எளிய கார்களில் வலம் வரும் இந்திய ஜாம்பவான்கள்: எந்த கார்கள் என தெரிந்தால் வியந்து போவீர்கள்..
இந்திய வணிக சாம்ராஜியத்தில் புகழ்பெற்று விளங்கும் இந்திய தொழில் அதிபர்கள் பலர் எளிய கார்களையே பயன்படுத்தி வருகின்றனர். ஆனந்த் மஹிந்திரா, ரத்தன் டாடா போன்ற வசதியான தொழில் அதிபர்கள் பயன்படுத்தும் எளிய கார்கள் குறித்து இந்த செய்தியில் காணலாம்.

இந்திய வணிக சாம்ராஜியத்தில் புகழ்பெற்று விளங்கும் இந்திய தொழில் அதிபர்கள் பலர் எளிய கார்களையே பயன்படுத்தி வருகின்றனர். ஆனந்த் மஹிந்திரா, ரத்தன் டாடா போன்ற வசதியான தொழில் அதிபர்கள் பயன்படுத்தும் எளிய கார்கள் குறித்து இந்த செய்தியில் காணலாம்.

பல தொழில் அதிபர்கள் கொண்ட நாடு இந்தியா தகவல் தொழில்நுட்பம், வாகனம் மற்றும் கல்வித்துறை என பல துறைகளில் சாதித்த தொழில் அதிபர்கள் உள்ளனர். இவர்கள் ஜாகுவார், ஃபெராரி போன்ற சொகுசு கார்களில்தான் வலம் வருவார்கள் என மக்களிடையே ஒரு கருத்து நிலவி வருகிறது.

ஆனால் உண்மையில் புகழ்பெற்ற பல தொழில் அதிபர்கள் எளிய கார்களில் தான் பயணம் செய்கின்றனர். இந்திய வணிக சாம்ராஜியத்தில் புகழ்பெற்ற ஆனந்த் மஹிந்திரா, ரத்தன் டாடா மற்றும் அசிம் பிரேம்ஜி போன்ற தொழில் அதிபர்கள் பயன்படுத்தும் கார்கள் குறித்து கார்டாக் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ரத்தன் டாட்டாவின் ஹோண்டா சிவிக்:
இந்திய தொழில் அதிபர்களில் மிகவும் பிரபலமானவர் டாட்டா நிறுவனத்தின் நிறுவனர் ரத்தன் டாட்டா. டாட்டா. இவரிடம் ஃபெராரி உலக புகழ்பெற்ற காரான கேடிலாக் மற்றும் ஃபெராரி கலிபோர்னியா, கிறைஸ்லர், மெர்ஸிடஸ் பல கார்கள் அவரிடம் உள்ளன. ஆனால் ரத்தன் டாட்டா எப்போதும் எளிமையாக தனது ஹோண்டா சிவிக் காரில் தான் பயணம் செய்கிறார்.

டாடா ஸ்டீல்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்கை என அனைத்து துறைகளில் தனது வெற்றியை நிலைநிறுத்திய டாடா ரத்தன் பல ஆடம்பர கார்கள் சொந்தமாக வைத்திருந்தாலும் இப்படி அவர் எளிய காரில் பயணம் செய்வது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆனந்த் மஹிந்திராவின் மஹிந்திரா டியூவி300:
ஆனந்த் மஹிந்திரா இவரை இந்தியாவில் தெரியாதவர் மிகவும் குறைவு என்றே கூறலாம். மஹிந்திரா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் இவர். மஹிந்திரா பல புகழ்பெற்ற எஸ்யூவி கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. முன்னணி கார் நிறுவனங்களின் எஸ்யூவி தயாரிப்பில் கடும் போட்டியை தந்து வருகிறது மஹிந்திரா நிறுவனம்.

