Just In
- 1 hr ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 2 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 2 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 4 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தண்ணீரில் ஓடும் மோட்டார்சைக்கிளை உருவாக்கிய 10ம் வகுப்பு மாணவன்!
தண்ணீரில் ஓடும் மோட்டார்சைக்கிளை ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் உருவாக்கி இருக்கிறார். விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
தண்ணீரில் ஓடும் மோட்டார்சைக்கிளை உருவாக்கி அசத்தி உள்ளார் ஜாம்ஷெட்பூரை சேர்ந்த 10ம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர். இதுபற்றிய கூடுதல்களையும், வீடியோவையும் இந்த செய்தியில் காணலாம்.
ஜாம்ஷெட்பூரை சேர்ந்தவர் ஆதித்யா கோட்டே. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். வாகன தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட இவர் ஒரு புதிய முயிற்சியை செய்து எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
வாகனங்களை இயக்குவதற்கு பெட்ரோல், டீசலுக்கு மாற்றான எரிபொருளை உலகமே தேடி வரும் நிலையில், இவர் தண்ணீரில் ஓடும் மோட்டார்சைக்கிளை உருவாக்கி வெற்றி கண்டுள்ளார்.
இந்த மோட்டார்சைக்கிளை உருவாக்குவதற்காக பல்வேறு நூல்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து, அதில் தண்ணீரில் ஓடும் வகையில் மாற்றுவதற்கான நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார்.
தாம் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தை பரிசோதித்து பார்ப்பதற்காக சைக்கிள் ஒன்றில், பழைய மோட்டார்சைக்கிள் எஞ்சின் ஒன்றை பொருத்தியிருக்கிறார்.
பின்னர், அந்த எஞ்சின் தண்ணீரில் ஓடும் வகையில் மாற்றங்களையும், சில கூடுதல் உதிரிபாகங்களையும் கோர்த்து, தண்ணீரில் ஓடும் மோட்டார்சைக்கிளை தயார் செய்து விட்டார்.
தொடர்புடைய செய்திகள்:
இந்த மோட்டார்சைக்கிளை தனது வீடு இருக்கும் பகுதியில் வைத்து தீவிரமாக சோதனை ஓட்டம் நடத்தி இருக்கிறார். இந்த சோதனைகளில் வெற்றியும் பெற்று இருக்கிறார்.
இந்த மோட்டார்சைக்கிளின் எஞ்சினை ஸ்டார்ட் செய்வதற்கு மட்டும், சிறிதளவு பெட்ரோல் தேவைப்படும். எஞ்சின் ஸ்டார்ட் ஆனதற்கு பின்னர் தண்ணீரில் ஓடும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்காக பெட்ரோல் மற்றும் தண்ணீருக்காக இரண்டு எரிபொருள் கலன்களை பொருத்தியிருக்கிறார். 6 லிட்டர் தண்ணீரில் 25 கிமீ முதல் 30 கிமீ தூரம் வரை இந்த மோட்டார்சைக்கிள் பயணிக்கும்.
பெட்ரோல், டீசல் வாகனங்களால் மாசு ஏற்படுவது பெரும் பிரச்னையாகி இருக்கும் நிலையில், தண்ணீரில் ஓடும் இந்த மோட்டார்சைக்கிள் மூலமாக மாசு ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார கார்களை தயாரிப்பதே ஓரே தீர்வாக கருதப்படும் நிலையில், மாணவர் ஆதித்யாவின் கண்டுபிடிப்பு அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
ஐஐடி கோரக்பூர் கல்வி நிலையம் இந்த கண்டுபிடிப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும், இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, காப்புரிமை பெறவும் ஆதித்யாவை அறிவுறுத்தி இருக்கிறது.
அதேசமயம், தண்ணீரில் ஓடும் இந்த மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்தால், லிட்டர் தண்ணீரின் விலை பெட்ரோல், டீசல் விலையைவிட அதிகமாக எகிறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
Source: ANI
தொடர்புடைய செய்திகள்: