Just In
- 1 hr ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 1 hr ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 1 hr ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 6 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மூலை முடுக்கெல்லாம் அதிவேக இணைய வசதி... இஸ்ரோவின் புதிய அஸ்திரம்!
இணையவேகத்தை அதிகரிப்பதற்காக ஜி சாட்-11 என்ற செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கி இருக்கிறது. இதுவரை இஸ்ரோ தயாரித்த செயற்கைகோள்களில் மிக பிரம்மாண்டமானதாக இந்த செயற்கைகோள் குறிப்பிடப்படுகிற
அதிவேக இணையதள வசதியை அளிப்பதற்காக இஸ்ரோ அமைப்பு தயாரித்துள்ள, மிக பிரம்மாண்டமான ஜி சாட்- 11 செயற்கைகோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.
அதிவேக இணையதள சேவைக்காக ஜி சாட்-11 என்ற செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கி இருக்கிறது. இதுவரை இஸ்ரோ தயாரித்த செயற்கைகோள்களில் மிக பிரம்மாண்டமானதாக குறிப்பிடப்படுகிறது.
அதாவது, இது பல சிறிய செயற்கைகோள்களின் ஒருங்கிணைந்து செயல்படும் தொகுப்பு போல இஸ்ரோ குறிப்பிடுகிறது. இந்த செயற்கைகோளை ஏவுவதற்கான கட்டமைப்பு கொண்ட ஏவுதளம் இந்தியாவில் இல்லை.
இதனையடுத்து, அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நாளை அதிகாலை 2.07 மணி முதல் 3.23 மணிக்குள் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.
இந்த செயற்கைகோளில் 40 அதிநவீன டிரான்ஸ்ஃபான்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலமாக, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் அதிவேக இணையதள சேவையை பெறுவதற்கு வழி ஏற்படுத்தி தரும்.
அதுமட்டுமல்ல, ராணுவ ரகசியங்கள் மற்றும் தனிநபர் இணையதள பயன்பாட்டு சேவைகளின் தகவல் பரிமாற்றத்தின் பாதுகாப்பை வெகுவாக உறுதி செய்யும். இந்த செயற்கைகோளை கேம் சேஞ்சர் என்று இஸ்ரோ குறிப்பிடுகிறது.
இந்த செயற்கைகோள் மூலமாக தரவுகள் 10 ஜிபிபிஎஸ் என்ற வேகத்தில் நாட்டின் முக்கிய இடங்களில் நிறுவப்படும் வைஃபை டவர்கள் மூலமாக பெறப்பட்டு, அந்த பகுதி முழுவதும் உள்ள வீடுகளில் இணையதளம், மொபைல்போன் மற்றும் டிவிகளுக்கு இணையதள சேவையையும், குரல் வழி மற்றும் வீடியோ அழைப்புகளை தங்கு தடையில்லாமல் பெற வழிவகுக்கும்.
வைஃபை டவர் இல்லாமல் கூட செயற்கைகோளிலிருந்து நேரடி இணையதள சேவையை பெறுவதற்கான வசதியையும் பெற முடியும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதாவது, கேபிள் இல்லாமலேயே செயற்கைகோளில் இருந்து டிவி, மொபைல்போனுக்கு நேரடி இணையதள சேவையை பெறுவதற்கும் உதவுமாம்.
அந்தமான் நிகோபர் தீவுகளில் தொடர்பு இல்லாத பகுதிகள் மற்றும் ராணுவ தகவல் பரிமாற்றம், தொலைதூர கிராமப்புற பகுதிகளுக்கு இந்த செயற்கைகோள் மூலமாக எளிதாக இணையதள வசதியையும், தொலைக்காட்சி அலைவரிசை சேவையையும் வழங்க முடியும்.
புதிய ஜி சாட்-11 செயற்கைகோள் நாளை ஜிஎஸ்எல்வி- மார்க்-3 ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்படுகிறது. இஸ்ரோ குறிப்பிடுவது போலவே, இனி அதிவேக இணையவசதியை அனைவருக்கும் கிடைக்க இந்த செயற்கைகோள் வழி செய்யும் என்று ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு