கண்டுகொள்ளாத அரசு.. பசியால் தவித்த மக்கள்.. ஓடி வந்து உதவும் பிரபல டயர் நிறுவனம்.. சூப்பர்ல....!

பசியால் தவித்த மக்களுக்கு பிரபல டயர் உற்பத்தி நிறுவனம் உணவளித்து பசியாற்ற இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

கண்டுகொல்லாத அரசு.. பசியால் தவித்த மக்கள்... ஓடி வந்த உதவும் பிரபல டயர் நிறுவனம்.. புண்ணியவான் சார் நீங்க!

ஆரம்பத்தில் சீனாவின், வுஹான் நகரத்தில் மட்டுமே காணப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகமெங்கிலும் பரவி ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் அதீத பரவும் தன்மைக் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் இயக்கமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதே நிலைதான் தற்போது இந்தியாவிலும் நீடித்து வருகின்றது.

கண்டுகொல்லாத அரசு.. பசியால் தவித்த மக்கள்... ஓடி வந்த உதவும் பிரபல டயர் நிறுவனம்.. புண்ணியவான் சார் நீங்க!

இந்த இயக்கமற்ற நிலை காரணமாக வருமை கோட்டிற்குள் இருக்கும் அடித்தட்டு மக்கள் மற்றும் தினக் கூலி தொழிலாளர்கள் மிகக் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

குறிப்பாக, சொந்த ஊரைவிட்டு வெளியூர்களில் தங்கி வேலை செய்யும் தொழிலாளர்களே இதில் மிக கடுமையான பின் விளைவுகளை சந்தித்துள்ளனர். மேலும், தற்போது வரை பிரச்னைகளைச் சந்தித்தும் வருகின்றனர்.

கண்டுகொல்லாத அரசு.. பசியால் தவித்த மக்கள்... ஓடி வந்த உதவும் பிரபல டயர் நிறுவனம்.. புண்ணியவான் சார் நீங்க!

கையில் பணமும் இல்லை, தங்குவதற்கு இடமும் இல்லை ஆகையால் சொந்த ஊருக்காவது திரும்பலாம் என அவர்கள் நினைத்தால், அதற்கும் அரசுகள் முட்டுக்கட்டைப் போட்டுள்ளது. 144 தடை (தேசிய ஊரடங்கு) உத்தரவு நாடு முழுவதும் அமலில் இருப்பதால் அனைத்துவிதமான பொதுபோக்குவரத்துகளும் முடங்கிக்கிடக்கின்றது.

கண்டுகொல்லாத அரசு.. பசியால் தவித்த மக்கள்... ஓடி வந்த உதவும் பிரபல டயர் நிறுவனம்.. புண்ணியவான் சார் நீங்க!

அரசு வாகனங்கள் மட்டுமின்றி தனியார் வாகனங்களுக்கும் இதே நிலைதான். எனவே, மக்கள் அனைவரும் இருந்த இடத்தில் இருந்து நகர முடியாத கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையால், பணிக்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தஞ்சம் புகுந்த மாநிலங்களிலேயே எந்தவொரு வசதியும் இன்றி தவிக்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

கண்டுகொல்லாத அரசு.. பசியால் தவித்த மக்கள்... ஓடி வந்த உதவும் பிரபல டயர் நிறுவனம்.. புண்ணியவான் சார் நீங்க!

இத்தகையோருக்கு தேவையான வசதிகளை அவர்கள் பணியாற்றிய அந்தந்த நிறுவனங்களே வழங்க வேண்டும் என ஒரு சில மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

இருப்பினும், நிறுவனங்கள் சாராமல் பணியாற்ற வந்த வெளிமாநில தொழிலாளர்கள் நிலை கேள்விக் குறியாகவே உள்ளது. அதிலும், டெல்லி போன்ற நகரங்களில் பணி புரிந்து வந்த வெளிமாநில தொழிலாளர்களின் நிலை சற்றே கூடுதல் கவலைக் கிடமாக மாறியிருக்கின்றது.

கண்டுகொல்லாத அரசு.. பசியால் தவித்த மக்கள்... ஓடி வந்த உதவும் பிரபல டயர் நிறுவனம்.. புண்ணியவான் சார் நீங்க!

