Just In
- 1 hr ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 1 hr ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- 2 hrs ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 4 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
Don't Miss!
- News முஸ்லீம்.. ஹனுமான்.. லோக்சபா தேர்தலில் பிரச்சார ஸ்டைலை மாற்றிய மோடி.. பாஜக எடுத்த "அஸ்திரம்"
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி.. OTP மோசடி-க்கு முடிவு..!!
- Movies சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அணுக்குண்டே வீசினாலும் ஒன்னும் ஆகாது போலயே... அரசியல் சுற்றுப்பயணத்திற்கு நடிகர் பவன் கல்யாணின் வாகனம்!!
தெலுங்கானா மாநிலம் சில வருடங்களுக்கு முன்பு புதியதாக உருவான விதம் மற்றும் அங்கு தற்சமயம் நிலவிவரும் அரசியல் சூழலை பற்றி செய்திகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பார்த்திருப்பீர்கள். இந்தியாவின் 'குழந்தை மாநிலம்' என அழைக்கப்படும் தெலுங்கானாவில் அடுத்த 2023 டிசம்பர் மாதத்தில் பரபரப்புக்கு மத்தியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
2014இல் புதிய மாநிலமாக உருவான பிறகு முதல் சட்டசபை தேர்தல் அதே ஆண்டிலும் 2வது தேர்தல் 2018ஆம் ஆண்டிலும் நடைபெற்றன. கடைசியாக 2018இல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக கே.சந்திரசேகர் ராவ் உள்ளார். 119 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் மீண்டும் அதிக இடங்களை கைப்பற்றி முதல்வர் அரியணையை கே.சந்திரசேகர் ராவ் தக்க வைத்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் தெலுங்கானாவை ஆளும் பி.ஆர்.எஸ் கட்சிக்கு இணையான வலுவான கட்சி எதுவும் தற்போதைக்கு அந்த மாநிலத்தில் இல்லை. 2014இல் 6 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் 2018இல் 19 இடங்களுக்கு முன்னேற்றம் கண்ட போதிலும் பெரிய வித்தியாசத்துடன் பி.ஆர்.எஸ் கட்சிக்கு அடுத்தப்படியாகவே உள்ளது. ஆனால் வரவிருக்கும் 2023 சட்டசபை தேர்தலின் மூலம் தெலுங்கானா அரசியலில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஜன சேனா கட்சிக்கு கணிசமான தொகுதிகள் கிடைக்கும் என தெரிகிறது.
ஏனெனில் தங்களது கட்சிக்கான வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் ஜன சேனா கட்சியின் தலைவரும் பிரபல டோலிவுட் நடிகருமான பவன் கல்யாண் விரைவில் தெலுங்கானா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்காகவே கம்பீரமான & வலிமையான பேருந்து ஒன்றையும் பவன் கல்யாண் உருவாக்கி உள்ளார். இவ்வாறான அரசியல் சுற்றுப்பயணத்திற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பேருந்திற்கு "வராஹி" என பெயர் வைத்துள்ளனர்.
வராஹி என்பது 7 இந்து கடவுள்களில் உள்ள ஒரு கடவுளின் பெயர் ஆகும். வராஹி பேருந்துடன் பவன் கல்யான் நிற்கும் படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த வராஹி பேருந்தை பார்க்கும்போது மிகுந்த பாதுகாப்பு கவசங்கள் பொருத்தப்பட்ட இராணுவ வாகனங்கள் தான் நம் நினைவுக்கு வருகின்றன. இந்த பயணம் ஆனது வடக்கு தெலுங்கானாவில் உள்ள ஜக்டியல் மாவட்டத்தில் இருந்து துவங்கப்பட உள்ளது.
ஜக்டியல் மாவட்டத்தில் கொண்டகட்டு என்ற பகுதியில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநயா சுவாமி கோவிலில் வராஹி வாகனத்திற்கு பூஜை நடத்தப்பட உள்ளது. அதனை தொடர்ந்து அங்கு இருந்து சுற்றுப் பயணத்தை துவங்க பவன் கல்யாண் திட்டமிட்டுள்ளார். வராஹி பேருந்தை பற்றி கூற வேண்டுமென்றால், இது கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட பேருந்து ஆகும். முன்னதாக இந்த பயணம் தசராவை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதத்திலேயே துவங்கப்பட இருந்தது.
ஆனால் சில காரணங்களுக்காக இந்த பயணத்தில் தாமதம் ஏற்பட்டது. இந்த பேருந்தில் ஆதரவாளர்களுடன் ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாணின் சுற்றுப்பயணம் 2023 ஜனவரி மாதத்தில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவன் கல்யாணின் வராஹி வாகனம் ஆனது என்டிஆர் முன்பு பயன்படுத்திய சைதான்யரதம் என்ற பேருந்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சைதான்யரதம் பேருந்து என்டிஆர்-இன் அடையாளங்களுள் ஒன்றாகவும், அவரை ஆந்திரா முழுவதும் பிரபலமடைய செய்த ஒன்றாகவும் விளங்கியது.
தசராவிற்கு பிறகு பவன் கல்யாணின் சுற்றுப்பயணம் நடைபெறாததாலும், 3 திரைப்படங்களுக்கான படப்பிடிப்புகளில் அவர் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்பட்டதாலும் பவன் கல்யாணின் சுற்றுப்பயணம் ரத்து ஆகலாம் என செய்திகள் வெளிவந்தன. ஆனால் அவை அனைத்தையும் பொய் என கூறும் வகையில் தற்போது வராஹி பேருந்து உடன் பவன் கல்யாண் நிற்கும் படங்களும், வீடியோக்களும் வெளியாகி அவரது ரசிகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் புது உத்வேகத்தை அளித்துள்ளன. மற்றப்படி, வராஹி பேருந்தை பற்றிய வேறெந்த விபரங்களும் தற்போதைக்கு கிடைக்கவில்லை.