கையில் காசே இல்லேன்னாலும் இனி ரயில் டிக்கெட்களை புக் செய்யலாம்! ஐஆர்சிடிசியில் புதிய பேமெண்ட் முறை அறிமுகம்...
ஐஆர்சிடிசி தற்போது பேமெண்ட் முறையில் இப்பொழுது புக் செய்துவிட்டு பின்னர் அதற்கான பணத்தைக் கட்டும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விபரங்களை காணலாம் வாருங்கள்.

தீபாவளி நெருங்கிவிட்டது, எல்லோரும் தீபாவளியைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். நாம் தீபாவளியைக் கொண்டாட ஊருக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருப்போம். சில இதற்காக ரயில், பஸ்களில் டிக்கெட் புக் செய்திருப்பார்கள். பலர் எப்படி ஊருக்குச் செல்வது என்றே தெரியவில்லை என்ற தவிப்பிலும் குழப்பத்திலும் இருப்பார்கள்.

இப்படியாக டிக்கெட் எடுக்காதவர்கள் பலர் தீபாவளிக்கு ஊருக்குச் செல்ல ரயிலில் தட்கல் டிக்கெட்டை புக் செய்யலாம் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். இப்படி ஒரு எண்ணத்திலிருந்தால் இந்தப்பதிவு உங்களுக்காகத் தான்.

இந்தியா முழுவதும் ரயில்வே டிக்கெட் புக்கிங்கை ஐஆர்சிடிசி நிறுவனம் தான் கையாண்டு வருகிறது. இந்த ஒரு தளத்தில் தான் ரயிலுக்கான டிக்கெட்டை ஆன்லைனில் புக் செய்ய முடியும். இப்படியாக ஆன்லைனில் புக் செய்யும் போது இதற்கான பணத்தையும் நாம் கட்ட வேண்டும்.

இது தான் இதுவரை இருந்த நடைமுறை ஆனால் தற்போது ஐஆர்சிடிசி நிறுவனம் தற்போது டிக்கெட்டை புக் செய்து விட்டு அதற்கான கட்டணத்தை இஎம்ஐ முறையில் மாத தவணையாகச் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்காக ஐஆர்சிடிசி நிறுவனம் கேஸ்இ என்ற நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இதன்படி ரயில் டிக்கெட்டை புக் செய்யும் போது பயணிகள் இந்த திட்டத்தின் கீழ் ரயில் டிக்கெட்டை புக் செய்தால் அவர்களுக்கு ரயில் டிக்கெட் புக் செய்யப்பட்டுவிடும். அதற்கான பணத்தை கேஸ்இ நிறுவனம் ஐஆர்சிடிசிக்கு செலுத்திவிடும்.

இதன் பின்பு பயணிகள் கேஸ்இ நிறுவனத்திற்கு அவர்கள் செலக்ட் செய்யும் திட்டத்திற்கு ஏற்ப மாத தவணை முறையிலேயே அல்லது குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மொத்தமாகவோ பணத்தைத் திரும்பச் செலுத்த முடியும்.

இதற்காக கேஸ்இ நிறுவனம் 3-6 மாதங்கள் வரையிலான மாத தவணை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் டிக்கெட்களை புக் செய்ய நீங்கள் தனியாக எந்த விஷயமும் செய்ய வேண்டிய தேவையில்லை வழக்கமான டிக்கெட் புக்கிங் முறையிலேயே புக்கிங்கை செய்யலாம். ஆனால் டிக்கெட்டிற்கான பணம் செலுத்தும் போது பே லேட்டர் என்ற ஒரு ஆப்ஷனை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது. அதை செலெக்ட் செய்து கேஷ் இ மூலம் டிக்கெட்டிற்கான கட்டணத்தை ஆத்தடிகேட் செய்யலாம்.

இப்படியாக டிக்கெட் புக் செய்யப்பட்ட தேதியிலிருந்து இஎம்ஐ, கணக்கிடப்படும். இதில் நாம் சரியாகக் கவனிக்க வேண்டியது புக்கிங் செய்த தேதி தான் கணக்கு பயணம் செய்யும் தேதி கணக்கில்லை. ரயில் டிக்கெட் புக் செய்யத் தற்காலிகமாகப் பணம் இல்லாதவர்களும் ரயில்டிக்கெட்டை இந்த ஆப்ஷனை பயன்படுத்தி டிக்கெட்டை புக் செய்யலாம்.

இப்படியாக டிக்கெட் கேஸ்இ நிறுவனம் ஐஆர்சிடிசிக்கு நீங்கள் டிக்கெட் புக் செய்ததற்காக வழங்கிய பணத்தை நீங்கள் கடன் வாங்கிய கணக்கிலேயே எடுத்துக்கொள்ளும் அதற்குக் குறிப்பிட்ட அளவு வட்டி விதிக்கவும் வாய்ப்பு உள்ளது.

கேஸ்இ இந்தியாவில் வளர்ந்து வரும் முக்கியமான டிஜிட்டல் கிரெடிட் தளம். இந்த தளம் தற்போது ஐஆர்சிடிசியில் இணைந்துள்ளதன் மூலம் தனது சேவையை விரிவாக்கியுள்ளது. இந்தியாவில் ஒரு நாளுக்குக் குறைந்தபட்சம் 15 லட்சம் பேர் டிக்கெட் புக்கிங் செய்கின்றனர். அத்தனை பேருக்கும் இந்த கேஸ்இ தளத்தின் கடன் வாய்ப்பு கிடைக்கும்.இது தீபாவளிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமில்லை. நீங்கள் தீபாவளிக்கு பிறகும் இந்த ஆப்ஷன் மூலம் டிக்கெட் புக் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








