ஹெல்மெட் அணியாத காரணத்தால் வாகன ஓட்டியை உயிரிழக்கும் வரை தாக்கிய சாலை கண்காணிப்பு ஊழியர்கள்..!!

ஹெல்மெட் அணியாத காரணத்தால் வாகன ஓட்டியை உயிரழக்கும் வரை தாக்கிய சாலை கண்காணிப்பு ஊழியர்கள்..!!

By Azhagar

சாலை பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு போக்குவரத்து விதிகள் அமல்படுத்தப்பட்டு, அவை நடைமுறையில் உள்ளன.

சாலை கண்காணிப்பு ஊழியர்கள் தாக்கியதால் உயிரழந்த வாகன ஓட்டி..!!

பைக்கில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதும், கார்களில் செல்பவர்கள் சீட் பெல்டு அணிந்து பயணிப்பதும் கட்டாயமான விதிகளாக உள்ளன.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த விதிகளை பின்பற்றியே ஆகவேண்டும் என்பது கடுமையாகப்பட்டுள்ள சூழ்நிலை.

சாலை கண்காணிப்பு ஊழியர்கள் தாக்கியதால் உயிரழந்த வாகன ஓட்டி..!!

விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், அவற்றை முறையாக பின்பற்றுவோருக்கு இணையாக விதிகளை மீறுவோரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Recommended Video

Andhra Pradesh State Transport Bus Crashes Into Bike Showroom - DriveSpark
சாலை கண்காணிப்பு ஊழியர்கள் தாக்கியதால் உயிரழந்த வாகன ஓட்டி..!!

இதை கண்காணிக்க அரசு பணி காவலர்கள் இருந்தாலும், கூடுதல் பணிக்காக சில மாநில காவல்துறையினர் தன்னார்வ ஊழியர்களை நியமித்துள்ளார்கள்.

சாலை கண்காணிப்பு ஊழியர்கள் தாக்கியதால் உயிரழந்த வாகன ஓட்டி..!!

அவ்வாறு கொல்கத்தா நகரை சேர்ந்த சௌமன் தேவ்நாத் என்பவர் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரில் வந்தத்திற்காக அவர் மீது தன்னார்வ சாலை கண்காணிப்பு ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Trending On DriveSpark Tamil:

சாலை கண்காணிப்பு ஊழியர்கள் தாக்கியதால் உயிரழந்த வாகன ஓட்டி..!!

கொல்கத்தா நகர காவல்துறையினரால் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட இந்த ஊழியர்கள், சௌமன் தேவ்நாத் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டிய காரணத்தினால் அபராதம் விதித்துள்ளனர்.

சாலை கண்காணிப்பு ஊழியர்கள் தாக்கியதால் உயிரழந்த வாகன ஓட்டி..!!

சௌமன் அபராதத் தொகையை செலுத்த மறுக்க, அத்திரமடைந்த அந்த தன்னார்வ ஊழியர்கள், அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சௌமனை அவர்கள் கெட்ட வார்த்தைகளாலும் திட்டியதாக கூறப்படுகிறது.

சாலை கண்காணிப்பு ஊழியர்கள் தாக்கியதால் உயிரழந்த வாகன ஓட்டி..!!

சௌமனின் கன்னத்தில் அறைந்து, அந்த ஊழியர்கள் அவரை வண்டியில் இருந்து கீழே இழுத்து விழச்செய்து காலால் அடித்து உதைத்துள்ளனர்.

இந்த தாக்குதலில் அதிக இரத்தம் வெளியேறி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சௌமன் தேவ்நாத் உயிரிழந்தார்.

சாலை கண்காணிப்பு ஊழியர்கள் தாக்கியதால் உயிரழந்த வாகன ஓட்டி..!!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கொல்கத்தாவின் காவல் கண்காணிப்பாளர் சி, சுதாகர் சௌமன் இறப்பு குறித்த விசாரணையை பிரேத பரிசோதனை மூலம் உறுதி செய்தார்.

சாலை கண்காணிப்பு ஊழியர்கள் தாக்கியதால் உயிரழந்த வாகன ஓட்டி..!!

மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தன்னார்வ ஊழியர்களில் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இந்திய தண்டனை சட்டப்படி பிரிவு 302 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாலை கண்காணிப்பு ஊழியர்கள் தாக்கியதால் உயிரழந்த வாகன ஓட்டி..!!

சௌமன் தேவ்நாத் உயிரிழந்த பிறகு கொல்கத்தா வாகன ஓட்டிகள் பலர் தாக்குதலில் ஈடுபட்ட தன்னார்வ ஊழியர்களை விரட்டி சென்று கல்லால் அடித்ததாக கூறப்படுகிறது.

சாலை கண்காணிப்பு ஊழியர்கள் தாக்கியதால் உயிரழந்த வாகன ஓட்டி..!!

மேற்கு வங்க மாநிலம் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில், அம்மாநிலத்தை சேர்ந்த போக்குவரத்து காவல்துறை பல்வேறு சாலை போக்குவரத்து விதிகளை அமல்படுத்தி நடைமுறைப்படுத்தியுள்ளது.

Trending On DriveSpark Tamil:

சாலை கண்காணிப்பு ஊழியர்கள் தாக்கியதால் உயிரழந்த வாகன ஓட்டி..!!

ஆனால் அதை சட்டத்தை தெரிந்தவர்கள் கையில் கொடுக்காமல், தகுதியற்ற நபர்களின் கொடுத்து மேற்கு வங்க காவல்துறை சங்கடத்தை தேடிக்கொண்டதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 23, 2018, 15:25 [IST]
English summary
Read in Tamil: Local Police Volunteers Beat Scooter Rider to Death for Not Wearing Helmet. Click for Details...
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+