அத்தகைய புகழ்பெற்ற மஹிந்திரா நிறுவனத்தை தலைமை தாங்கி வரும் ஆனந்த் மஹிந்திரா எளிமையாக மஹிந்திரா டியூவி 300 சப் 4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரைதான் பயன்படுத்தி வருகிறார். பல நவீன கார்களை அந்நிறுவனம் தயாரித்தாலும் ஆனந்த் மஹிந்திரா எளிமையான கார்களையே பயன்படுத்த விரும்புகிறார்.

நாராயண மூர்த்தியின் ஸ்கோடா லயூரா:
இந்திய தகவல் தொழில்நுட்ப துறையின் முடிசூடா மன்னனாக திகள்பவர் நாராயண மூர்த்தி. இன்போஸிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான இவர் தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியில் முக்கிய இடம் பிடித்தவர். தகவல் தொழில்நுட்ப துறையில் பயிலும் ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் இன்போஸிஸ் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதை கனவாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய செல்வாக்கினை உடைய நாராயண மூர்த்தி மிக எளிதாக கருப்பு நிற ஸ்கோடா லயூரா காரில்தான் அனைத்து இடத்திற்கும் செல்கிறார். மேலும் இவரிடம் மற்றொரு காராக மஹிந்திரா ஸ்கார்பியோ உள்ளது. பேர் புகழ் பல நிறைந்து இருந்தாலும் இவர் எளிமையான கார்களில் பயணம் செய்வதைதான் விரும்புகிறார்.

நந்தன் நில்கேனியின் டொயோட்டா இன்னோவா:
மேற்கண்ட நாராயண மூர்த்தியினை போன்று நந்தன் நில்கேனி இன்போஸிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர். இவர் இன்போஸிஸ் நிறுவன பணிகள் மட்டுமின்றி தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். இந்திய மக்களின் ஆதார் கார்டுகளை கையாளும் UIADI எனப்படும் இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையத்தினை அமைத்தவர் நந்தன் நில்கேனி.

இவர் பெருபாலும் டொயட்டாவின் கடைசி தலைமுறை இன்னோவா காரில்தான் பயணம் மேற்கொள்கிறார். மேலும் டொயோட்டா கேம்ரி காரினை பயன்படுத்துகிறார். நந்தன் மிகவும் எளிமையான வாழ்க்கை முறையை வழிநடத்தி வருவதாக அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஸிம் பிரேம்ஜியின் மெர்ஸிடெஸ் பென்ஸ் E-கிளாஸ்:
இந்திய தகவல் தொழில்நுட்ப துறையில் மிக புகழ்பெற்ற விப்ரோ நிறுவனத்தின் தலைவர்தான் அஸிம் பிரேம்ஜி. நாராயண மூர்த்தி மற்றும் நந்தன் நில்கேனி போல இவரும் தகவல் தொழில்நுட்ப துறையில் மிகவும் பிரபலமானவர். எப்போதும் எளிமையாக தனது மெர்ஸிடெஸ் பென்ஸ் E-கிளாஸ் காரில் தான் பயணம் செய்கிறார்.

மெர்ஸிடெஸ் பென்ஸ் E-கிளாஸ் எளிமையான காரா என நமக்கு கேள்வி எழலாம். ஆனால் அஸிம் பிரேம்ஜி தனது விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியரிடம் மெர்ஸிடெஸ் பென்ஸ் E-கிளாஸ் செகண்ட் ஹேண்டில் வாங்கி பயன்படுத்தி வருகிறார்.

குறைத்த அளவில் சொத்து சேர்ந்தாலே ஆடம்பர வாழ துவங்கும் சில மக்கள் மறதியில், மேற்கண்ட நபர்கள் அனைவருக்கும் கோடி கோடியாக சொத்து மதிப்பு, அளவற்ற பேர் புகழ் என அனைத்தும் இருந்தும் எளிமையான வாழ்க்கையே வாழ விரும்புவது அனைவரையும் வியக்க வைக்கிறது. இவர்களது எளிமையான வாழக்கை வருங்கால தொழில் அதிபர்களுக்கு சிறந்த பாடமாக விளங்குகிறது.


Click it and Unblock the Notifications








