இந்திய ரயில்வேயில் மோடி அரசு செய்த சாதனை... உலகில் இப்படி ஒரு விஷயத்தை இது வரை யாரும் செய்தது இல்லை...
இந்திய ரயில்வே நிர்வாகம் ரயில் விபத்துக்களை தடுக்கும் வகையில் கவச் என்ற புதிய கருவியை உருவாக்கியுள்ளது. இந்த கருவி ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்வதால் ஏற்படும் விபத்துக்கள் முற்றிலுமாக தவிர்க்கப்படும். இது குறித்த முழு விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் மிகப்பெரிய நெட்வோர்க் என்றால் அது ரயில்வே நெட்வோர்க். இந்தியாவின் பெரும்பாலான பகுதியை இணைக்கும் படி இந்த ரயில்வே தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு அதில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் லட்சக்கணக்கான பயணிகள், ஆயிரக்கணக்கான ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ரயில்வே துறை ஒவ்வொரு முறையும் அனைத்து விதமாகவும் மேம்பட்டுக்கொண்டே வருகிறது. இதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக இந்தியாவில் ரயில்வே துறையில் ரயில் விபத்துக்களைத் தடுக்கும் புதிய கருவியைக் கண்டுபிடிக்கக் கடந்த 2012ம் ஆண்டு முதல் ஆய்வுகள் நடத்தப்படுகிறது.

உலகில் இப்படியாக ஐரோப்பா ரயில்வே சிஸ்டம் தான் இருக்கிறது. European Train Protection and Warning System என்ற பெயர் கொண்ட இதற்குப் போட்டியாக இந்தியாவில் இந்திய ரயில்வேக்கு சொந்தமான தனி பாதுகாப்பு சிஸ்டத்தை உருவாக்க ஆய்வு படி துவங்கப்பட்ட நிலையில் தற்போது அது வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது.

Train Collision Avoidance System என முதலில் பெயரிடப்பட்ட இந்த சிஸ்டத்திற்கு இந்திய ரயில்வே கவச் எனப் பெயரை மாற்றியது. கவசம் என்ற சொல்லின் திரிபையே கவச் என மாற்றியுள்ளது. இந்த சிஸ்டம் எப்படி இயங்குகிறது. இதனால் எப்படி ரயில் விபத்தைத் தவிர்க்க முடியும்? எனப் பல விஷயங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்த சிஸ்டத்தை எளிமையாக விளக்க வேண்டும் என்றால் ரயில்வே இன்ஜின்களில் ஒரு எலெக்ட்ரானிக் கருவியும் ஒரு ரோடியோ ஃப்ரீக்கன்ஸியை கண்டுபிடிக்கும் கருவியும் பொருத்தப்பட்டிருக்கும். அதே போல ரயில் தண்டவாளங்களில் இப்படியான கருவிகள் இருக்கும்.

ரயில் பயணிக்கும் போது இவை ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளும். அப்படியாக ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிர்த் திசையில் இரண்டு ரயில்கள் நெருங்கிவந்தால் இந்த சிஸ்டம் உடனடியாக இரண்டு ரயில்களுக்குச் சிக்கல் அளிக்கும் உடனடியாக இந்த ரயில் ஓட்டுநருக்கு சிக்னல் அளிக்கும் அவர் ரயிலை நிறுத்த வேண்டும். அவர் ரயிலை நிறுத்தாவிட்டாலும் தானா இந்த சிஸ்டமே இரண்டு ரயில்களிலும் பிராக்கைப் பிடித்து ரயிலை நிறுத்தி விடும்.

இந்த சிஸ்டம் இதற்காக மட்டுமல்ல சிக்னல்களில் ரயில்கள் நிற்காமல் செல்வது, கடுமையான பனி மூட்டும் இருக்கும் நேரங்களில் ரயில் டிரைவருக்கு தூரமாக எதுவும் தெரியாத நிலையில் ரயிலைப் பாதுகாப்பாக இயக்குவது எனப் பல விஷயங்களுக்காக இது பயன்படுகிறது.

