Just In
- 9 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 20 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 1 hr ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 2 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Movies அந்த பயம் தான் காரணமா?.. அமரன் முதல் கங்குவா வரை.. ரிலீஸ் தேதியை முடிவு பண்ண முடியலையே!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
உள்நாட்டிலேய தயாரிக்கப்படும் இந்தியாவின் முதல் அதிவேக ரயில்!
மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் அதிவேக ரயிலுக்கான பெட்டிகள் சென்னையிலுள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட இருக்கின்றன.
மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் அதிவேக ரயிலுக்கான பெட்டிகள் சென்னையிலுள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட இருக்கின்றன. இந்த ரயில் பெட்டிகள் மேலை நாடுகளுக்கு இணையான தரத்தில் இருககும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது ஐரோப்பிய ரயில் பெட்டி தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து உரிமம் பெற்று அதிவேக ரயில் பெட்டிகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ரயில் பெட்டிகள் சதாப்தி, ராஜ்தானி மற்றும் அதிவிரைவு ரயில்களில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில், அதிவேக ரயில் பெட்டிகளை சொந்த தொழில்நுட்பத்தில் தயாரிக்க இருக்கிறது இந்திய ரயில்வேத் துறை. இந்த அதிவேக ரயில் பெட்டிகள், மேலை நாடுகளுக்கு இணையான தரத்துடன் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.
இந்த அதிவேக ரயில் பெட்டிகள் சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில்தான் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த ரயில் பெட்டிகள் மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.
இந்த ரயில் பெட்டிகள் ஒவ்வொன்றும் ரூ.6 கோடி மதிப்புடையது. ஐரோப்பிய நாட்டு நிறுவனங்களின் உரிமம் பெற்று இங்கு தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகளை இவை 40 சதவீதம் குறைவான விலை கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு ரயிலும் ரூ.100 கோடி மதிப்புடையதாக இருக்கும்.
அதேநேரத்தில், தரத்தில் எந்த வித்தியாசமும் இருக்காது. அலுமினிய பாடி பேனல்களுடன் இலகு எடை கொண்டதாக இந்த ரயில்கள் பெட்டிகள் தயாரிக்கப்படும்.
இந்த ரயில் பெட்டிகளின் மற்றொரு விசேஷம் மிக சிறப்பான இடவசதியை பெற்றிருக்கும். சேர் கார் வசதியுடன் வடிவமைக்கப்படும் இந்த ரயில் பெட்டிகளில் நெருக்கடி இல்லாத பயண அனுபவத்தை பெற இயலும். பயணிகளுக்கு தேவையான நவீன வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.
ஒவ்வொரு அதிவேக ரயிலும் 16 பெட்டிகள் கொண்டதாக உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. படிப்படியாக அனைத்து பிரிமியம் சதாப்தி ரயில்களிலும் இந்த நவீன ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.
இந்த ரயில் பெட்டிகள் கொண்ட அதிவேக ரயில்கள் அதிக பிக்கப் கொண்டதாகவும், அதிர்வுகள் இல்லாமல் மிக சொகுசானதாகவும் இருக்கும். வளைவுகளில் வேகத்தை குறைக்காமல் செல்வதற்கும் ஏதுவாக இருக்கும் என்பதால், பயண நேரம் வெகுவாக குறையும்.
அதிகபட்ச வேகத்தில் செல்லும்போது அலுங்கல் குலுங்கல் அதிகம் இல்லாமல் செல்லும் விதத்தில் மிக நவீன சஸ்பென்ஷன் மற்றும் ஆக்சில்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.
வரும் ஜூன் மாதம் இந்த அதிவேக ரயில் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. அப்போது, இந்தியாவின் அதிவேக ரயில் என்ற பெருமையை பெறும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!