Just In
- 1 hr ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 2 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 2 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 6 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கார் கதவை எஸ்ஐ தவறாக திறந்ததால் கீழே விழுந்த 2 பேர்... கேள்வி கேட்டவரை லத்தியால் தாக்கிய கொடூரம்
காவல் துறை உதவி ஆய்வாளர் ஒருவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, பைக்கில் வந்தவரை சரமாரியாக தாக்கும் அதிர்ச்சிகரமான காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சமூக வலை தளங்களில் சிறிய காணொளி ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இதில், காவல் துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் மஹிந்திரா பொலிரோ காரின் கதவை திறக்கிறார். திடீரென காரின் கதவு திறக்கப்பட்டதால், அவ்வழியாக ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில் வந்த இரண்டு பேர், கதவில் மோதி கீழே விழுகின்றனர்.
பொதுவாக கார் கதவுகளை திறக்கும்போது, முன்னும், பின்னும் ஒரு முறை பார்த்து கொள்வது நல்லது. இல்லாவிட்டால் அவ்வழியாக வருபவர்கள், காரின் கதவில் மோதி இப்படி கீழே விழுந்து அடிபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி பின்னால் யாராவது வருகிறார்களா? என்பதை பார்க்காமலேயே மஹிந்திரா பொலிரோ கார் கதவை திறந்ததாக கூறப்படுகிறது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!
இதனால்தான் பின்னால் பைக்கில் வந்த இரண்டு பேரும் தடுமாறி கீழே விழுந்தனர். ஆனால் பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த நபர் உடனடியாக எழுந்து விட்டார். எழுந்த உடனேயே காவல் துறை அதிகாரியிடம், பின்னால் பார்க்காமல் கதவை திறந்தது குறித்து அவர் தட்டிகேட்க சென்றார். அடுத்து என்ன நடந்தது? என்பதுதான் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது. பைக்கில் வந்த நபர் கேள்வி எழுப்பிய உடனேயே, மஹிந்திரா பொலிரோ காரின் பின்பக்க கதவை திறந்த காவல் துறை அதிகாரி, லத்தியை வெளியே எடுத்து, கேள்வி எழுப்பிய நபரை சரமாரியாக தாக்க தொடங்கி விட்டார்.
அந்த சமயத்தில் மற்றொரு காவல் துறை அதிகாரி அங்கே வருகிறார். பைக்கில் வந்த நபரை தாக்கி கொண்டிருந்த காவல் துறை அதிகாரியை அவர் சற்றே சமாதானம் செய்வது போல் தெரிகிறது. ஆனாலும் அவர் சமாதானம் அடைந்தது போல் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் வலி தாங்காமல், பைக்கில் வந்த நபர் கையெடுத்து கெஞ்ச ஆரம்பித்து விட்டார்.
பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. பைக்கில் வந்த நபரை தாக்கிய காவல் துறை அதிகாரி உதவி ஆய்வாளர் பதவியில் இருப்பதாகவும், தற்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? என்பதுடன் கார் கதவுகளை பாதுகாப்பாக திறப்பது எப்படி? என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். நாமும் அதனை தெரிந்து கொள்வது இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க உதவும். பொதுவாக வலது பக்க கதவை திறக்க வலது கையையும், இடது பக்க கதவை திறக்க இடது கையையும்தான் பலர் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இதற்கு பதிலாக வலது பக்க கதவை திறக்க இடது கையையும், இடது பக்க கதவை திறக்க வலது கையையும் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் தானாகவே திரும்பும். எனவே பின் பகுதியையோ அல்லது ஓஆர்விஎம்களையோ நீங்கள் கண்டிப்பாக பார்த்து விடுவீர்கள். அப்போது யாராவது பின்னால் வந்தால் உங்களுக்கு தெரிந்து விடும். இதனை விளக்கும் காணொளியை நீங்கள் கீழே காணலாம்.
இந்த எளிமையான யுக்தியின் மூலம் பல விபத்துக்கள் தவிர்க்கப்படும் என்பது உறுதி. அதுவும் இந்தியா போன்ற நாடுகளில் இதுபோன்ற யுக்திகளை தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். எனவே உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும், குழந்தைகளுக்கும், கார் கதவை பாதுகாப்பாக திறக்கும் இந்த எளிமையான யுக்தியை சொல்லி கொடுங்கள்.
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?