டிக்கெட் கேன்சல் பண்ணா இவ்வளவும் பணம் பிடிப்பாங்களா? பலருக்கும் இந்த தகவல் முழுசா தெரியாது!
இந்திய ரயில்வே, முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், முன்பதிவு கட்டணம், சூப்பர் ஃபாஸ்ட் கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி.யை திருப்பித் தருவதில்லை. பயண வகுப்பு எதுவாக இருந்தாலும், இந்த கட்டணம் கழிக்கப்படும். பதிவு செய்யும் போது வசூலிக்கப்படும் தொகையில் இந்த திரும்பப்பெற முடியாத கட்டணம் பற்றி பல பயணிகள் அறிந்திருக்க மாட்டார்கள். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பயணம் தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு கன்ஃபார்ம் செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்யும் போது, குறிப்பிட்ட கட்டணங்கள் கழிக்கப்படும். ஏ.சி./எக்ஸிகியூட்டிவ் சேர் கார் – ரூ. 240; ஏ.சி. 2 டியர் – ரூ. 200; ஏ.சி. 3 டியர் – ரூ. 180; ஸ்லீப்பர் வகுப்பு – ரூ. 120; இரண்டாம் வகுப்பு – ரூ. 60 (ஒரு நபருக்கு). ஆர்.ஏ.சி. அல்லது காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டுகளுக்கு ஒரு பயணிக்கு ரூ. 60 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பயண வகுப்பைப் பொறுத்து முன்பதிவு கட்டணங்கள் வேறுபடுகின்றன. இரண்டாம் வகுப்புக்கு ரூ. 15, ஸ்லீப்பர் வகுப்புக்கு ரூ. 20, ஏ.சி. சேர் கார் மற்றும் ஏ.சி. எகனாமிக்கு ரூ. 40, ஏ.சி. 2 டயர் க்கு ரூ. 50, ஏ.சி. ஃபர்ஸ்ட் மற்றும் எக்ஸிகியூட்டிவ் வகுப்புக்கு ரூ. 60 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரத்து செய்யும் போது இந்த கட்டணங்களை திரும்பப்பெற முடியாது.
சப்அர்பன் ரயில்களுக்கும் முன்பதிவு கட்டணம் உள்ளது. பயணிகள் இரண்டாம் வகுப்புக்கு ரூ. 15, ஸ்லீப்பர் வகுப்புக்கு ரூ. 20, முதல் வகுப்புக்கு ரூ. 50 கட்டணம் செலுத்த வேண்டும். டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், இந்த கட்டணங்கள் திரும்பப்பெற முடியாது.

ரயில்வே வாரியத்தின் திலீப் குமார் கூறுகையில், ரயில் பயணச் செலவைத் தவிர, பயணிகள் முன்பதிவு கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி.யை பதிவு செய்யும் போது செலுத்துகிறார்கள். ரத்து செய்யும் போது, அவர்கள் டிக்கெட் புக் செய்யும் வகுப்பைப் பொறுத்து நிலையான கட்டணங்கள் திரும்பப் பெறும் தொகையில் இருந்து கழிக்கப்படும். இருப்பினும், முன்பதிவு கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி. திரும்பப்பெற முடியாது.
சுமார் 20% பயணிகள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் டிக்கெட் பதிவு செய்த பின்னர் ரயில் முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்கிறார்கள். அவர்கள் தங்கள் கணக்கில் பணத்தைத் திரும்பப் பெறுகிறார்கள் என்றாலும், பதிவு செய்யும் போது வசூலிக்கப்பட்ட சில கட்டணங்கள் ரத்து செய்யும் போது திரும்பப்பெறாது என்பதைப் பலர் உணரவில்லை.

இந்திய ரயில்வே பதிவு செயல்முறையின் போது பயணிகளுக்கு வசதியை வழங்குவதற்காக இந்த கட்டணங்களை விதிக்கிறது. நீங்கள் முதல் ஏ.சி. இட ஒதுக்கீட்டை ரத்து செய்தாலும், ஆரம்பத்தில் செலுத்திய ரூ. 60 கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி. திரும்பப்பெறாது. இது போக கூடுதலாக டிக்கெட்டை கேன்சல் செய்வதற்கான கட்டணமும் நீங்கள் முன்பதிவு செய்த வகுப்பை பொருத்து கழிக்கப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த திரும்பப்பெற முடியாத கட்டணங்களைப் புரிந்துகொள்வது, இந்திய ரயில்வே மூலம் ரயில் டிக்கெட்டுகளை பதிவு செய்யும் போது மற்றும் ரத்து செய்யும் போது பயணிகள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும்.பலருக்கு வகுப்பு ரீதியிலான ரத்து கட்டணம் மட்டுமே கணக்கிடுகின்றனர். ஆனால் முன்பதிவு, மற்றும் ஜிஎஸ்டி கட்டணங்களை கணக்கிடுவதில்லை.


Click it and Unblock the Notifications









