Just In
- 1 hr ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 3 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 5 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 6 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மும்பை- டெல்லி இடையே மிக அதிவேக ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகமாகிறது!
மும்பை- டெல்லி வழித்தடத்தில் மிக அதிவேக ராஜ்தானி ரயில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்மூலமாக, இந்த இரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
மும்பை- டெல்லி இடையே நாட்டின் மிக அதிவேகமான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ரயில் குறித்த கூடுதல் தகவல்களஐ இந்த செய்தியில் காணலாம்.
அதிவேக ரயில் சேவைகளை அறிமுகம் செய்வதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த அடிப்படையில், அதிவேகத்தில் செல்லும் திறன் படைத்த நவீன பெட்டிகள் கொண்ட புதிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை- டெல்லி வழித்தடத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வரும் தீபாவளி பண்டிகையின்போது இந்த ரயில் சேவைக்கு வர இருக்கிறது.
மும்பை- டெல்லி இடையிலான வழித்தடத்தில் தற்போது இரண்டு ராஜ்தானி ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆகஸ்ட் கிராந்தி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் மும்பை சென்ட்ரல்- புதுடெல்லி இடையே இயக்கப்படுகிறது.
இந்த நிலையில், மும்பை பந்த்ரா- புதுடெல்லி இடையில் மூன்றாவது அதிவேக ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ரயில் 13 மணிநேரத்தில் இரு நகரங்களையும் கடக்கும். இதன்மூலமாக, பயண நேரம் வழக்கமான ராஜ்தானி ரயிலைவிட இரண்டரை மணி நேரம் குறையும்.
இந்த புதிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் எல்எச்பி என்ற நவீன ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த ரயில் பெட்டிகள் அதிவேகத்தில் ஓடும் திறன் படைத்தது என்பதுடன், தடம் பிறழாமல் செல்லும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன.
மேலும், ரயில் விபத்தில் சிக்கினால் பயணிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 150 கிமீ வேகம் வரை இயக்க அனுமதிக்கப்படும்.இதனால், இந்த ரயிலின் சராசரி வேகம் மணிக்கு 95 கிமீ என்ற அளவில் இருக்கும்.
அடுத்த சில தினங்களில் இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வழக்கமாக 24 பெட்டிகள் வரை கோர்க்கப்பட்டு, இரண்டு ரயில் எஞ்சின்கள் பயன்படுத்தப்படும்.
ஆனால், புதிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் 14 பெட்டிகள் மட்டுமே கோர்க்கப்பட்டு, ஒரு ரயில் எஞ்சின் பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, இரண்டு ரயில்களின் செயல்திறன் மற்றும் வேகத்தை கணக்கிட்டு, புதிய ரயிலுக்கான கால அட்டவணை வெளியிடப்படும்.
தற்போது 6 நிறுத்தங்கள் வரை கொடுக்கப்படுகிறது. ஆனால், புதிய ரயிலுக்கு இரண்டு அல்லது மூன்று நிறுத்தங்கள் மட்டுமே கொடுக்கப்படும். இதே வழித்தடங்களில் மிக அதிவேக ரயில்களை இயக்குவதற்கும் ரயில்வே நிர்வாகம் முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
-
35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!