Just In
- 1 hr ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 1 hr ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 2 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 2 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பஸ் டிரைவர்கள் மட்டுமே விபத்துக்கு காரணமா? அரசு வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்தால் உண்மை புரியும்..
பஸ் டிரைவரின் பிளைண்ட் ஸ்பாட் பகுதியை இரு சக்கர வாகன ஓட்டிகள் புரிந்து கொள்ளாததால், அதிகப்படியான விபத்துக்கள் ஏற்படுகிறது.
பஸ் டிரைவரின் பிளைண்ட் ஸ்பாட் பகுதியை இரு சக்கர வாகன ஓட்டிகள் புரிந்து கொள்ளாததால், அதிகப்படியான விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே வீடியோ ஒன்றை வெளியிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பஸ் தொடர்பான விபத்துக்களில் அதிகம் பாதிக்கப்படுவது பாதசாரிகளும், இரு சக்கர வாகன ஓட்டிகளும்தான். குறிப்பாக பஸ்களை ஒட்டியே பயணித்து வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அதிக எண்ணிக்கையிலான விபத்துக்களில் சிக்கி கொள்கின்றனர்.
இதற்கு பஸ்ஸை டிரைவர்கள் கவனமாக ஓட்டாததுதான் காரணம் என எளிதாக சொல்லி விடுகிறோம். ஆனால் அப்படி நடைபெறும் விபத்துக்களுக்கு டிரைவர்களை மட்டுமே குறை கூறி விட முடியாது. ஏனெனில் அனைத்து சமயங்களிலும் பஸ் டிரைவர்கள் தவறு செய்வது கிடையாது.
பஸ் டிரைவரின் பிளைண்ட் ஸ்பாட் பகுதியில், இரு சக்கர வாகன ஓட்டிகள் பயணிப்பதாலும் கூட சில சமயங்களில் விபத்துக்கள் ஏற்பட நேரிடுகிறது. டிரைவரின் கண்ணுக்கு தெரியாத பகுதிகள்தான் பிளைண்ட் ஸ்பாட் என அழைக்கப்படுகின்றன.
அதாவது ரியர் வியூ மிரர் மற்றும் சைடு வியூ மிரர் ஆகியவற்றின் மூலமும் டிரைவரால் பார்க்க முடியாத பகுதிகள்தான் பிளைண்ட் ஸ்பாட் எனப்படுகின்றன. இந்த பகுதிகளில் ஏதேனும் வாகனங்கள் வருகிறதா? என்பதை பஸ் டிரைவர்கள் திரும்பி பார்த்தால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.
எனவே பஸ் டிரைவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து, இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு புரிய வைப்பதற்கான முயற்சிகளை கர்நாடக மாநில அரசு எடுத்துள்ளது. இந்த விழிப்புணர்வுக்காக, கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம் (KSRTC) உருவாக்கியுள்ள வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் வரும் வாகனங்களால், பஸ் டிரைவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து தெரிந்து கொள்வதற்காக, 2 இளம் இரு சக்கர வாகன ஓட்டிகள் மூலம் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. ரியர் வியூ மிரரில் அவர்கள் பார்க்கும்போது, பஸ்ஸின் பின்னால் எந்த வாகனமும் தெரியவில்லை.
ஆனால் உண்மையில் ஒரு சில இரு சக்கர வாகன ஓட்டிகள் பஸ்சுக்கு அருகே இருந்தனர். எனினும் ரியர் வியூ மிரர் மூலம், அந்த 2 இளம் இரு சக்கர வாகன ஓட்டிகளால் அதனை பார்க்க முடியவில்லை. பஸ்ஸை விட்டு இறங்கிய பிறகு, அங்கு சில இரு சக்கர வாகன ஓட்டிகள் இருப்பது அவர்களுக்கு தெரியவருகிறது.
பஸ்சுக்கு மிகவும் நெருக்கமாக பயணிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளால், பஸ் டிரைவர்கள் தினம் தினம் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். பஸ்ஸை ஓட்டி மிகவும் நெருக்கமாக பயணிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளால், விபத்துக்களும் ஏற்பட நேரிடுகிறது.
பஸ் மிக நீளமாக இருப்பதாலும், ரியர் வியூ மிரர்கள் சிறியதாக இருப்பதாலும், பஸ்சுக்கு மிகவும் நெருக்கமாக பயணிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளை சில சமயங்களில் டிரைவர்களால் கவனிக்க முடியாமல் போய் விடுகிறது.
இதுதவிர சில இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியவும் தவறி விடுகின்றனர். அத்துடன் வேகம், தொலைவு ஆகியவற்றை கணக்கிடாமல் பஸ்களை ஓவர் டேக் செய்ய முயலும் இரு சக்கர வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயம் உள்ளது.
எனவே பஸ் டிரைவர்களின் பிளைண்ட் ஸ்பாட் பகுதியை புரிந்து கொண்டு, குறிப்பிட்ட இடைவெளியை கடைபிடித்து இரு சக்கர வாகனங்களை ஓட்டினால், தேவையில்லாமல் நிகழும் விபத்துக்களை தவிர்க்கலாம். இதுபோன்ற முயற்சிகளின் காரணமாக விபத்துக்களை குறைக்க முடியும் என KSRTC நம்புகிறது.
அத்துடன் இந்த தகவலை அனைவருக்கும் பகிர வேண்டும் எனவும் KSRTC கேட்டு கொண்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்தால், விபத்துக்களுக்கு பஸ் டிரைவர்கள் மட்டுமே காரணம் இல்லை என்பது அனைவருக்கும் புரிய வருவதுடன், விழிப்புணர்வும் ஏற்படும்.
இத்துடன் நின்று விடாமல் பஸ்களை எப்படி பாதுகாப்பாக இயக்க வேண்டும்? என தங்களின் டிரைவர்களுக்கும் KSRTC விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!