லண்டனில் தானியங்கி காரை டிரைவர் சீட்டில் அமராமல் இயக்கிய இந்தியா வம்சாவளி டிரைவருக்கு தண்டனை
தானாக இயங்ககூடிய டெஸ்லா காரை டிரைவர் சீட்டில் அமராமல் இந்திய வம்சாவளியை சேர்ந்த டிரைவர் லண்டன் ரோட்டில் ஓட்டி சென்றுள்ளார். கேமராவில் பதிவாக இந்த காட்சி மூலம் அவருக்கு போலீசார் தண்டனை வழங்கினர்.
தானாக இயங்ககூடிய டெஸ்லா காரை டிரைவர் சீட்டில் அமராமல் இந்திய வம்சாவளியை சேர்ந்த டிரைவர் லண்டன் ரோட்டில் ஓட்டி சென்றுள்ளார். கேமராவில் பதிவாக இந்த காட்சி மூலம் அவருக்கு போலீசார் தண்டனை வழங்கியுள்ளனர்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த பாவேஸ் பட்டேல் என்பவர் லண்டனில் டிரைவராக பணியாற்றி வருகிறார். அவர் தற்போது தானாக இயங்க்கூடிய டெஸ்லா என்ற காரை பயன்படுத்தி வருகிறார்.

இந்த காரை பொருத்தவரை அனைத்தும் தானாக இயக்கும், டிரைவராக எதுவும் செய்ய தேவையில்லை. ஆனால் இந்த கார் தானா இயங்கினாலும், டிரைவர் சீட்டில் டிரைவர் இயக்க வேண்டியது கட்டாயம் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

சில அவசர காலத்திலும், அல்லது, காரில் ஏதேனும் பாகங்கள் திடீர் என செயல் இழந்து விட்டோலோ ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க காரை டிரைவர் கண்ட்ரோலில் எடுத்து விபத்தை தவிர்க்க இந்த உத்தரவை அவர்கள் பிறப்பித்துள்ளனர்.

இந்நிலையில் பவேஸ் பட்டேல் ஆட்டோமெட்டிக் காரில் செல்லும் போது டிரைவர் சீட்டில் இல்லாமல் அருகில் உள்ள பயணிகள் சீட்டில் அமர்ந்துள்ளார். இது ஆங்காங்கே இருந்த கேராக்களில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ காட்சிகளை நீங்கள் கீழே காணலாம்.
இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் அவர் செய்தது தவறுதான் என தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

அவருக்கு தண்டனையாக 18 மாதங்களுக்கு கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 100 நாட்களுக்கு சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க வேண்டும் எனவும், இந்திய மதிப்பில் ரூ1,63,000 அபராதமாக கட்ட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து லண்டன் போலீசார் கூறும்போது :"பட்டேல் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டார். அவர் டிரைவர் சீட்டில் இல்லாத நிலையில் விபத்துக்கள் நடந்தால் அது பெரும் சேதத்தை ஏற்படுத்தும். அவரின் செயலால் அவர் மட்டுமல்லாமல் மற்ற அப்பாவி மக்களும் இதில் பாதிப்பிற்குள்ளாக நேரிடும்.

என்னதான் தானியங்கி கார இருந்தாலும் டிரைவர் சீட்டில் டிரைவர் நிச்சயம் இருக்க வேண்டும். அப்பொழுது தான் அவசர காலத்தில் துரிதமாக செயல்பட முடியும். தற்போது பட்டேலுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை காலத்தில் அவர் செய்த தவறை உணர்ந்து மீண்டும் அந்த தவறை செய்யமாட்டார் என நம்புகிறோம் " என கூறினர்.
என்னதான் தொழிற்நுட்பம் மேம்பட்டு எல்லா சூழ்நிலைகளிலும் இயங்கும் படி தானியங்கி கார்கள் வடிவமைக்கப்படிருந்தாலும் அதனால் சில சுழ்நிலைகளில் எப்படி செயல்பட வேண்டும் என தெரியாது அதனால் தானியங்கி காரை டிரைவர் இல்லாமல் ஓட்டுவது பாதுகாப்பு இல்லாதது.

இந்தியாவில் வரும் காலத்தில் தானிங்கி கார் வந்தாலும் நீங்களும் காரை டிரைவருடனே ஓட்டுங்கள் அப்பொழுது தான் அவசர கால கட்டத்திலும், காரின் உதிரிபாகங்கள் செயல்பாடு இழக்கும் சுழ்நிலையிலும் டிரைவர் காரை கட்டுப்பாட்டில் எடுக்க முடியும்.


Click it and Unblock the Notifications








