இனி இன்டர்நேசனல் லைசென்ஸ் வாங்குவதில் குழப்பமே வராது... மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு...
சர்வதேச ஓட்டுநர் உரிமம் வாங்குவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருந்துள்ளது. இதைத் தீர்க்கும் வகையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

இன்று நாம் கார் அல்லது பைக் ஓட்ட லைசென்ஸ் வாங்க வேண்டும் என்றால் போக்குவரத்து அவ்வகத்திற்குச் சென்று அதற்கான விண்ணப்பித்து அங்கு முதலில் பயிற்றுநர் லைசென்ஸ் வாங்க வேண்டும் அதை வைத்துத் தான். அதன் பின் போக்குவரத்து அதிகாரி சோதனை செய்து நமக்கான லைசென்ஸை வழங்குவார்.

இந்த லைசென்ஸை வாங்கிவிட்டால் இந்தியாவில் அவர் எங்கு வேண்டுமானாலும் வாகனத்தை ஓட்டிக்கொள்ளலாம். இது தான் இந்தியாவில்உள்ள சட்டம் ஆனால் சிலர் இந்தியாவிலிருந்து வெளி நாட்டிற்கு டிரைவர் வேலைக்குச் செல்வார்கள், அங்கு வாகனம் ஓட்டி சம்பாதிப்பார்கள் என நாம் கேள்விப்பட்டிருப்போம்.

இந்தியாவில் வாங்கிய லைசென்ஸை வைத்தே வெளிநாட்டிலும் வாகனங்களை ஓட்ட முடியுமா என்று கேட்டால் இல்லை. இந்தியாவில் வழங்கப்படும் லைசென்ஸை வைத்து இந்தியாவில் மட்டுமே வாகனம் ஓட்ட முடியும். ஆனால் சர்வதேச அளவில் வாகனம் ஓட்ட வேண்டும் என்றால் அதற்காக இந்தியாவில் தனியாக லைசென்ஸ் வழங்கப்படுகிறது.

இந்தியா கடந்த 1949ம் ஆண்டு ஜெனீவா ஒப்பந்தத்தில் சர்வதேச சாலை போக்குவரத்து குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி இந்தியாவிலிருந்து வெளிநாட்டில் வாகனங்களை ஓட்ட இந்தியர்களுக்கு இந்தியாவிலேயே அதற்கான சோதனைகளைச் செய்து ஓட்டுநர் உரிமத்தை வழங்கவும், அதே போல வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்கள் வாகனத்தை ஓட்ட அங்கேயே லைசென்ஸ் எடுக்க முடியும். அதன் அடிப்படையிலேயே இந்தியாவில் வெளிநாடுகளில் கார் ஓட்டவும் லைசென்ஸ் வாங்க முடியும்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஓட்டுநர் உரிமம் வழங்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சர்வதேச ஓட்டுநர் உரிமத்திற்கும் மாநில அரசிடமே விண்ணப்பிக்க வேண்டும். இப்படியாக வழங்கப்படும் ஓட்டுநர் உரிமம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுகிறது.

அதன் ஃபார்மெட், சைஸ், கலர் என ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதிமுறைகளை வகுத்துள்ளன. இந்த லைசென்ஸை வாங்கிக்கொண்டு வெளிநாடுகளுக்குப் பயணிக்கும் நபர்கள் அங்கு வெவ்வேறு விதமான சர்வதேச லைசென்ஸ்களால் குழப்பத்தில் சிக்குகின்றனர். பலருக்கு இதனால் பிரச்சனை கூட ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மத்திய போக்குவரத்துத் துறை இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் தற்போது மாநில அரசுகள் சர்வதேச ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்துள்ளது. அதன் படி ஓட்டுநர் உரிமத்தின் ஃபார்மெட், அளவுகள், நிறம், உள்ளிட்ட விஷயங்கள் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளதோடு எப்படி இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இது மட்டுமல்ல இனி சர்வதேச ஓட்டுநர் உரிமங்களில் க்யூஆர் கோட் முறையில் இணைக்கவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இது சர்வதேச அளவில் இந்த ஓட்டுநர் உரிமம் கொண்டு வாகனம் ஓட்டுபவர்களுக்குச் சிக்கல் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாகப் போக்குவரத்துத் துறை ஒரு பல ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த மாதம் இந்தியாவில் விற்பனையாகும் பயணிகள் வாகனங்களுக்கான டயர்களில் மாற்றம்கொண்ட வந்ததது. அதன்படி கார்கள் டிரக்கள், பஸ்கள் எனப் பல நாங்களில் உள்ள டயர்களில் ரோலிங் ரேஸிஸ்டென்ஸ், வெட் கிரிப், மற்றும் ரோலிங் சவுண்ட் எமிஷன் ஆகிய விஷயங்களில் புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.

இந்த விதிமுறைகள் வரும் அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. மேலும் வெட்கிரிப் மற்றும் ரோலிங் ரெஸிஸ்டன்ஸ் விதிமுறைகள் அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்திற்குள் கட்டாயம் மாற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும், ரோலிங் நாய்ஸ் கட்டுபாடுகள் அடுத்த ஜூன் மாத்திற்குள் மாற்றப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








