உங்கள் காரில் ஹேண்ட் பிரேக் போடவில்லை என்றால் இப்படியும் நடக்கலாம்...
வீட்டு வாசலில் காரை ஹேண்ட் பிரேக் போடாததால் அந்த கார் தானாக ரோட்டில் குறுக்கும் நெடுக்குமாக சென்றது அதிஷ்டவசமாக ரோட்டில் கூட்டம் இல்லாததால் விபத்துக்கள் நிகழவில்லை.
வீட்டு வாசலில் காரை ஹேண்ட் பிரேக் போடாததால் அந்த கார் தானாக ரோட்டில் குறுக்கும் நெடுக்குமாக சென்றது அதிஷ்டவசமாக ரோட்டில் கூட்டம் இல்லாததால் விபத்துக்கள் நிகழவில்லை. இந்த சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

சமீபத்தில் கேராளாவில் தன் வீட்டின் முன் மாருதி வேகன் ஆர் புதிய காரை அதன் உரிமையாளர் நிறுத்தி சென்றார். அவர் செல்லும் போது காரின் ஹேண்ட் பிரேக்கை போட மறந்துவிட்டார்.

எதிர்பாராத விதமாக இறக்கத்தில் நின்ற கார் தானா பின் நோக்கி சென்றது. அதிஷ்டவசமாக ரோட்டில் யாரும் இல்லாததால் கார் ரோட்டை தாண்டி மறுபக்கம் சென்றது.

ஆனால் அங்கும் ரோடு ஏற்றமான பகுதியாக இருந்ததால் அதில் ஏறிய கார் மீண்டும் ரோட்டிற்கே வந்து உரிமையாளரின் வீட்டிகுள் ஏறியது. இவ்வாறாக சில முறை ரோட்டில் குறுக்கும் நெடுக்குமாக கார் சென்று கொண்டிருந்தது.

ரோட்டில் அவ்வப்போது வாகனங்கள் சென்று வந்தாலும் இந்த கார் முன்னும் பின்னும் செல்லும் போது யாரும் வராததால் அதிஷ்டவசமாக கார் விபத்தில் இருந்து தப்பியது.

இதை கண்ட அப்பகுதியில் இருந்த மக்கள் கூச்சலிட்டு காரின் உரிமையாளரை அழைத்தனர். அவர் வந்து பின் கார நிறுத்தினார். இதனால் அப்பகுதியில் சிறுது பரபரப்பு ஏற்பட்டது. இந்த காட்சிகள் அனைத்தும் காரின் உரிமையாளர் வீட்டில் இருந்த சி.சி.டி.வி., கேமராகவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோவை கீழே காணுங்கள்.
தற்போது சமூகவலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோ பலரை காரின் ஹேண்ட் பிரேக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் ராங் சைடில் லாரி வந்த லாரியால் மயிரிழையில் பைக் ஓட்டுநர் உயிர்தப்பிய வீடியோவை நீங்கள் பாத்திருப்பீர்கள். பார்க்க வில்லை என்றாலும் கீழே பார்த்து கொள்ளலாம்.
இந்த சம்பவம் இணையதளங்களில் வைரலாக பரவியும் இந்த டிரக்கை ஓட்டிய டிரைவரை கண்டுபிடித்து இது வரை நடவடிக்கை எடுக்கப்பவில்லை. இன்னும் இந்த டிரைவர் இந்தியாவில் வாகனம் ஓட்டிதான் வருகிறார்.

உலகிலேயே அதிக அளவு சாலை விதிகளில் விதிமீறல்கள் நடப்பது இந்தியாவில் தான். போக்குவரத்திற்கான கட்டுமானத்தை அரசு மேம்படுத்தி வரும் நிலையில் விதிமீறலுக்கான தண்டனைகளையும் அரசு கடுமையாக்கப்பட வேண்டும்.

சாலை விதிகளை மீறும் வாகனங்களுக்கு அதிகமான பணத்தை அபராதமாக விதிப்பது, ஜெயில் தண்டனை உள்ளிட்டவை விதிமீறல்களை குறைக்கும். பல நாடுகளில் சாலை விதிகளை பாதுகாப்பதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் போல் இந்தியாவிலும் அளிக்கப்படவேண்டும்.

சமீபத்தில் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு சாலை விபத்தால் மரணம் ஏற்பட்டால் விபத்தை நிகழ்த்தியவருக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இது வரவேற்க்கதக்க நடவடிக்கை தான்.

எனினும் இந்த அறிவிப்பில் விபத்தை நிகழ்த்தியவர்களுக்கான தண்டனை குறித்த விபரங்கள் தெளிவாக இல்லை தண்டனையை உயர்த்த வேண்டும் என்றே உள்ளது. என்ன தண்டனை என்ற தெளிவான வரைமுறை தான் இந்த எதிர்காலத்தில் விபத்துக்களை குறைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:


Click it and Unblock the Notifications