சொந்த வாகனங்கள் வைத்திருப்போர் படிக்க வேண்டிய முக்கிய செய்தி இதுதான்..!!
சொந்த வாகனங்கள் வைத்திருப்போர் படிக்க வேண்டிய முக்கிய செய்தி இதுதான்..!!
வாகனங்கள் வாங்க விற்க சிறந்த நாடாக இந்தியா இருக்கிறது. இதனால் பல்வேறு நிறுவனங்கள் இந்திய சந்தையில் காலூன்ற முயன்று வருகின்றன.

வாகன சந்தைக்கான சிறந்த நாடாக இந்தியா இருந்தாலும், இங்குள்ள பல முக்கிய நகரங்களில் போக்குவரத்து தலையாய பிரச்சனையாக இருந்து வருகின்றன.

குறிப்பாக கர்நாடக தலைநகரான பெங்களூரு வாகனங்களால் பெரிய நெருக்கடியை தினமும் சந்தித்து வருகிறது.

பல்வேறு முக்கியமான அம்சங்கள் பெங்களூரு டிராஃபிக்கை குறைக்க முடுக்கிவிட்டப்பட்டாலும், தீர்வு இன்னும் கிடைக்கவில்லை.

அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுபாட்டிற்குள் கொண்டு வர மாநில போக்குவரத்து அமைச்சர் ஹெச்.எம் ராவணா புதிய ஆணையை பிறப்பித்துள்ளார்.

அதன்படி, ஒவ்வொரு மாதத்தின் 2ம் ஞாயிற்று கிழமைகளில் பொதுமக்கள் தங்களது சொந்த வாகனங்களை விடுத்து வாடகை கார்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் பொது பேருந்துகளை பயன்படுத்த கூறியுள்ளார்.

மேலும் ஒவ்வொரு மாதத்தின் 2ம் ஞாயிற்று கிழமைகளில் கர்நாடக மாநில அரசு, டிராஃபிக் இல்லா நாளை கடைபிடிக்கவும் முடிவு செய்துள்ளது.

வாகனப் புகை மாசு ஏற்படுவதை தவிர்க்கவும் மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்காமல் இருக்கவும், டிராஃபிக் லெஸ் டே பற்றி பெங்களூருவின் அனைத்து பகுதி மக்களுக்கும் சென்று சேரும் விதத்தில் பிரச்சாரம் செய்யப்படவுள்ளது.

பிஎம்டிசி போக்குவரத்தை அனைவரும் பயன்படுத்த வேண்டி பெங்களூருவில் ஏற்கனவே பஸ் டே என்ற ஒரு நாள் பின்பற்றப்பட்டு வருகிறது.

பெங்களூரு நகரில் 64.36 லட்சம் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் 49.42 லட்சம் இருசக்கர வாகனங்கள் உள்ளன, மற்றும் 71 லட்சம் கார்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களிலும் போக்குவரத்து அதிகரித்து வருகிறது.
அதிலும் சென்னையில் மெட்ரோ, மின்சார ரயில், பறக்கும் ரயில் என பல்வேறு போக்குவரத்து வசதிகள் இருந்தும் பயனில்லை.

அதன் காரணமாக பெங்களூருவின் செயல்பாடுகளை பின்பற்றி, நெருக்கடி நிலை எற்படுவதற்கு முன் நாமும் வாகன பயன்பாட்டில் சில கட்டுபாடுகளை கொண்டு வருவது சற்று உசிதமாக இருக்கும்


Click it and Unblock the Notifications








