விண்வெளியில் இந்தியா நடத்தப்போகும் அதிரடி இதுதான்... அமெரிக்கா, சீனாவை மிரட்டும் நம்ம ஊர்க்காரர்...

உலக நாடுகள் எல்லாம் திணறி கொண்டிருக்கும் ஒரு தொழில்நுட்பத்தை மிக வெற்றிகரமாக செயல்படுத்தி, விண்வெளியில் இந்தியா அதிரடி காட்டவுள்ளது.

உலக நாடுகள் எல்லாம் திணறி கொண்டிருக்கும் ஒரு தொழில்நுட்பத்தை மிக வெற்றிகரமாக செயல்படுத்தி, விண்வெளியில் இந்தியா அதிரடி காட்டவுள்ளது. இதற்கு காரணமான நம்ம ஊர்க்காரர் யார்? என தெரிந்தால் நீங்கள் பெருமைப்படக்கூடும்.

விண்வெளியில் இந்த சாதனையை இந்தியா படைக்க காரணம் இவர்தான்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

இந்தியாவின் விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ (ISRO-Indian Space Research Organisation), தொடர்ச்சியாக பல்வேறு சாதனைகளை படைத்து கொண்டே வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் எல்லாம், இஸ்ரோவின் வளர்ச்சியை பிரம்மிப்புடன் பார்த்து கொண்டுள்ளன.

விண்வெளியில் இந்த சாதனையை இந்தியா படைக்க காரணம் இவர்தான்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

இஸ்ரோ அமைப்பின் சார்பில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பூமியின் துணைக்கோளான சந்திரனுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் ஆகிய செயற்கைகோள்களின் வெற்றி உலக நாடுகள் அனைத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

விண்வெளியில் இந்த சாதனையை இந்தியா படைக்க காரணம் இவர்தான்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

சந்திராயன் மற்றும் மங்கள்யான் செயற்கைகோள்களின் வெற்றியின் மூலமாக இஸ்ரோ அமைப்பு பல்வேறு சாதனைகளை படைத்தது. என்றாலும் இந்தியா இதுவரை விண்வெளிக்கு மனிதர்களை மட்டும் அனுப்பி வைத்ததே கிடையாது.

விண்வெளியில் இந்த சாதனையை இந்தியா படைக்க காரணம் இவர்தான்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

உலக அளவில் இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன. எனவே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைக்க போகும் நான்காவது நாடு எது? என்பதை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.

விண்வெளியில் இந்த சாதனையை இந்தியா படைக்க காரணம் இவர்தான்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

அனேகமாக அது நமது இந்தியாதான் என அடித்து சொல்லலாம். ஏனெனில் இந்தியா வெகு விரைவில், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி வைக்கவுள்ளது. இதற்காக இஸ்ரோ முடுக்கி விட்டுள்ள ஒரு திட்டம்தான் ககன்யான் (Gaganyaan).

விண்வெளியில் இந்த சாதனையை இந்தியா படைக்க காரணம் இவர்தான்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

மிகவும் குறைந்த செலவு:

செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் செயற்கைகோளை கடந்த 2013ம் ஆண்டில் இந்தியா அனுப்பியது. இதன் வெற்றியால் உலக நாடுகள் வாயடைத்து போயின. ஏனெனில் மங்கள்யான் திட்டத்தை இஸ்ரோ அமைப்பு வெறும் 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் செயல்படுத்தி வெற்றி கண்டது.

விண்வெளியில் இந்த சாதனையை இந்தியா படைக்க காரணம் இவர்தான்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

ஆனால் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா, செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைகோளை அனுப்ப சுமார் 4,000 கோடி ரூபாயை செலவிட்டது. இஸ்ரோவின் பட்ஜெட்டை காட்டிலும், இது சுமார் 9 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளியில் இந்த சாதனையை இந்தியா படைக்க காரணம் இவர்தான்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

இவ்வாறு மிகவும் குறைந்த செலவில், விண்வெளி ஆய்வு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் இஸ்ரோவிற்கு நிகர் இஸ்ரோதான். இந்த வகையில், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தையும் மிகவும் குறைவான செலவில்தான் இந்தியா செயல்படுத்தவுள்ளது.

விண்வெளியில் இந்த சாதனையை இந்தியா படைக்க காரணம் இவர்தான்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

அதாவது ககன்யான் திட்டத்தை 10 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெற்றிகரமாக செயல்படுத்தி முடிக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இது ஒரு சில ஹாலிவுட் படங்களின் பட்ஜெட்டை காட்டிலும் மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளியில் இந்த சாதனையை இந்தியா படைக்க காரணம் இவர்தான்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

ஆனால் இந்த பட்ஜெட்டை கொண்டு நமது நாட்டு வீரர்கள் விண்வெளிக்கு சென்று திரும்பி வரவுள்ளனர். ஒரு சில ஹாலிவுட் படங்களின் பட்ஜெட்டை வைத்து கொண்டு, அதிக ரிஸ்க் நிறைந்த விண்வெளி பயணத்தை மேற்கொள்ள இருப்பது பெருமைப்பட வேண்டிய விஷயம்தான்.

