Just In
- 16 min ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 5 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 5 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 6 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சந்திராயன் 2 ... ஆகாயத்தில் புதிய வரலாறு எழுதப்போகும் இஸ்ரோ!
சந்திராயன்-2 விண்கலத்தில் வைத்து அனுப்பப்பட்ட லேண்டர் சாதனம் நாளை அதிகாலை நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது. இதன்மூலமாக இஸ்ரோ அமைப்பு உலக அரங்கில் புதிய வரலாறை எழுத இருக்கிறது. இந்த நிகழ்வு குறித்த சிறப்புத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
நிலவை பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இதுவரை அனுப்பப்பட்ட 'லேண்டர்' சாதனங்கள் அனைத்துமே வட துருவப் பகுதியில்தான் தரை இறங்கி உள்ளன. ஆனால், உலக விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக சந்திராயன்-2 திட்டத்தின் மூலமாக நிலவின் தென்துருவ பகுதிகளில் ஆராய்ச்சியை நடத்த இருக்கிறது இஸ்ரோ அமைப்பு.
இதற்காக, கடந்த ஜூலை மாதம் 22ந் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன்-2 விண்கலம் பல்வேறு சவால்களை கடந்து நிலவில் தரை இறங்குவதற்கான இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. புவி வட்டப் பாதையில் இருந்து 5 முறை வட்டப்பாதை உயர்த்தப்பட்டது. கடந்த மாதம் 14ந் தேதி புவி வட்டப்பாதையிலிருந்து விலகிய சந்திராயன் 2 விண்கலம் விலகி, கடந்த மாதம் 20ந் தேதி நிலவு வட்டப்பாதையை அடைந்தது.
இதைத்தொடர்ந்து, நிலவை மேற்பரப்பை நெருங்கும் வகையில் சந்திராயன் 2 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதையில் மாற்றம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 2ந் தேதி, சந்திராயன்-2 விண்கலத்தில் வைத்து அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் தனியாக பிரிந்து நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்தது. இந்த நிலையில், நிலவுக்கு 30 கிமீ உயரத்தில் வரும்போது, விக்ரம் என்ற பெயரிலான லேண்டர் சாதனம் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்க உள்ளது.
இந்த நிலையில், இறுதிக்கட்டமாக, நாளை அதிகாலை 1.40 மணி முதல் 1.55 மணிக்குள்ளாக நிலவின் தென்துருவப் பகுதியில் உள்ள மான்சினஸ்- சி மற்றும் சிம்பிலியஸ்-எஸ் என்ற பெயரில் குறிப்பிடப்படும் இரண்டு பெரிய பள்ளங்களுக்கு நடுவில் விக்ரம் என்ற அந்த லேண்டர் சாதனம் 70 டிகிரி கோணத்தில் தரையிறக்கப்படும்.
தரையிறங்கும்போது விக்ரம் லேண்டர் கருவியானது வினாடிக்கு 7 கிமீ அல்லது மணிக்கு 21,600 கிமீ வேகத்தில் நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்கும். அதாவது, சாதாரண விமானங்களை விட 40 மடங்கு கூடுதல் வேகத்தில் அது பயணிக்கும். அதேவேளையில், நிலவை நெருங்கும் தருணத்தில், தனது வேகத்தை வினாடிக்கு 2 மீட்டர் அல்லது மணிக்கு 7 கிமீ வேகத்திற்கு குறைத்துக் கொள்ளும்.
இதன்மூலமாக, மிக பாதுகாப்பாக விக்ரம் என்ற அந்த லேண்டர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட உள்ளது. லேண்டரின் வேகத்தை குறைப்பதுதான் மிக அதிக சவால்களை கொண்ட விண்வெளி ஆராய்ச்சிப் பணியாக கருதப்படுகிறது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக உலகமே ஆவலாக உற்று நோக்கி வருகிறது.
விக்ரம் என்ற பெயரிடப்பட்ட அந்த லேண்டர் நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கிய பின்னர், நாளை அதிகாலை 5.30 முதல் 6.30 மணிக்குள், அதில் உள்ள பிரக்யான் என்ற கருவி வெளிவரும். இந்த கருவி நிலவின் மேற்பரப்பில் நகர்ந்து சென்று நிலவின் மேற்பரப்பு குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள இருக்கிறது.
நிலவின் மேற்பரப்பில் உள்ள நீர் ஆதாரம், பனிக்கட்டிகளின் தடிமன், நிலநடுக்க வாய்ப்பு, கனிம வளங்கள், தட்பவெப்பம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. பிரக்யான் கருவி மொத்தம் 15 நாட்கள் மட்டுமே ஆயுட்காலம் கொண்டது. அதற்குள்ளாக தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை செய்து முடிக்கும்.
இந்த சவாலான சந்திராயன்-2 திட்டத்தை இஸ்ரோ அமைப்பு ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்ற இருக்கிறது. அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் நிலவு ஆராய்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை விட இது 20 மடங்கு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, சீனா மற்றும் ஒருங்கிணைந்த ரஷ்யாவுக்கு பின்னர் நிலவின் மேற்பரப்பில் லேண்டர் சாதனத்தை தரை இறக்கும் நாடுகளில் இந்தியாவும் இடம்பெற இருக்கிறது. அத்துடன், இந்த பெருமைமிகு திட்டத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் உள்பட பல்வேறு தமிழ் விஞ்ஞானிகளின் பங்களிப்பு முக்கியமாக இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!