Just In
- 24 min ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 46 min ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- 2 hrs ago தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- 5 hrs ago இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
Don't Miss!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- News வெறுப்பு பிரச்சாரத்திற்கு சட்டத்தில் என்ன தண்டனை? தேர்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Movies தனுஷ் - ஐஸ்வர்யா டைவர்ஸ் விஷயம்.. சிம்புவ ஏன் இதுல இழுக்குறீங்க.. போட்டுத்தாக்கிய பிரபலம்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உலக கோப்பை கால்பந்து தொடரில் இந்தியாவுக்கு முதல் முறையாக வாய்ப்பு! கியாவுக்கு சுனில் சேத்ரி நன்றி!
பிபா அமைப்பின் பார்ட்னர் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உதவியால், நாளை மறுநாள் தொடங்கவுள்ள உலக கோப்பை கால்பந்து தொடரில், இந்தியாவுக்கு முதல் முறையாக அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பிபா அமைப்பின் பார்ட்னர் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உதவியால், நாளை மறுநாள் தொடங்கவுள்ள உலக கோப்பை கால்பந்து தொடரில், இந்தியாவுக்கு முதல் முறையாக அங்கீகாரம் கிடைத்துள்ளது. மெஸ்ஸி, ரொனால்டோ போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து, இந்திய சிறுவர், சிறுமிகள் மைதானத்தில் வீரநடை போடவுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.
கால்பந்து ஜூரம்
உலகம் முழுவதும் கால்பந்து ஜூரம் தொற்றிக்கொண்டுள்ளது. ஆம், உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் தொடங்க இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளது.
பிபா உலக கோப்பை கால்பந்து தொடர், ரஷ்யாவில் நாளை மறுநாள் கோலாகலமாக தொடங்குகிறது. உலக கோப்பை தொடரில், ஒவ்வொரு போட்டி தொடங்கும் முன்பும், அந்த போட்டிக்கான அதிகாரப்பூர்வ கால்பந்தை, சிறுவர்கள் மைதானத்திற்குள் எடுத்து வரும் நடைமுறை உள்ளது.
அவர்களுக்கு ஆபீஸியல் மேட்ச் பால் கேரியர்ஸ் (OMBC) என்று பெயர். இந்த OMBC-களை தேர்வு செய்வதற்கான போட்டி, இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராமில் கடந்த மாதம் நடைபெற்றது.
பிபா பார்ட்னர் கியா
தென் கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம்தான், OMBC தேர்வு போட்டியை நடத்தியது. பிபா அமைப்பின் அதிகாரப்பூர்வ ஆட்டோமோட்டிவ் பார்ட்னராக இருப்பது கியா மோட்டார்ஸ் நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
OMBC தேர்வு போட்டியில், 10-14 வயதுடைய இந்திய கால்பந்து வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி கலந்து கொண்டு, சிறுவர், சிறுமிகளை தேர்வு செய்தார். மொத்தமாக கலந்து கொண்ட 1,600 பேரில், 50 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வு பெற்றனர்.
இந்த 50 பேரில் இருந்து 2 பேர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒரு சிறுமி தமிழகத்தை சேர்ந்த நாதனியா ஜான் (வயது 11). மற்றொரு சிறுவன் கர்நாடகாவை சேர்ந்த ரிஷி தேஜ் (வயது 10). இவர்கள் இருவரையும் கியா மோட்டார்ஸ் நிறுவனம், ரஷ்யா அழைத்து செல்கிறது.
போட்டி தொடங்கும் முன்பாக அதிகாரப்பூர்வ கால்பந்தை, அவர்கள் இருவரும் கையில் ஏந்தி கொண்டு, உலகின் தலை சிறந்த வீரர்களுடன் இணைந்து மைதானத்திற்குள் வருவார்கள். இந்திய கால்பந்து வீரர்களுக்கு இத்தகைய அங்கீகாரம் கிடைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
6 பேருக்கு வாய்ப்பு
முன்னதாக OMBC தேர்வு போட்டியில் ரன்னர்களாக வந்த 4 சிறுவர்களையும், கியா மோட்டார்ஸ் நிறுவனம் ரஷ்யாவுக்கு அழைத்து செல்கிறது. ஆனால் அவர்கள் 4 பேரும் போட்டிகளை காண மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
ஆக மொத்தம் இந்தியாவில் இருந்து 6 சிறுவர், சிறுமிகளை கியா மோட்டார்ஸ் நிறுவனம், ரஷ்யாவுக்கு அழைத்து செல்கிறது. ஒவ்வொரு சிறுவர்களுடனும் அவர்களது பெற்றோர் அல்லது கார்டியன் யாரேனும் ஒருவர் உடன் வர அனுமதிக்கப்படுவர். மொத்த செலவும் கியா மோட்டார் நிறுவனத்தினுடையதுதான்.
நன்றி கியா!
கால்பந்து உலகில் கோலேச்சும் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி, போர்ச்சுக்கல்லின் கிறிஸ்டியானா ரொனால்டோ போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களை சந்திக்கும் வாய்ப்பு, இந்த 6 சிறுவர், சிறுமிகளுக்கும் கிடைத்துள்ளது. இந்த அனுபவம் அவர்களின் எதிர்கால கால்பந்து வாழ்க்கைக்கு உதவி செய்யும்.
இந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்கியதற்காக, இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, கியா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். OMBC தேர்வு போட்டியில், இந்தியாவில் கால்பந்து விளையாட்டை நேசிக்கும் அவ்வளவு சிறுவர்களை ஒன்றாக சந்தித்தது மகிழ்ச்சியளித்தாகவும் அவர் கூறியுள்ளார்.
நீலகிரி சிறுமி
தமிழகத்தில் இருந்து தேர்வாகியுள்ள சிறுமி நாதனியா ஜான், நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பிறந்தவர். தற்போது 7ம் வகுப்பு படித்து வருகிறார். கால்பந்து விளையாட்டில் அவருக்கு இருந்த திறன்களை கண்டு, சுனில் சேத்ரியே வியப்படைந்தார்.
மற்றொரு சிறுவன் ரிஷி தேஜ், பெங்களூருவில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். விளையாட்டில் மட்டுமல்ல, படிப்பிலும் ஸ்கூல் டாப்பர் ரிஷி தேஜ்தான். OMBCஆக தேர்வு செய்து பெருமிதப்படுத்தியதற்காக, கியா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ரிஷி தேஜ் நன்றி தெரிவித்து கொண்டுள்ளார்.
பிபா உலக கோப்பை தொடருக்காக, பல்வேறு நாடுகளை சேர்ந்த மொத்தம் 64 OMBC-க்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், இருவர் மட்டுமே இந்தியாவை சேர்ந்தவர்கள். அதுவும் இந்த அங்கீகாரம் இந்தியாவுக்கு கிடைப்பது இதுவே முதல் முறை.
பிபா மட்டும் அல்ல, கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன், NBA கூடைப்பந்து லீக் உள்ளிட்ட போட்டிகளிலும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் பார்ட்னராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
-
மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
-
இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
-
பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்