விண்வெளியில் இந்த சாதனையை இந்தியா படைக்க காரணம் இவர்தான்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

அதே நேரத்தில் இதற்கு முன்பாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ள ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில்தான் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பின என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.

விண்வெளியில் இந்த சாதனையை இந்தியா படைக்க காரணம் இவர்தான்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பம்:

ககன்யான் திட்டத்திற்கான தொழில்நுட்பம் முழுவதும் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாராகிறது. ஜிஎஸ்எல்வி மார்க் III (GSLV Mark III) என்ற ராக்கெட் மூலம்தான் ககன்யான் விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

விண்வெளியில் இந்த சாதனையை இந்தியா படைக்க காரணம் இவர்தான்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

இதில்தான் நம் நாட்டு விண்வெளி வீரர்கள், விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். ககன்யான் விண்கலம், ஜிஎஸ்எல்வி மார்க் III ராக்கெட் ஆகியவற்றுக்கான ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் தொழில்நுட்பங்கள் இந்தியாவிலேயே தயார் செய்யப்படுகின்றன.

விண்வெளியில் இந்த சாதனையை இந்தியா படைக்க காரணம் இவர்தான்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

இதன்மூலம் பட்ஜெட் குறையும். அத்துடன் எதற்கும் வெளிநாடுகளை சார்ந்து இருக்காமல், முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயார் செய்யப்பட்ட தொழில்நுட்பம் என்ற பெருமையும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளியில் இந்த சாதனையை இந்தியா படைக்க காரணம் இவர்தான்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

பெண்களுக்கும் வாய்ப்பு:

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி அவர்களை மீண்டும் பூமிக்கு திரும்ப அழைத்து வருவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. அத்தகைய ராக்கெட்டை வடிவமைக்க முடியாமல்தான் உலகின் பல்வேறு நாடுகளும் திணறி கொண்டுள்ளன.

விண்வெளியில் இந்த சாதனையை இந்தியா படைக்க காரணம் இவர்தான்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

ஏனெனில் இதில் சிறு தவறு நிகழ்ந்து விட்டால் கூட, விண்வெளி வீரர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும். இதன் காரணமாகதான் இதுவரை மூன்று நாடுகளால் மட்டுமே (ரஷ்யா, அமெரிக்கா, சீனா) விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி வைக்க முடிந்துள்ளது.

விண்வெளியில் இந்த சாதனையை இந்தியா படைக்க காரணம் இவர்தான்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

ஆனால் ககன்யான் திட்டத்தின் மூலமாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறவுள்ளது. மொத்தம் 3 இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பி வைக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இவர்களில் ஒருவர் பெண்ணாக இருக்கலாம் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

விண்வெளியில் இந்த சாதனையை இந்தியா படைக்க காரணம் இவர்தான்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

ககன்யான் திட்டத்தின் மூலமாக பெண்களையும் விண்வெளிக்கு அனுப்ப இந்தியா பரிசீலித்து வருவது பாராட்டுக்களை பெற்றுள்ளது. சர்வதேச அளவில் இதுவரை மொத்தம் 550 பேர் விண்வெளிக்கு பயணம் செய்துள்ளனர். இதில், சுமார் 60 பேர் பெண்கள்.

விண்வெளியில் இந்த சாதனையை இந்தியா படைக்க காரணம் இவர்தான்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

இவர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கல்பனா சாவ்லாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 2003ம் ஆண்டு அமெரிக்காவின் கொலம்பியா விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார்.

விண்வெளியில் இந்த சாதனையை இந்தியா படைக்க காரணம் இவர்தான்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

ஆனால் பூமிக்கு திரும்புகையில் ஏற்பட்ட விபத்தில் கொலம்பியா விண்கலம் வெடித்து சிதறியது. இதில், கல்பனா சாவ்லா உயிரிழந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய தவறுகள் நேரமால் இருக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு மூச்சாக பணியாற்றி வருகின்றனர்.

