நிலநடுக்கமே வந்தாலும் பயமில்லை.. இந்த ரயில் மணிக்கு அசால்டா 260 கி.மீ வேகத்துல சீறி பாயும்...
நிலநடுக்கமே வந்தாலும் பாதுகாப்பான ரயில் ஜப்பானில் இயங்கி வருகிறது.
Recommended Video
மணிக்கு 260 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த ரயிலில் உள்ள வசதிகள் என்ன? இது எப்படி செயல்படுகிறது? முழு விபரங்களை கீழே காணலாம்.

நாம் எல்லோரும் வாழ்வில் ஒரு நாளாவது ரயிலில் பயணித்திருப்போம். இந்தியாவில் உள்ள ரயில்கள் எல்லாம் அதிகபட்சம் 150 கி.மீ வேத்தில் செல்லக்கூடியது தான். அதற்கு மேல் வேகத்தில் சென்றால் பாதுகாப்பில்லை என்பதால் அந்த வேகத்துடன்ரயில்கள் நிறுத்தப்படுகிறது. ஆனால் உங்களுக்கு உலகின் பாதுகாப்பான ரயில் எது தெரியுமா? வாருங்கள் அதை பற்றி காணலாம்.

புல்லட் ரயில்களின் தலைமயிடம் என கூறப்படும் அளவிற்கு அதிகமாக புல்லட் ரயில்களை இயக்கி வரும் நாடு ஜப்பான் இந்நிலையில் ஏகப்பட்ட நகரங்களுக்கிடையே விரைவான பயணத்தை சாத்தியமாக்க புல்லட் ரயில்களை வடிவமைத்து செல்படுத்தி வருகின்றனர். ஜப்பானிலிருந்து தான் உலகின் மற்ற நாடுகளுக்கும் புல்லட் ரயில் திட்டம் பரவி வருகிறது.

இப்படியாக ஜப்பானில் இயங்கி வரும் புல்லட் ரயில் தான் N700S என்ற ரயில் இந்த ரயில் தான் உலகின் பாதுகாப்பான ரயில் எனகூறப்படுகிறது. இந்த ரயில் மணிக்கு 360கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த ரயிலில் இருக்கும் முக்கியமான பாதுகாப்பு வசதி இந்த ரயில் நிலநடுக்கம் வந்தாலும் தன் சேவையை நிறுத்தாமல் தொடர்ந்து இயங்கும் திறன் கொண்டது.

இந்த ரயில் கடந்த 2019ம் ஆண்டு சோதனை செய்யப்பட்டது. அப்பொழுது இந்த ரயில் மணிக்கு 360 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருந்தது. தற்போது இந்த ரயில் செயல்பாடு பிரச்சனை காரணமாக 285 கி.மீ வேகத்தில் தான் இயக்கப்படுகிறது. இந்த ரயில் 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸை ஒட்டி செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த ரயில் ஜப்பானின் ஓசாகா மற்றும் டோக்கியோ ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பாதை 1964ம் ஆண்டு அப்பொழுது ஒலிம்பிக்ஸ் நடக்கும் போது உருவாக்கப்பட்டது. அந்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் அதிகவேக ரயிலுக்கான தடம் இதுதான்.

இந்த N700S ரயில் என்பது ஏற்கனவே அந்நாட்டில் பயன்பாட்டிலிருந்த N700 மற்றும் N700A ஆகிய ரயில்களை மேம்படுத்தி உருவாக்கப்பட்டது. ஆனால் அதிலிருந்து சில டிசைன் மாற்றங்களை பெற்றுள்ளது. அதன் மூக்கு பகுதி மேலும் வடிவமாகவும், அதன் பக்கவாட்டுபகுதியாக கண்ணம் பகுதி பெரியதாகவும், ஹெட்லைட் சிறியதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலின் உட்புறம் சீட்கள் நன்றாக சாய்ந்து இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதானல் பயணிகளகு்கு நீண்ட தூர பயணத்தின் போது சொகுசான அனுபவத்தை வழங்குகிறது. இது போக ஒவ்வொரு சீட்டிற்கும் லேப்டாப் அல்லது செல்போன்களை சார்ஜ் ஏற்ற தனித்தனியாக அவுட்லெட்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் உட்புற லைட்டி் சாஃப்டான ரிலாக்ஸிங் சூழ்நிலையை உருவாக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இது போக சீட்களுக்கு மேலே பேக்கேஜ்களை வைக்கும் பகுதி கொடுக்கப்பட்டுள்ளது. இது போக எக்ஸ்ட்ரா லக்கேஜை வைக்க இடத்தை பணம் கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த ரயிலின் ஓடும் போது சத்ததம் இல்லாமல் ஸ்மூத்தாக செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த ரயிலில் ஆக்டிவ் சஸ்பென்சன் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை வடிவமைக்கும் போதே இந்த ரயிலில் பாதுகாப்பை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டது.

இந்த ரயிலில் ஆட்டோமெட்டிக்க கண்ட்ரோல் மற்றும் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது எமர்ஜென்ஸி காலத்தில் ரயிலை பிரேக் பிடிக்க உதவி செய்யும். இந்த ரயில் லித்தியம் அயான் பேட்டரியுடன் செல்ஃப் புரோபல்சன் சிஸ்டத்தில் இயங்கும் திறன் கொண்டது. அதாவது வழக்கமாக ரயில் பாதைக்கு மேலே உள்ள மின் கம்பிகள் மூலம் இயங்காமல் தானாக இயங்கும் திறன் கொண்டது.

மேலும் இந்த ரயிலில் உள்ள பேட்டரியில் சார்ஜ் குறைந்துவிட்டால் பின்னர் ரயில் சில தூரம் குறைந்த வேகத்தில் இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பாலம், குகை போன்ற இடத்தில் செல்லும் போது பேட்டரி பவர் குறைந்துவிட்டால் பாதுகாப்பான இடத்திற்கு ரயிலை கொண்டு செல்ல இந்த சிஸ்டம் உதவும்,

இது மட்டுமல்ல இந்த ரயில் நிலநடுக்கத்தையும் தாங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக புல்லட் ரயில்கள் வேகமாக செல்லும் போது நிலநடுக்கம் ஏற்பட்டுவிட்டால் ரயில் ரயில் விபத்திற்குள்ளாகும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த ரயிலில் வேகமாக செல்லும் போது நிலநடுக்கம் ஏற்பட்டாலும் ரயில் பாதுகாப்பாக இருக்கும்.

இந்த ரயில் தயாரிக்கும் போதே குறைந்த இடத்தில் அதிக வசதிகளுடன் தயாரிக்கப்பட வேண்டும் என திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்டது. இதன் முந்தைய வெர்ஷன்களை விட இதில் இடம் குறைவு தான். ஆனால் வசதி அதிகம். மொத்தம் 16 கேரேஜ்களுடன் இந்த ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவும் குறைவான சக்தியில் இயங்கும்படி விடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ரயில் தயாரிக்கவும் எளிதாக இருக்கும்படி இதன் டிசைன்கள் உள்ளன. இதனால் இந்த ரக ரயில்களை அந்நாட்டில் புல்லட் ரயில் ஆப்ரேட்டர்கள் பலர் வாங்கி செயல்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த ரயில் டிசைனை அந்நாட்டு நிறுவனம் வெளிநாட்டிற்கும் விற்பனை செய்ய முடிவுசெய்துள்ளது. இந்த ரயிலை இந்தியா வாங்குமா? வாங்கினால் இதன் மதிப்பு என்னவாக இருக்கும்? உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