இம்மாதிரியான தொழிலாளர்கள் மற்றும் கிராமப் புற மக்களுக்கு தேவையான உணவை அளிப்பதற்கு ஜேகே வாகன டயர் உற்பத்தி நிறுவனம் முன்வந்துள்ளது.

இந்நிறுவனம், தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அதன் உற்பத்தி ஆலைகள் இயங்கும் பகுதி மற்றும் சில முக்கிய பிரான்சுகளின் வழியாக ஏழை மற்றும் எளிய மக்களுக்கு தேவையான உணவை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இவ்வாறு, நாள் ஒன்று 10 ஆயிரம் பேருக்கு உணவளிக்க அது திட்டமிட்டுள்ளது.

கண்டுகொல்லாத அரசு.. பசியால் தவித்த மக்கள்... ஓடி வந்த உதவும் பிரபல டயர் நிறுவனம்.. புண்ணியவான் சார் நீங்க!

மேலும், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கு தேவையான உணவு மற்றும் நீர் உள்ளிடவற்றை வழங்க இருப்பதாகவும் ஜேகே டயர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, இந்நிறுவனம் 50க்கும் அதிகமான மருத்துவ கேம்ப்கள் மூலம் கிரமாப்புற மக்களுக்கு மருத்து சேவை வழங்கி வருகின்றது. அங்கு கோவிட்19 வைரசைப் பற்றியும் அதன் ஆபத்தைப் பற்றியும் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கான பணியினை நாடு முழுவதும் 5 ஆயிரம் ஜேகே பணியாளர்கள் மேற்கொண்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவிக்கின்றது.

கண்டுகொல்லாத அரசு.. பசியால் தவித்த மக்கள்... ஓடி வந்த உதவும் பிரபல டயர் நிறுவனம்.. புண்ணியவான் சார் நீங்க!

இத்துடன் கூடுதல் சேவை வழங்கும் விதமாக உணவின்றி வாடும் கிராமப் புற மக்கள் மற்றும் தினக் கூலி தொழிலாளர்களுக்கான உணவு திட்டத்தையும் அது தொடங்கியிருக்கின்றது. பல மாநிலங்களில் அரசு சார்பில் வழங்கப்படும் உணவு முறையாக வழங்கப்படுவதில்லை என முகாம்களில் தங்கியிருக்கும் தினக்கூலி தொழிலாளர்கள் புகார்கூறிய வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் ஜேகே டயர்ஸ் நிறுவனத்தின் சேவை நல்ல பலனை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கண்டுகொல்லாத அரசு.. பசியால் தவித்த மக்கள்... ஓடி வந்த உதவும் பிரபல டயர் நிறுவனம்.. புண்ணியவான் சார் நீங்க!

இந்த சேவை நாட்டின் ஒரு பகுதிக்கு மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் செய்யப்பட இருப்பது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இந்த உணவு திட்டமின்றி கொரோனா வைரசிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக இதுவரை 150-க்கும் அதிகமான கிராமங்களில் வீடு வீடாக சென்று கிருமி நாசினி மற்றும் முகமூடிகளை ஜேகே டயர்ஸ் வழங்கியிருப்பதாக பெருமையுடன் தெரிவிக்கின்றது.

கண்டுகொல்லாத அரசு.. பசியால் தவித்த மக்கள்... ஓடி வந்த உதவும் பிரபல டயர் நிறுவனம்.. புண்ணியவான் சார் நீங்க!

கொரோனா பதற்றம் காரணமாக நாடு முழுவதும் கொண்டுவரப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வருகின்ற 14ம் தேதி வரை அமலில் இருக்கும் என அரசு அறிவித்தது. ஆனால், கொரோனாவின் தீவிர பரவும் தன்மையைப் பார்த்தால் அரசின் இந்த மனநிலை எந்நேரத்தில் வேண்டுமானாலும் மாற்றிவிடலாம் என தெரிகின்றது. ஆகையால், வரும் காலங்களில் ஏழை மற்றும் எளிய மக்களின் நிலை என்னவாகும் என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 8, 2020, 14:35 [IST]
English summary
JK Tyre Will Provides Foods For Daily Earners & Migrants. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+