சிறப்பு செயற்கைகோளை ஏவும் இந்தியா... இதன் பவர் தெரிந்தால் இனி காஷ்மீர் பக்கமே பாகிஸ்தான் வராது...

சிறப்பு செயற்கைகோள் ஒன்றை இந்தியா வெகு விரைவில் விண்ணில் ஏவுகிறது. இதன் பவர் என்னவென்று தெரிந்தால் இனி காஷ்மீர் பக்கமே பாகிஸ்தான் வராது.

சிறப்பு செயற்கைகோளை விண்ணில் ஏவும் இந்தியா...

உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக இந்தியா வெகு வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது. இந்தியாவின் அசூர வளர்ச்சி, அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்பட உலகின் அனைத்து நாடுகளையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இந்தியாவின் வளர்ச்சிக்கு தீவிரவாதம் ஓர் முட்டுக்கட்டையாக உள்ளது.

சிறப்பு செயற்கைகோளை விண்ணில் ஏவும் இந்தியா...

இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தான், தீவிரவாதிகள் மூலம் நம் நாட்டில் நாச வேலைகளை அரங்கேற்ற எந்நேரமும் துடியாய் துடித்து கொண்டிருக்கிறது. இதற்கென தீவிரவாதிகளுக்கு பிரத்யேக பயிற்சிகளை வழங்கி, அவர்களை ஊக்குவித்து கொண்டிருக்கிறது பாகிஸ்தான்.

சிறப்பு செயற்கைகோளை விண்ணில் ஏவும் இந்தியா...

கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதல் சம்பவத்தை இதற்கு உதாரணமாக கூறலாம். அந்த ஆண்டின் நவம்பர் மாதம், கடல்வழியாக வந்த பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள், மும்பை ரயில் நிலையம் மற்றும் தாஜ் நட்சத்திர ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தினர்.

சிறப்பு செயற்கைகோளை விண்ணில் ஏவும் இந்தியா...

திடீரென உள்ளே நுழைந்து, அப்பாவி பொதுமக்கள் மீது கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகளை எதிர்த்து, இந்திய ராணுவ வீரர்கள் துணிச்சலுடன் சண்டையிட்டனர். என்றாலும் இந்த தாக்குதலில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

சிறப்பு செயற்கைகோளை விண்ணில் ஏவும் இந்தியா...

மும்பை தாக்குதல் சம்பவம் இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவில் நாச வேலைகளை அரங்கேற்றி, இந்தியாவின் வளர்ச்சியை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் முயன்று கொண்டிருப்பதற்கு இச்சம்பவம் ஓர் உதாரணம் மட்டுமே.

MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!

சிறப்பு செயற்கைகோளை விண்ணில் ஏவும் இந்தியா...

இதன் காரணமாகதான் வடக்கே உள்ள காஷ்மீர் எல்லை பகுதி மீது இந்தியா எந்நேரமும் ஒரு கண் வைத்து கொண்டே இருக்கிறது. காஷ்மீர் எல்லை வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் எப்போது வேண்டுமானாலும் நுழையலாம் என்ற அபாயம் நிலவி கொண்டிருப்பதே இதற்கு முக்கிய காரணம்.

சிறப்பு செயற்கைகோளை விண்ணில் ஏவும் இந்தியா...

தேசப்பற்று மிகுந்த இந்திய ராணுவ வீரர்கள், இரவு, பகல் பாராமல், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டுள்ளனர். இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகரிப்பதுடன், அவர்களின் பணியை எளிதாக்கும் பணிகளிலும் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

சிறப்பு செயற்கைகோளை விண்ணில் ஏவும் இந்தியா...

இதன் ஒரு பகுதியாக தற்போது இஸ்ரோ அமைப்பின் (ISRO-Indian Space Research Organisation) உதவியை மத்திய அரசு நாடியுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கே இஸ்ரோ சவால் விட்டு கொண்டிருக்கிறது.

சிறப்பு செயற்கைகோளை விண்ணில் ஏவும் இந்தியா...

எனவே இந்திய ராணுவத்தின் பலத்தை பெருக்கவும், அவர்களின் பணியை எளிதாக்கவும், இஸ்ரோ மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை நீண்ட கால அடிப்படையில் இணைந்து செயல்படுவது என அதிரடியாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு செயற்கைகோளை விண்ணில் ஏவும் இந்தியா...

இதன் ஒரு பகுதியாக செயற்கைகோள் ஒன்றை இஸ்ரோ விண்ணில் ஏவும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்கு என பிரத்யேகமாக ஏவப்படும் சிறப்பு செயற்கைகோள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு செயற்கைகோளை விண்ணில் ஏவும் இந்தியா...

எல்லைகளை கண்காணிக்கவும், அங்கு பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்த செயற்கைகோள் பேருதவி புரியும். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் இந்த செயற்கைகோளின் கண்காணிப்பை மீறி தீவிரவாதிகளால் இந்திய எல்லைக்குள் நுழைய முடியாது.

சிறப்பு செயற்கைகோளை விண்ணில் ஏவும் இந்தியா...

இஸ்ரோ விண்ணில் ஏவும் இந்த செயற்கைகோளில் இருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம், தேவைப்படும் இடங்களில் ராணுவ வீரர்களை குவித்து பாதுகாப்பை பலப்படுத்த முடியும். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த செயற்கைகோள் வெகு விரைவில் விண்ணில் ஏவப்படவுள்ளது.

சிறப்பு செயற்கைகோளை விண்ணில் ஏவும் இந்தியா...

பாகிஸ்தான் மட்டுமின்றி சீனா, வங்கதேசம், நேபாளம், பூடான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுடனும் இந்தியா நில எல்லைகளை (Land Borders) பகிர்ந்து கொண்டுள்ளது. இதில், பாகிஸ்தானுடன் சேர்த்து சீனாவும் இந்தியாவிற்கு அச்சுறுத்தலை கொடுத்து கொண்டுள்ளது.

சிறப்பு செயற்கைகோளை விண்ணில் ஏவும் இந்தியா...

வடக்கு எல்லையில் பாகிஸ்தான் என்றால், வட கிழக்கு எல்லையில் சீனா அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. எனவேதான் எல்லைகளில் பாதுகாப்பை பெரிய அளவில் பலப்படுத்தியே ஆக வேண்டும் என இந்தியா உறுதி பூண்டுள்ளது.

சிறப்பு செயற்கைகோளை விண்ணில் ஏவும் இந்தியா...

இதன் ஒரு பகுதியாகதான் இஸ்ரோ உதவியுடன், அதிநவீன பாதுகாப்பு செயற்கைகோளை விண்ணில் ஏவ இந்தியா தற்போது முடிவு செய்துள்ளது. இந்திய ராணுவத்தை பலப்படுத்தும் பணிகளில் இஸ்ரோ களமிறங்கியிருப்பதால், பாகிஸ்தானுடன் சேர்த்து சீனாவிற்கும் கலக்கம் ஏற்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சிறப்பு செயற்கைகோளை விண்ணில் ஏவும் இந்தியா...

பாகிஸ்தான், சீனா என இரு முனைகளில் இருந்து அச்சுறுத்தல் இருப்பதால், இந்தியாவிற்கு எப்போதும் போர் அபாயம் நிலவி கொண்டேதான் இருக்கிறது. எனவே இத்தகைய செயற்கைகோள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

சிறப்பு செயற்கைகோளை விண்ணில் ஏவும் இந்தியா...

தற்போது இஸ்ரோ அமைப்பின் தலைவராக உள்ள சிவன் இந்த திட்டத்தில் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய ஒரு விஷயமாகும்.

More from DriveSpark

Article Published On: Friday, January 18, 2019, 12:27 [IST]
English summary
ISRO To Launch Special Satellite To Help MHA In Securing Pakistan, China Borders. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+