விநியாகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆட்டோமொபைல் பிள்ளையாரை உருவாக்கிய ஃபோர்டு நிறுவனம்..!!
விநியாகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆட்டோமொபைல் பிள்ளையாரை உருவாக்கிய ஃபோர்டு நிறுவனம்..!!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஐந்துகரத்தினை யாணை முகத்தானுக்கு ஃபோர்டு நிறுவனம் புதிய முறையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.

அனைவரும் விரும்பும் விநாயகப் பெருமான் அவதரித்த நாளை விநாயகர் சதுரித்த நாளாக கொண்டாடுவது ஆண்டாண்டு காலம் இருக்கும் மரபு.

அதற்காக பிள்ளையார் சிலை வாங்கி வீட்டில் வைத்து பூஜை நடத்தி, விநாயகர் சதுர்த்தி முடிந்து மூன்று நாட்கள் வைத்திருந்தது பின்னர் சிலையை ஆறு அல்லது கடலில் கறைப்பது வழக்கம்.

சிலையாக வடிவமைத்து அதை நிறுவி அல்லது பிரதிஷ்டை செய்து வழிப்பாடு நடத்துவது தான் விநாயகர் சதுரித்தியின் சிறப்பு. அதனால்,
வீடு என்றில்லாமல், மக்கள் கூடும் பொது இடங்களிலும் கையளவு முதல் மலையளவு வரை பல்வேறு விநாயகரை சிலையாக வடித்து பிரதிஷ்டை செய்து வழிப்பாடு நடக்கும்.

அனைத்து தரப்பு மக்களின் கடவுள் பார்க்கப்படும் விநாயகரின் உருவச் சிலை பழங்காலம் தொட்டு நிகழ்காலம் வரை பல்வேறு விதங்களாக பல கதாபாத்திரங்களோடு தொடர்புடன் வடிவமைக்கப்படும்.

இதை பின்பற்றி பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, வாகனங்களின் உதிரிபாகங்களை கொண்டு விநாயகரை சிலையை வடிவமைத்து, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியுள்ளது.

சுமார் 6.5 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆட்டோமொபைல் பிள்ளையாரை ஃபோர்டு நிறுவனத்தின் விற்பனை பிரவு பொது மேலாளர் சௌரவப் மஹிஜா திறந்து வைத்தார்.

ஃபோர்டு தயாரிக்கும் கார்களில் பயன்படுத்தப்படும் அனைத்து உதிரி பாகங்களும் அசலானவை என்றும் எதுவும் போலியானவை அல்ல என்பதை

உணர்த்துவதற்காக மாதிவி பிட்டி என்ற சிற்ப கலைஞர் ஃபோர்டுக்கான இந்த பிரத்யேக பிள்ளையாரை வரைந்து கொடுத்துள்ளார்.

அந்த ஓவியத்தை பிராதனமாக வைத்து, இரும்புகளை கொண்டு கலைப்பொருட்கள் செய்வதில் இந்தியளவில் பிரபலமான நிஷாந்த் மஹிஜா என்பவர் ஃபோர்டின் ஆட்டோமொபைல் பிள்ளையாரை வடிவமைத்துள்ளார்.

விநாயகர் சிலையை திறந்து வைத்து பேசிய மேலாளர் சௌரவப் மஹிஜா, "ஒரு சிறந்த நிறுவனம் என்று பெயர் பெறுவது தான் ஃபோர்டு நிறுவனத்திற்கு முக்கியம்.

"தரமான உதிரிபாகங்களை கொண்டு தான் ஃபோர்டு நிறுவனம் கார்களை தயாரிக்கிறது. அதை நான் உறுதியாக கூறுகிறேன். தரமான பொருட்கள் என்றில்லாமல்"

"அது நேரடியாக உங்கள் கைகளுக்கு கிடைக்கும் வசதியும் கிடைக்கிறது. அது போன்ற சர்வீஸை வழங்குவது தான் ஃபோர்டு நிறுவனத்தின் முழு கவனம்" என்றா அவர்.

வெறும் தன்னளவிற்கு மட்டுமில்லாமல், பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளில் தரமற்ற உதிரிபாகங்களை இருப்பதை என்றும் அனுமதிக்ககூடாது என்றும் ஃபோர்டு வலியுறுத்துகிறது.

ஆட்டோமொபைல் பிள்ளையாரை 12 கேமிராக்கள் கொண்டு மக்கள் பார்வைக்காக ஃபோர்டு நிறுவனம் அறிமுகம் செய்துவைத்தது.
மேலும், 180-டிகிரி தொழில்நுட்பத்திலும் ஆட்டோமொபைல் பிள்ளையாரை புகைப்படம் எடுக்க ஃபோர்டு பார்வையாளர்களை அனுமதித்தது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் இந்த ஸ்பேர்பார்ட்ஸ் விநாயகருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டர்.

இணையதளத்தில் #SelfieWithFordGanesha என்ற ஹேஷ்டேக்கின் கீழ் பதிவிட்டு, ஆட்டோமொபைல் விநாயகரை சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்படுத்தினார்கள் ரசிகர்கள்.

இந்த பிள்ளையாரை வடிவமைத்த மாதவி பிட்டி பேசும்போது, சுற்றுச்சூழல் மற்றும் மாசு ஏற்படுத்தாத பொருட்களில் இருந்து விநாயகரை உருவாக்குவதற்கான துணை பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

தெருக்கள்,தொழிற்சாலைகள், வீடுகள் போன்ற இடங்களில் பயன்படுத்தாமல் இருந்த இரும்பு சாமன்களை சேகரித்து விநாயகர் சிலையை உருவாக்குவதற்கான உதிரிபாகங்கள் சேகரிக்கப்பட்டதாக மாதிவி பிட்டி தெரிவிக்கிறார்.


Click it and Unblock the Notifications








