Just In
- 3 min ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 2 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 2 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 3 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Sports இன்னும் ஒரு வாரம்.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு? 3 வீரர்களை கழற்றிவிடும் ரோகித் சர்மா
- News வலது கை விரலில் தான் ‘மை’ வைக்கணும்.. வாக்குச்சாவடியில் அடம் பிடித்த கோவை நபர்.. விசாரித்ததில் ஷாக்
- Movies Pandian stores 2: நீ ஓடி வரவில்லையே.. காரில்தானே வந்தாய்.. மீனாவை கலாய்த்த கோமதி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு கேரள அரசு தாராளம்... ஏன் தெரியுமா?
கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு கேரள அரசு தாராளம் காட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பிரச்னையால் மத்திய, மாநில அரசுகளுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே செலவுகளை குறைப்பதற்கான முயற்சிகளை அரசுகள் எடுத்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுக்கு புதிய வாகனங்களை வாங்குவதற்கு கேரள மாநில அரசு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் கேரளா சிக்கியுள்ள நிலையில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுக்கு புதிய வாகனங்களை வாங்குவதற்கு, சுமார் 67 லட்ச ரூபாய் செலவிடப்படவுள்ளது. இது மிகவும் அதிகமான தொகை என்பதால், கேரள அரசின் முடிவு அம்மாநிலத்தில் சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது.
இத்தனைக்கும் நடப்பாண்டு இறுதி வரை வாகனங்களை வாங்குவதற்கு தடை உள்ளது. இருந்தாலும் கேரள அரசு அதனை பொருட்படுத்தாமல், புதிய வாகனங்களை வாங்குவதற்கு நிர்வாக ரீதியிலான ஒப்புதலை வழங்கியுள்ளது. இதன்படி 2 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, 4 மஹிந்திரா பொலிரோ கார்களை வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனுடன் 10 ஹோண்டா ஷைன் பைக்குகளை வாங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையின் 18 வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாவும், இதன் காரணமாக விசாரணை பாதிக்கப்படுவதாகவும், அந்த துறையின் இயக்குனர் அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதன் அடிப்படையில்தான் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 வைரஸ் பிரச்னையால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், என்னென்ன சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? என கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி விரிவான உத்தரவு ஒன்றை நிதித்துறை வெளியிட்டிருந்தது. ''அரசு கட்டிடங்களை அலங்கரித்தல், ஃபர்னிச்சர், வாகனங்களை வாங்குதல் ஆகியவற்றுக்கு அடுத்த ஓராண்டுக்கு அனுமதி வழங்கப்படாது'' என அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் சில சமயங்களில் இந்த உத்தரவு மீறப்படுகிறது. குறிப்பாக வாகனங்களை வாங்கும் விஷயத்தில் இந்த உத்தரவு அவ்வப்போது மீறப்படுகிறது. இதற்கு முன்பாக நடப்பாண்டு மார்ச் மாதம் கூட காவல் துறைக்கு 293 வாகனங்களை வாங்குவதற்கு அரசு அனுமதி வழங்கியது. அதை தொடர்ந்து தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் சிலர் கூறுகையில், ''சாதாரண கார்கள் மற்றும் பைக் ஆகியவை வழக்கமாக விசாரணையின்போது அதிகாரிகளால் பயன்படுத்தப்படுபவைதான். ஆனால் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா உயர் அதிகாரிகள் மிகவும் சௌகரியமாக பயணிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் பாதிக்கும் மேற்பட்ட தொகை, 2 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களை வாங்குவதற்காக மட்டும் செலவிடப்படவுள்ளது'' என்றனர். கேரளாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், இந்த விவகாரம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!