Just In
- 25 min ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 1 hr ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 1 hr ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 2 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News உங்கள் தொகுதி வேட்பாளர்களின் சொத்துக்கள், கடன்கள், குற்ற வழக்குகளை பற்றி முழுமையாக எப்படி அறிவது?
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Movies கேமரா மேனால் குழந்தையோடு தெருவில் நின்றேன்.. வாழ்க்கையே போச்சு..டான்சர் விஜயலட்சுமி கண்ணீர் பேட்டி!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இந்திய பொறியியல் வல்லமையை பரைசாற்றும் சிக்னேச்சர் பாலம்: சுவாரஸ்யத் தகவல்கள்!
டெல்லியில் திறக்கப்பட்டு இருக்கும் சிக்னேச்சர் பாலம் 154 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பாலத்தில் 124 இரும்பு கற்றைகள் மூலமாக தாங்கி நிற்கிறது.
டெல்லி, வஜிராபாத்தில் யமுனை ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ள 'சிக்னேச்சர்' பாலம் நேற்று முறைப்படி மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இது வழக்கமான பாலங்களை போல அல்லாமல் பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது. அதனை இந்த செய்தியில் காணலாம்.
ஏற்கனவே இருந்த குறுகிய பாலத்தில் நடந்த கோர விபத்தில் பஸ் ஒன்று ஆற்றில் கவிழ்ந்து 20க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் உயிரிழந்தனர். இதனையடுத்து, இந்த இடத்தில் பாலம் அமைக்க அப்போதைய முதல்வர் சாகிப் வர்மா திட்டமிட்டார்.
இதையடுத்து, இந்த இடத்தில் 8 வழித்தடத்துடன் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 2004ம் ஆண்டு இந்த பாலத்தை அமைப்பதற்கு அப்போதைய முதல்வர் ஷீலா தீட்சித் அறிவிப்பு வெளியிட்டார். 2007ம் ஆண்டுதான் அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தது. அதன்பிறகு பல்வேறு இழுபறிகளுக்கு பின்னர், 14 ஆண்டுகளில் இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
வட கிழக்கு டெல்ல மற்றும் காஸியாபாத் நகரங்களை இணைக்கும் விதத்தில், வஜிராபாத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது. டெல்லியின் வெளிவட்டச் சாலைக்கு முக்கிய இணப்பை இந்த பாலம் வழங்க இருப்பதும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அமையும். பயண நேரமும் 45 நிமிடங்களிலிருந்து 10 நிமிடங்களாக குறையும்.
இந்த பாலம் கேபிள்கள் மூலமாக பிணைக்கப்பட்ட தொங்கு பாலமாக அமைக்கப்பட்டு இருப்பது முதல் சிறப்பு. இந்த பாலத்தில் இரும்பு கற்றைகளால் ஆன 124 கேபிள்கள் மூலமாக பாலம் தாங்கப்படுகிறது. இந்த இரும்பு கற்றைகள் 6,300 டன் எடையை தாங்கும் வல்லமை கொண்டது. 460 டன் எடையிலான வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்லலாம்.
இந்த பாலத்தின் நடுவில் 154 மீட்டர் உயரத்திற்கு மிகப்பெரிய கோபுரம் கட்டப்பட்டு இருக்கிறது. இந்த கோபுரம்தான் கேபிள் மூலமாக பாலத்தை தாங்கி நிற்கிறது. பார்ப்பதற்கு இருகரம் கூப்பிய கைகள் போன்ற சாயலில் இந்த கோபுரம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பாலத்தின் நடுவில் கோபுரத்திற்கு மேலே செல்வதற்கு லிஃப்ட் வசதி செய்யப்பட்டு இருக்கிறது. இதிலுள்ள 4 லிஃப்ட்டுகள் மூலமாக 50 பேர் செல்ல முடியும். கோபுரத்தின் உச்சிக்கு சென்று, அங்குள்ள மாடத்தின் மூலமாக டெல்லியின் அழகையும், யமுனை ஆற்றின் அழகையும் கண்டு ரசிக்கலாம். பிரான்ஸில் உள்ள ஈபிள் டவரிலிருந்து பார்ப்பது போன்ற அனுபவத்தை இது தரும்.
இந்த பாலமானது ரூ.1,344 கோடி செலவில் அமைக்கப்பட்டு இருக்கிறது. மேற்கு பகுதியில் 1.5 கிமீ தூரமும், கிழக்கு பகுதியில் 1.8 கிமீ தூரத்திற்கும் நீளம் கொண்டதாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பாலத்தில் சைக்கிளில் செல்பவர்களுக்கு தனி வழித்தடம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
டெல்லி மக்களுக்கு தீபாவளி பரிசாக திறக்கப்பட்டு இருக்கும், இந்த பாலம் போக்குவரத்திற்கு மிகப்பெரிய தீர்வாக அமைந்துள்ளதுடன், சுற்றுலாத் தலமாகவும் அமைகிறது. இதன்மூலமாக, பொருளாதாரம் மேம்படுவதற்கும், இந்த பாலம் சிறப்பானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் புதிய அடையாளமாகவும், இந்திய பொறியியல் துறையின் வல்லமையை பரைசாற்றும் விதமாகவும் இந்த பாலம் அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!