இந்திய ரயில்வே தயாரித்திருக்கும் இந்த கவச் என்ற சிஸ்டம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் European Train Protection and Warning System-ல் இருக்கும் பல விஷயங்கள் இதிலும் இருக்கிறது. இந்த கவச் சிஸ்டம் தற்போது பாதுகாப்பு தர கட்டுப்பாட்டு அளவில் 4வது லெவலில் இருக்கிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உலகிலேயே குறைந்த விலை ரயில் பாதுகாப்பு சிஸ்டமாக தற்போது கவச் சிஸ்டா ம்தான் இருக்கிறது. ஐரோப்பிய சிஸ்டம் விலை மிகவும் அதிகம். பல நாடுகள் அதன் விலை காரணமாக அதை வாங்கத் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்தியாவில் இது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் இதே சிஸ்டம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் என்றும் எதிர்பார்க்கலாம். தற்போது தயாரிக்கப்பட்டுள்ள கவச் தொழிற்நுட்பம் 4ஜி தகவல் பரிமாற்று தொழிற்நுட்பத்தில் இயங்கும் திறன் கொண்டது. இதனால் இந்த கருவியை ஏற்கனவே ஐரோப்பிய பாதுகாப்பு சிஸ்டம் உள்ள கட்டமைப்பிலும் பயன்படுத்த முடியும்.

தற்போது லக்னோவை உள்ள இந்திய ரயில்வேயின் RDSO என்ற அமைப்பு தனியார் நிறுவனங்கள் மூலம் ஒவ்வொரு கட்டமாக இந்தியாவில் உள்ள ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் ரயில் இன்ஜின்களில் பொருத்தும் பணியை செய்துவருகின்னர். இந்த கவச் சிஸ்டத்தை பொருத்த ஒரு கிலோ மீட்டருக்கு ரூ20 லட்சம் வரையிலும், ஒரு இன்ஜினிற்கு ரூ60 லட்சம் வரையிலும் செலவாகிறது.

முதற்கட்டமாக இந்த கவச் சிஸ்டம் தெற்கு மத்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள 1,445 கி.மீ மற்றும் 65 இன்ஜினகளில் பொருத்தப்பட்டது. இரண்டாவது கட்டமாக டில்லி- மும்பை மற்றும் டில்லி - ஹவுரா ஆகிய பகுதிகளை இணைக்கும் ரயில் பாதைகளில் இணைக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக இந்த கவச் சிஸ்டமை இன்ஸ்டால் செய்ய வடக்கு ரயில்வே, வடக்கு மத்திய ரயில்வே, மேற்கு மத்திய ரயில்வே, கிழக்கு மத்திய ரயில்வே, கிழக்கு ரயில்வே, மேற்கு ரயில்வே ஆகிய ரயில் நிர்வாகங்கள் டென்டரை வெளியிட்டுள்ளனர். இந்த கவச் சிஸ்டம் இன்ஸ்டால் செய்யப்பட்டுவிட்டால் ரயில்கள் எல்லாம் 160 கி.மீ வேகத்தில் பயணிக்க அனுமதிக்கப்படும்.

இந்த கவச் சிஸ்டம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த கவச் சிஸ்டத்தில் 10 ஆயிரம் வருடங்களுக்கு முறை வேண்டுமானால் தவறு நடக்கலாம் ஒரு முறை சோதனை முடிந்துவிட்டால் அடுத்து கவச் சிஸ்டம் சிறப்பாகச் செயல்படத் துவங்கிவிடும். என்றும் இந்த சிஸ்டம் இந்தாண்டு இறுதிக்குள் 2000 ரயில் ரூட்களிலும், அடுத்த நிதியாண்டில் 4000-5000 ரூட்களிலும் செயல்படத் துவங்கிவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இது ETCS-Level 2 சிஸ்டத்திற்கு இணையாக இருக்கும் நிலையில் இதை மேம்படுத்தும் முயற்சியிலும் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளது. பிரதமர் மோடி 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த திட்டம் குறித்து பேசிய போது அடுத்தடுத்த மேம்பாடுகளில் மேலும் இந்த சிஸ்டம் குறைந்த விலையில் தயார் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

தற்போது ஐரோப்பாவிற்குப் போட்டிப் போடும் வகையில் உலகிலேயே விலை குறைந்த ரயில்வே பாதுகாப்பு சிஸ்டத்தை இந்திய ரயில்வே தயார் செய்துள்ளது. இந்திய ரயில்வேவுக்கான மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இந்த சிஸ்டம் ஐரோப்பிய சிஸ்டத்தின் பயன்பாட்டைச் சர்வதேச அளவில் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