விண்வெளியில் இந்த சாதனையை இந்தியா படைக்க காரணம் இவர்தான்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

இதன் ஒரு பகுதியாக, விண்வெளி பயணம் மேற்கொள்ளவுள்ள 3 இந்தியர்களுக்கு கடுமையான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. அவசர காலங்களில் நிலைமையை எப்படி சமாளிப்பது? மருத்துவ ரீதியிலான தேவை ஏற்பட்டால், மூவரும் இணைந்து அதனை எப்படி எதிர்கொள்வது? என்ற பயிற்சிகளும் இதில் அடங்கும்.

விண்வெளியில் இந்த சாதனையை இந்தியா படைக்க காரணம் இவர்தான்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

வரலாற்று நிகழ்வாக அமையும்:

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்துதான், ஜிஎஸ்எல்வி மார்க் III ராக்கெட் ககன்யான் விண்கலத்தை சுமந்து கொண்டு விண்வெளிக்கு பயணம் மேற்கொள்கிறது. அதற்கான நாள் இன்னும் வெகு தொலைவில் இல்லை.

விண்வெளியில் இந்த சாதனையை இந்தியா படைக்க காரணம் இவர்தான்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

2021ம் ஆண்டு சுதந்திர தினத்திற்கு முன்பாக ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி விட வேண்டும் என இஸ்ரோ முடிவு செய்துள்ளது. எனவே அதற்கு ஏற்ப பணிகள் அனைத்தும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

விண்வெளியில் இந்த சாதனையை இந்தியா படைக்க காரணம் இவர்தான்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

நமது வீரர்கள் விண்வெளியில் குறைந்தபட்சம் ஒரு வார காலமாவது தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள். அதன்பின் அவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள். ககன்யான் திட்டத்தின் மூலம் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் வளர்ச்சியடையும்.

விண்வெளியில் இந்த சாதனையை இந்தியா படைக்க காரணம் இவர்தான்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது என்பது சவாலான பணி. எனவே ககன்யான் விண்கலம் முதல் இரு முறை ஆள் இல்லாமலேயே ஏவி சோதனை செய்யப்படும். அதன்பின்தான் நம் நாட்டு வீரர்கள் ககன்யான் விண்கலத்தில், விண்வெளிக்கு பயணம் மேற்கொள்வார்கள்.

விண்வெளியில் இந்த சாதனையை இந்தியா படைக்க காரணம் இவர்தான்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் ககன்யான் திட்டம் ஒரு மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியா இதுவரை நிலவு (சந்திராயன்) மற்றும் செவ்வாய் (மங்கள்யான்) ஆகிய கோள்களுக்கு செயற்கைகோள்களை மட்டுமே அனுப்பியுள்ளது.

விண்வெளியில் இந்த சாதனையை இந்தியா படைக்க காரணம் இவர்தான்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

தற்போதுதான் முதல் முறையாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப போகிறது. இதன்பின் நிலவு மற்றும் செவ்வாய் கோள்களுக்கும் மனிதர்களை அனுப்பி ஆய்வு நடத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இதுபோன்ற சவால் நிறைந்த திட்டங்களுக்கு ககன்யான் திட்டத்தின் வெற்றி தேவையான ஒன்றாக உள்ளது.

விண்வெளியில் இந்த சாதனையை இந்தியா படைக்க காரணம் இவர்தான்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

எனவே ககன்யான் திட்டத்தை வெற்றியடைய செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் மிக தீவிரமாக முயன்று வருகின்றனர். இஸ்ரோவின் பெரும்பாலான திட்டங்கள் வெற்றியையே சந்தித்துள்ளன என்பது இங்கே குறிப்பிட்டாக வேண்டிய விஷயம்.

விண்வெளியில் இந்த சாதனையை இந்தியா படைக்க காரணம் இவர்தான்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

வரும் 2021ம் ஆண்டில் இந்தியா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி விட்டால், அதன்பின் அடுத்த இரண்டு ஆண்டுகளில், அதாவது 2024ம் ஆண்டில் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப முடியும். அதன்பின்பாக செவ்வாய் கிரகத்திற்கும் வெகு விரைவில் மனிதர்களை அனுப்பி வைத்து விட முடியும்.

விண்வெளியில் இந்த சாதனையை இந்தியா படைக்க காரணம் இவர்தான்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

தமிழர்கள் ஆதிக்கம்:

இஸ்ரோ அமைப்பின் தலைவராக தற்போது சிவன் என்பவர் உள்ளார். இவர் தமிழகத்தை சேர்ந்தவர். இவரது தலைமையின் கீழ்தான் ககன்யான் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர சந்திராயன் செயற்கைகோளின் திட்ட இயக்குனராக இருந்த மயில்சாமி அண்ணாதுரையும் தமிழகத்தை சேர்ந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Thursday, January 10, 2019, 13:42 [IST]
English summary
India's First Manned Mission Gaganyaan Will Make All Of Us Proud. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+