Just In
- 9 min ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 1 hr ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- 1 hr ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- 4 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
Don't Miss!
- News நிலைமை கைமீறிடுச்சி.. அமெரிக்கா, யு.கேவிற்கு போன அதிகாரபூர்வ அணு அட்டாக் வார்னிங்! யார் அனுப்புவது?
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Movies மாட்டிக்கினாரு ஒருத்தரு.. சமந்தாவின் மாஜி கணவர் அந்த நடிகையுடன் டேட்டிங்கா?.. தீயாய் பரவும் பிக்ஸ்!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மொட்டைமாடியில் ஹெலிகாப்டரை இறக்கிய ரகசியத்தை சொன்ன கடற்படை விமானி!!
கேரள மீட்புப் பணியில் துணிச்சலமாக மொட்டைமாடியில் ஹெலிகாப்டரை இறக்கி பலரையும் மீட்ட கடற்படை பைலட் அபிஜித் கருட்டிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த விஷயத்தில் பயன்படுத்தப்பட்ட யுக்தி குறித்து
கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை படகு மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மிக மோசமான நிலப்பகுதிகளில் சிக்கியிருப்போரை கடற்படை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
மிகவும் சவாலான இடங்களிலும் மீட்புப் பணிகளை அனாயசமாக செய்து வருகின்றனர். அந்த வகையில், சாலக்குடியில் மொட்டைமாடி ஒன்றில் ஹெலிகாப்டர் தாழ்வாக இறக்கப்பட்டு 26 பேரை மீட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் சிலாகித்து பேசப்பட்டு வருகிறது.
|
இந்த மீட்புப் பணியில் மிகவும் துணிச்சலமாக மொட்டைமாடியில் ஹெலிகாப்டரை இறக்கி பலரையும் மீட்ட கடற்படை பைலட் அபிஜித் கருட்டிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த விஷயத்தில் பயன்படுத்தப்பட்ட யுக்தி குறித்து ஹெலிகாப்டரை இயக்கிய பைலட் அபிஜித் கருட் கூறி இருக்கிறார்.
பொதுவாக கயிறு மூலமாக பலரையும் மீட்டு வந்தோம். அந்த சமயத்தில் ஒரு மொட்டைமாடியில் ஏராளமானோர் நின்று உதவி கோரியதை பார்த்து ஹெலிகாப்டரை தாழ்வாக இறக்க முடிவு செய்தோம். அப்போது கயிறு மூலமாக 4 பேர் மீட்கப்பட்டனர்.
|
ஆனால், கீழே நின்றிருந்தவர்களில் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் இருந்ததை காண நேர்ந்தது. இதையடுத்து, அவர்களை மீட்க மொட்டைமாடி மீது ஹெலிகாப்டரை மிக தாழ்வாக இறக்கி மீட்க முடிவு செய்தேன்.
மொட்டைமாடி மீது ஹெலிகாப்டரை இறக்கும்போது அதிர்வுகள் மற்றும் ஹெலிகாப்டர் எடை காரணமாக கட்டடத்தில் பாதிப்புகள் ஏற்படவும், இடிந்துபோகவும் வாய்ப்புண்டு. இதனால், ரூஃப்டாப் லேண்டிங் முறையில் கட்டடத்தை தொடுமாறு ஹெலிகாப்டரை இறக்கினேன்.
அதாவது, ஹெலிகாப்டர் கட்டடத்தின் மீது முழுவதுமாக நிற்கவில்லை. மாறாக ஹெலிகாப்டர் மிக தாழ்வாக இறக்கப்பட்டு சக்கரங்கள் தளத்தில் பட்டும் படாமல் பறந்து கொண்டிருந்தது. இதனை லைட் ஆன் வீல்ஸ் என்று குறிப்பிடுவர்.
அப்போது கீழே இருந்த அனைவரையும் மிக விரைவாக ஹெலிகாப்டரில் ஏற்றிவிட்டோம். ஒவ்வொரையும் சில வினாடிகளில் ஹெலிகாப்டரில் ஏற்றினோம். மொத்தம் 22 பேரை வெறும் 8 நிமிடங்களில் ஏற்றிவிட்டோம்," என்று தெரிவித்துள்ளார்.
பொதுவாக பெரும் வணிக மையங்கள் உள்ளிட்ட இடங்களின் பெரும் கட்டடங்களின் மேல் ஹெலிபேட் அமைக்கப்பட்டு அதற்குரிய கட்டமைப்புடன் தரை இறக்கப்படும். ஆனால், மிக சிறிய பரப்பவிலான மொட்டைமாடியில் இறக்குவது அபாயகரமானது.
இந்த மீட்புப் பணியின்போது Sea King 42B என்ற ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் 6.3 டன் எடை கொண்டது. மேலும், பைலட் மற்றும் குழுவினர், மீட்பு கருவிகள், இதர பயணிகளுடன் ஹெலிகாப்டரின் எடை 7 டன்னிற்கும் அதிகமாக இருந்துள்ளது.
இவ்வேளையில், ஹெலிகாப்டர் கட்டடத்தில் சற்று உரசினாலும் விபத்தில் சிக்கும் ஆபத்து உண்டு. ஆனால், அதனை துணிச்சலோடு பைலட் அபிஜித் கருட் மற்றும் அவருடன் பணியாற்றிய குழு செய்துள்ளது. இம்மி பிசகினாலும் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிவிடும்.
அனுபவம் வாய்ந்த பைலட்டுகளே இதுபோன்ற இடத்தில் இறங்கும் விஷப் பரீட்சைகளில் இறங்க விரும்பமாட்டார்கள். ஆனால், இதனை மிகச் சிறப்பாக கையாண்டு குறுகிய இடத்தில் ஹெலிகாப்டரை இறக்கி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் கடற்படை வீரர்கள்.
இதுகுறித்து வெளியான வீடியோவை பார்த்து பலரும் பைலட்டையும் அவருடைய குழுவினரையும் பாராட்டி வருகின்றனர். மேலும், மீட்கப்பட்ட மூதாட்டி மற்றும் பெண்களும் ஹெலிகாப்டர் பைலட் மற்றும் குழுவினருக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
-
இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!