Just In
- 2 hrs ago
ஒருபக்கம் விலை அதிகரிப்பு, மறுபக்கம் சலுகை!! மோட்டார்சைக்கிள் விற்பனையில் கவாஸாகியின் அடுத்தடுத்த அறிவிப்புகள்
- 3 hrs ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 5 hrs ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 15 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
Don't Miss!
- News
கேரளாவில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீப்பிடித்ததால் பரபரப்பு... பெரும் விபத்து தவிர்ப்பு!
- Finance
40% வரை ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி.. அமேசானின் சூப்பர் சலுகைகள்.. கவனிக்க வேண்டிய ஆஃபர் மழை..!
- Sports
எதிரணி வீரர்களை சீண்டறது கீழ்த்தரமானது.. இதுமூலமா நம்மோட பலவீனம்தான் வெளிப்படும்!
- Movies
திருமணம் செய்வதாக ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை.. பைலட் மீது டிவி நடிகை பரபரப்பு புகார்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டாடா, மஹிந்திராவால் நமக்கு கெத்து... 'மேட் இன் இந்தியா' கார்களை பயன்படுத்தும் வெளிநாட்டு ராணுவங்கள்
'மேட் இன் இந்தியா' கார்களை பயன்படுத்தும் வெளிநாட்டு ராணுவங்கள் மற்றும் காவல் படைகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்திய சந்தைக்காக பல்வேறு எஸ்யூவி ரக கார்களை உருவாக்கி இங்கே விற்பனை செய்து வருகின்றன. இந்த எஸ்யூவி கார்களை இந்தியாவின் ராணுவம் மற்றும் பாராமிலிட்டரி படைகளும் பயன்படுத்தி வருகின்றன. அதே சமயம் வெளிநாடுகளை சேர்ந்த ராணுவம் மற்றும் காவல் துறைகளும் 'மேட்-இன்-இந்தியா' எஸ்யூவிக்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றன.

அப்படி 'மேட் இன் இந்தியா' எஸ்யூவி கார்களை பயன்படுத்தும் வெளிநாடுகளின் ராணுவம் மற்றும் காவல் துறைகள் பற்றிதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். 'மேட் இன் இந்தியா' கார்கள் வெளிநாடுகளில் பயன்படுத்தப்படுவது, அதுவும் ராணுவம், காவல் துறையால் பயன்படுத்தப்படுவது நமக்கு பெருமை அளிக்கக்கூடிய ஒரு விஷயமே. வாருங்கள், இனி செய்திக்குள் செல்லலாம்.

டாடா ஹெக்ஸா - வங்கதேசம் (Tata Hexa - Bangladesh)
வங்கதேச ராணுவத்தின் அதிகாரப்பூர்வ வாகனமாக பயன்படுத்துவதற்கு ஹெக்ஸா எஸ்யூவி ரக கார்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வென்றது. ஒரு 'மேட் இன் இந்தியா' எஸ்யூவி வங்கதேச ராணுவத்தின் அதிகாரப்பூர்வ வாகனம் என்பதே இதன் அர்த்தமாகும். வங்கதேச ராணுவத்திடம் ஒப்புதல் பெறும் முன், ஹெக்ஸா மீது டாடா மிக கடுமையான சோதனைகளை செய்ய வேண்டியிருந்தது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 - தென் ஆப்ரிக்கா (Mahindra XUV500 - South Africa)
வெளிநாடுகளை சேர்ந்த காவல் படைகளின் மத்தியில் மஹிந்திரா ஸ்கார்பியோ மட்டும் மிகவும் பிரபலமான 'மேட் இன் இந்தியா' எஸ்யூவி கிடையாது. மஹிந்திரா எஸ்யூவி500 எஸ்யூவியும் பிரபலமாக இருந்து வருகிறது. குறிப்பாக தென் ஆப்ரிக்கா காவல் படையின் அதிகாரப்பூர்வ வாகனமாக மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி உள்ளது.

தென் ஆப்ரிக்கா காவல் படை பயன்படுத்துவது மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் டபிள்யூ8 வேரியண்ட் ஆகும். 4 வீல் டிரைவ் அமைப்பு இந்த காரில் இடம்பெற்றுள்ளது. இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ், டாடா ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட எஸ்யூவிகளுக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி கடும் போட்டியை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

டாடா சபாரி ஸ்ட்ரோம் -அல்ஜீரியா (Tata Safari Storme - Algeria)
அல்ஜீரிய காவல் படையின் முக்கியமான கார்களில் டாடா சபாரி ஸ்ட்ரோமும் ஒன்று. டாடா சபாரி ஸ்ட்ரோம் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதுடன், சௌகரியமான கேபினையும் பெற்றுள்ளது. அத்துடன் ஆஃப் ரோடு திறன்களிலும் தலைசிறந்து விளங்குகிறது. இவை அனைத்து மலிவான விலையில் கிடைப்பதுதான், டாடா சபாரி ஸ்ட்ரோமை அல்ஜீரியா காவல் படை தேர்ந்தெடுக்க காரணம்.

மஹிந்திரா ஸ்கார்பியோ - மாலத்தீவுகள் (Mahindra Scorpio - Maldives)
4 வீல் டிரைவ் அமைப்புடன் கூடிய மஹிந்திரா ஸ்கார்பியோ காரை மாலத்தீவுகள் காவல் படை பயன்படுத்தி வருகிறது. மாலத்தீவுகள் மட்டுமல்லாது, பிலிப்பைன்ஸ் நாட்டின் பாதுகாப்பு படையும் ஸ்கார்பியோ எஸ்யூவி கார்களை பயன்படுத்தி வருகிறது. பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு படை, 4 வீல் டிரைவ் அமைப்புடன் கூடிய 398 மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவிக்களை கடந்த 2016ம் ஆண்டு வாங்கியது.

மாலத்தீவுகள் மற்றும் பிலிப்பைன்ஸ் வரிசையில், இலங்கையுடன் மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவிக்களை பயன்படுத்தி வருகிறது. இலங்கையில் காவல் துறையினர் மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களை பயன்படுத்தி வருகின்றனர். சக்தி வாய்ந்த இன்ஜின், சௌகரியமான கேபின், திறன் வாய்ந்த 4 வீல் டிரைவ் அமைப்பு உள்ளிட்ட காரணங்களால், இந்தியாவிற்கு வெளியேயும் ஸ்கார்பியோ பிரபலமாக திகழ்கிறது.