Just In
- 42 min ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- 3 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 4 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 5 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
Don't Miss!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- News சென்னை தடுமாறுவது ஏன்? 47 வகையான முயற்சிகளை செய்ததால் தான் இந்த வாக்குப்பதிவே : ஜெ.ராதாகிருஷ்ணன்
- Movies 'ஆவேசம்' திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள்.. அப்படி என்ன ஆச்சு?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பேன்சி நம்பருக்காக லட்சக்கணக்கில் செலவழித்த தொழிலதிபர்: எவ்வளவு தெரிந்தால் இரத்த கொதிப்பே ஏற்படும்
கேரள மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் விலையுயர்ந்த கூப் காருக்கு பதிவெண்ணை லட்சக்கணக்கில் செலவு செய்து வாங்கியுள்ளார்.
கார்கள் மீது அலாதியான பிரியமுடைய சில பணக்கார வர்கத்தினர், தாங்கள் சாலையில் செல்லும்போது தனித்து தெரியும் வேண்டும் என்பதுக்காக, விலையுயர்ந்த ஸ்போர்ட் ரக கார்களை வாங்கி சாலையில் செல்கின்றனர்.
நாட்டின் சாலைக்கு எந்த வகையிலும் ஒத்துப்போகாத அந்த கார்கள், சாலையில் செல்லும் போது காதைக் கிழிக்கும் அளவுக்கு சத்தத்தை எழுப்பும். மேலும், தங்கள் கார் செல்லும்போது மற்ற கார்களைக்காட்டிலும் தனித்துவமாக தெரியும் வேண்டும் என்பதற்காக, காரின் நிறம், சைலன்சர் சவுண்ட், நம்பர் பிளேட் உள்ளிட்டவற்றை பிரத்யேமாக பெரும் பொருட்செலவில் அமைக்கின்றனர்.
இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கே.எஸ். பாலகோபால் என்பவர் கூப் ரக போர்ஷே 718 பாக்ஸ்டர் காரை வாங்கியுள்ளார். விலையுயர்ந்த அந்த காரின் பதிவெண்ணுக்கு பேன்சி நம்பர் வாங்குவதுக்காக ரூ.33 லட்சம் ரூபாயை செலவு செய்து அவர் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
ஜெர்மனி தயாரிப்பான போர்ஷே 718 பாக்ஸ்டர் கார் கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் இந்தியச் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது எக்ஸ்-ஷோரூம் விலையில் 81 லட்சம் ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்படுகிறது.
இந்த போர்ஷே 718 பாக்ஸ்டர் காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் கொண்ட 4-சிலிண்டர் டர்போ பாக்ஸர் எஞ்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை 300 குதிரைத் திறனை வெளிப்படுத்தும். அதிகபட்சமாக 380Nm டார்க்கையும் இந்த எஞ்ஜின் உற்பத்தி செய்கிறது.
இந்த நிலையில்தான், போர்ஷே 718 பாக்ஸ்டர் காரை, ரூ.1.2 கோடிக்கு கே.எஸ். பாலகோபால் வாங்கியுள்ளார். மேலும், இந்த காருக்கு 30 லட்சம் ரூபாய் செலவில் KL-01-CB-1 என்ற பேன்சி நம்பரையும் வாங்கியுள்ளார். கேரளாவில் பெரும் சர்ச்சையை இந்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. இவர் செலவு செய்த தொகையானது, புத்தம் புதிய டோயோடா பார்ட்யூனர் காரின் விலையாகும்.
இதுகுறித்து, கே.எஸ். பாலகோபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "எனக்கு விலையுயர்ந்த கார் மற்றும் அதற்காக பேன்சி நம்பரை வாங்குவது மிகவும் பிடிக்கும். சொல்லப்போனால், அதற்கு நான் பைத்தியம் என்றே கூறலாம். பேன்சி நம்பர்களுக்காக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலவு செய்வேன்" என்றார்.
இவர் செலவு செய்த தொகையானது மிகப்பெரிய தொகையாகும். இந்த தொகையை எத்தனையே ஏழை எளியோர் ஒரு வேலை உணவு கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு செலவு செய்திருக்கலாம் அல்லது ஏழை மாணவர்களின் படிப்புச் செலவுக்கு உதவியிருக்கலாம் என கேரளாவைச் சேர்ந்த சமூக நல ஆர்வளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...