Just In
- 1 hr ago ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- 1 hr ago அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- 2 hrs ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 5 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
Don't Miss!
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Sports என்ன வீடியோ கேம் விளையாடுறாங்க.. 11 சிக்ஸ், 13 ஃபோர்ஸ்.. 5 ஓவர்களில் சதம்.. வரலாறு படைத்த ஐதராபாத்!
- Movies Thalaivar171: டைட்டில் ரிலீசுக்கு இன்னும் இரு தினம்.. மீண்டும் கடிகாரத்தை கையிலெடுத்த சன் பிக்சர்ஸ்!
- News 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
நேசமணிக்கு இணையாக டிரெண்ட் ஆகும் மற்றொரு விஷயம் இதுதான்... கொளுத்தி போட்ட சன்னி லியோன்...
காண்ட்ராக்டர் நேசமணிக்கு இணையாக சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் மற்றொரு விஷயத்தையும் டிரெண்ட் செய்து வருகின்றனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில், எப்போது? எது? டிரெண்ட் ஆகும் என்பதே யாருக்கும் தெரியாது. சமூக வலை தளங்களில் திடீர் திடீரென புதுப்புது விஷயங்களை நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து விடுகின்றனர்.
|
அந்த வகையில் நெட்டிசன்களால் தற்போது டிரெண்ட் செய்யப்பட்டு வரும் ஒரு நபர்தான் காண்ட்ராக்டர் நேசமணி. காண்ட்ராக்டர் நேசமணிக்கு என்னதான் ஆச்சு? என ஒட்டுமொத்த தமிழகமே ஒருமித்த குரல் எழுப்பி வருகிறது.
|
அத்துடன் காண்ட்ராக்டர் நேசமணியின் தலையில் சுத்தியலால் தாக்கி அவரை இந்த நிலைக்கு ஆளாக்கிய அவரது அண்ணன் மகன் கிருஷ்ண மூர்த்தியை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ப்ரெண்ட்ஸ் படத்தில் வடிவேலுவின் தலையில் சுத்தியல் தாக்கும் காட்சியை அடிப்படையாக வைத்துதான் இது தொடர்பான வேடிக்கையான மீம்ஸ்களை நெட்டிசன்கள் திடீரென வைரலாக்கி வருகின்றனர். #PrayForNesamani என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் நேற்று இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.
இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலான டிரெண்ட்டிங்கிலும் #PrayForNesamani ஹேஷ்டேக் இடம் பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #ப்ரே பார் நேசமணி ஹேஷ்டேக் டிரெண்ட் ஆவதற்கான காரணம் நம்மில் அனைவரும் தெரியும்.
ஆனால் ஒரு சில விஷயங்கள் ஏன் டிரெண்ட் ஆகிறது? எதற்காக டிரெண்ட் ஆகிறது? என்பதே யாருக்கும் தெரியாது. அப்படி இந்தியா முழுக்க தற்போது டிரெண்ட் ஆகி வரும் மற்றொரு விஷயம் ஜேசிபி. #JCBKiKhudayi என்ற ஹேஷ்டேக் கடந்த செவ்வாய் முதல் டிரெண்ட் ஆக தொடங்கியது.
#JCBKiKhudayi என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிவிட்டரில் திடீரென டிரெண்ட் செய்ய தொடங்கினர். இது தொடர்பான மீம்ஸ்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலை தளங்களில் அதிகம் உலா வந்து கொண்டிருக்கின்றன.
