்பு மற்றும் வெளியில் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் என நினைக்கின்றனர். ஆகையால், இந்த நடமாடும் மெக்கானிக் மையங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் ஹோம்-மெக்கானிக் நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.
-
ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
-
டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
-
மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!