உள்நாட்டு நுட்பத்தில் தயாரிக்கப்படும் இந்தியாவில் முதல் ரயில்... தனி எஞ்சின் தேவையில்லை!
உள்நாட்டு நுட்பத்தில் உருவாக்கப்படும் இந்தியாவின் முதல் ரயிலின் அறிமுகம் மற்றும் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.
முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் இந்தியாவின் முதல் ரயில் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ரயிலின் சிறப்பம்சங்கள் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

தற்போது நீண்ட தூர ரயில்களில் தனி எஞ்சின் இணைக்கப்படுகிறது. இந்த நுட்பத்திற்கு முற்றிலும் மாற்றாக புதிய ரயிலை இந்திய ரயில்வே துறை உருவாக்கி வருகிறது.

முற்றிலும் இந்திய நுட்பத்தில் தயாரிக்கப்படும் இந்த ரயில் 16 பெட்டிகளை கொண்டிருக்கும். மெட்ரோ ரயில் பெட்டிகளின் தாத்பரியத்தில் இந்த ரயில் தயாரிக்கப்படுகிறது.

அதாவது, இந்த ரயிலில் தனி எஞ்சினுக்கு பதிலாக, ஒவ்வொரு பெட்டியிலும் மோட்டார்கள் பொருத்தப்பட்டு, ரயில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

அதேநேரத்தில், மெட்ரோ ரயில்களை விட அதி வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்ததாக இருக்கும். மணிக்கு 160 கிமீ வேகம் வரை இந்த ரயில் செல்லும் வல்லமை கொண்டது.
Recommended Video


தனி எஞ்சின் இணைக்கப்படும் நீண்ட தூர ரயில்களை விட இந்த ரயிலின் செயல்திறன் மிக சிறப்பாக இருக்கும் என்று ரயில்வே மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த ரயிலில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு இருக்கும். ரயில் நின்று கிளம்பும்போது தானியங்கி முறையில் கதவுகள் திறந்து மூடும் வசதி கொண்டது.

முற்றிலும் குளிர்சாதன வசதி, பெரிய கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் சவுகரியமான இருக்கைகளுடன் கட்டமைக்கப்பட உள்ளது. முதலில் சேர் கார் எனப்படும் இருக்கை வசதி கொண்டதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பின்னர், படுக்கை வசதி கொண்ட மாடலிலும் இந்த ரயில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பயோ டாய்லெட் இந்த ரயிலின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று. இதன் தயாரிப்பு செலவீனமும் மிக குறைவானதாக தெரிவிக்கப்படுகிறது.

டெல்லி- சண்டிகர் மற்றும் டெல்லி- லக்ணோ வழித்தடங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு டிசம்பரில் பயன்பாட்டுக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