#JCBKiKhudayi என்றால் ஜேசிபி தோண்டி கொண்டிருக்கிறது என அர்த்தமாம். காண்ட்ராக்டர் நேசமணிக்கு முன்னதாகவே இந்த ஜேசிபி விஷயம் டிரெண்ட் ஆக தொடங்கி விட்டது. ஆனால் ஏன் டிரெண்ட் ஆனது என்பது மட்டும் யாருக்கும் உறுதியாக தெரியவில்லை.
|
ஒரு சிலர் ஜேசிபி இயந்திரத்தின் மீது நின்று கொண்டு சன்னி லியோன் பதிவிட்ட ஒரு போஸ்ட் மூலமாகதான் அனைவரும் ஜேசிபி இயந்திரத்தை பற்றி பேச தொடங்கினர் என்கிறார்கள். இன்னும் சிலரோ, மணமகன் ஒருவர் ஜேசிபியில் அமர்ந்து உலா வந்ததால்தான் இந்த விஷயம் டிரெண்ட் ஆனது என்கிறார்கள்.
|
ஆனால் உறுதியான காரணம் என்ன? என்பது மட்டும் தெரியவில்லை. இருந்தபோதும் ஜேசிபி இயந்திரம் மீது இந்திய மக்கள் அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர் என்ற விஷயத்தை மட்டும் இதன் மூலம் நம்மால் உறுதியாக புரிந்து கொள்ள முடிகிறது.
சரி, பொக்லைன், எக்ஸ்காவேட்டர் போன்ற டெக்னிக்கல் பெயர்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா? நிச்சயமாக தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். ஆனால் ஜேபிசி என்றால்தான் அனைவருக்கும் தெரியும்.
தற்போது வைரலாகி வரும் இந்த மஞ்சள் நிற அசூரனை ஜேசிபி என்ற நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. ஆம், ஜேசிபி என்பது ஒரு நிறுவனத்தின் பெயர். ஜே.சி.பிராம்ஃபோர்டு எக்ஸ்காவேட்டர்ஸ் (J.C. Bamford Excavators Limited) என்ற நிறுவனம்தான் உலக அளவில் ஜேசிபி என அறியப்படுகிறது.
கட்டுமானம், விவசாயம் மற்றும் கழிவு மேலாண்மை உள்ளிட்ட துறைகளுக்கு தேவையான இயந்திரங்களை ஜேசிபி நிறுவனம் தயாரித்து வருகிறது. இது இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் ஸ்டாஃபோர்டுஷையர் கவுண்டியில் உள்ள ரோசெஸ்டர் எனும் ஊரில் செயல்பட்டு வருகிறது.
எக்ஸ்காவேட்டர்கள், டிராக்டர்கள் மற்றும் டீசல் இன்ஜின்கள் உள்பட 300 வகையான இயந்திரங்களை ஜேசிபி நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜோசப் சிரில் பிராம்ஃபோர்டு (Joseph Cyril Bamford) என்பவரால், கடந்த 1945ம் ஆண்டு ஜேசிபி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.
ஜேசிபி என்பதை இவரது பெயர் சுருக்கம் என்றும் கூட கூறலாம். இந்தியா மட்டுமல்லாது இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் கூட, இயந்திர டிக்கர்கள் மற்றும் எக்ஸ்காவேட்டர்கள் ஜேசிபி என்ற பெயரால்தான் அறியப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் கட்டுமான உபகரண மார்க்கெட்டில் ஜேசிபி நிறுவனம்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் விற்பனையாகும் ஒவ்வொரு நான்கு கட்டுமான இயந்திரங்களிலும் மூன்று ஜேசிபி நிறுவனத்தை சேர்ந்ததுதான்.
ஜேசிபி இந்தியா லிமிடெட் நிறுவனம் உள்நாட்டு செயல்பாடுகளை கடந்த 1979ம் ஆண்டு தொடங்கியது. தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்ள பல்லபாரா, புனே மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் ஜேசிபி நிறுவனத்தின் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
மேட் இன் இந்தியா ஜேசிபி தயாரிப்புகள் உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. உலகம் முழுக்க இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி, வட மற்றும் தென் அமெரிக்கா, சீனா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ஜேசிபி நிறுவனத்திற்கு 18 தொழிற்சாலைகள் உள்ளன.
-
இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...